கொடிய நோய்களையும் நொடியில் தீர்த்தருளும் பழையசீவரம் நரசிம்மர்!

 🌹கொடிய நோய்களையும்நொடியில் தீர்த்தருளும்பழையசீவரம் நரசிம்மர்!🌹


தர்மநெறிகளுக்கு சோதனை ஏற்படும் காலங்களில் சர்வலோக சம்ஹாரம் செய்து நல்லவர்களைக் காப்பாற்றவும் “அவதாரம்” எடுக்கின்றார்.

எப்போதும் தன் திருநாமம் ஒன்றையே உச்சரித்துக்கொண்டு, தன் மீது ஈடு இணையில்லாத பக்தி கொண்டிருந்த பாலகன் பிரகலாதனைக் காப்பாற்றவும், துஷ்டனான இரண்யனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டவும் எம்பெருமான் “நரசிம்ம அவதாரம்" எடுத்தார்.

எம்பெருமான் எடுத்த பத்து அவதாரங்களிலும் தனிச்சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம், இறைவன் "சர்வாந்தர்யாமி" என்பதை உலகிற்கு உணர்த்திய அவதாரமும் இத்திருவடிவம்தான். “தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், உன்னுள்ளும் என்னுள்ளும் இருக்கின்றார்” என்ற தன் பக்தன் பிரகலாதனின் நம்பிக்கையைக் காப்பாற்றி உள்ளும், புறமும், எங்கும், எப்பொழுதும் நிறைந்திருக்கும் ஈடு இணையற்ற பரம்பொருள் "ஸ்ரீமந் நாராயணனே" உலகறியச் செய்த அவதாரம் ஸ்ரீ நரசிம்ம அவதாரம்.

துன்பப்படும் தன் பக்தர்களைக் காத்தருள்வதில் ஒரு விநாடி கூட தாமதிப்பதில்லை அந்த அழகிய சிங்கம்! இதனால்தான் "நாளை என்பதில்லை நரசிம்மனிடம்" என்றுநெஞ்சம் நெகிழ்ந்து இந்த அவதாரப் பெருமையைப் போற்றியுள்ளார் "ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன்.'



சீற்றம் தணிந்த எம்பெருமான்!

ஸ்ரீமந் நாராயணன் தன் பிராட்டி லக்ஷ்மி தேவியை க்ஷண நேரமும் பிரியாமல் தன் திருமார்பிலே தாங்கியிருப்பவர். இதனால் எம்பெருமானுக்கு “திருமகள் திருமார்பன்” என்ற திருநாமமும் உண்டு. ஸ்ரீமந் நாராயணன் என்ற திருநாமத்திலேயே லக்ஷ்மி பிரியாமல் இணைந்திருக்கிறாள். "ஸ்ரீ" என்பது மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். பக்தர்கள் பெருமாளையும் பிராட்டியையும் சேர்த்து வழிபடுவதே ஏற்றம் தருவதாகும். இதனால் எம்பெருமானே பக்தர்களின் வசதிக்காக தன் தேவியை தனது திருமார்பில் ஏந்திக் கொண்டார். எம்பெருமான் தன் பக்தன் பிரகலாதனின் பொருட்டு எடுத்த நரசிம்ம அவதாரத்தில் பிராட்டியுடன் இல்லாத உக்ர மூர்த்தியைக் கண்டு கலக்கம் அடைந்தனர் தேவர்கள்.

இரண்யனை வதம் செய்த பின்னர் உக்ரம் தணியாத எம்பெருமானின் திருமுகம் கண்டு நடுங்கிய தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். எப்போதும் சாந்தமூர்த்தியாய், சந்திரவதனத்துடன் சிங்கார ரூபனாகக் காட்சிதரும் பெருமாளின் "நரசிம்மரூபம்" கண்டு தேவர்கள் அஞ்சியதில் வியப்பேதும் இல்லை. நான்முகன் ஆலோசனையின்படி லக்ஷ்மி பிராட்டியின் திருவருளை நாடி நின்றனர் தேவர்கள். தேவர்களின் நிலை கண்டு வருந்திய தேவியும் அவர்களது துயர் தீர்க்க திருவுள்ளம் கொண்டார்.

கொதிக்கும் நீரை குளிர்ந்த நீரால் தானே தணிக்கமுடியும். குளிர் நிலவினையொத்த தன் திருமுக மண்டலத்தில் கஸ்தூரித் திலகம் தரித்து பொன்மணி ஆபரணங்களும் முத்துமாலைகளும் துலங்க சர்வாபரண பூஷிதையாக அருள்பாலிக்கும் பிராட்டி எம்பெருமானைத் தன் திருவிழிகளால் நோக்கியவாறு அவரது திருமடியில் வந்து அமர்ந்தார்.

தன் மடியில் அமர்ந்த தேவியை ஆலிங்கனம் செய்த அதே தருணத்தில் எம்பெருமாளின் கோபமும் தணிந்தது. பெருமானின் கோபம் என்ற கொதிக்கும் நீரை அருள்பார்வையாக மாற்றி பக்தர்களைக் காத்தருளினார் லக்ஷ்மிதேவி. பிராட்டியை ஆலிங்கனம் செய்த அரிய இத்திருக்கோலத்தில் எம்பெருமான் "ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மராக 'பல புராதனத் திருத்தலங்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். அத்தகைய புராதனத் தலங்களில் ஒன்றுதான் "பழைய சீவரம்" என்னும் தலத்தில் உள்ள "ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்" திருத்தலமாகும்.

பழைய சீவரம் - தல வரலாறு!

பிரம்மதேவனின் மானஸ புத்திரர்களில் ஒருவர் "அத்ரி" மகரிஷி. பூவுலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த இம் மகரிஷி அனைத்து வேதங்களிலும் கரை கண்டவர் என்பதோடு தவவலிமையிலும் சிறந்துவிளங்கியவர். பொதிகை மலைத்தொடரில் உள்ள அத்ரி மலையில் தவம் செய்து மும்மூர்த்திகளின் தரிசனம் கண்ட இம்மகரிஷிக்கு மஹா விஷ்ணுவை “ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியாக” தரிசனம் காண ஆவல் உண்டானது.


தன் ஆவலை மரீசி மகரிஷிக்குத் தெரிவித்தார் அத்ரி முனிவர். அத்ரியின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினார் மரீசி மகரிஷி. “சத்யவிரத க்ஷேத்திரம்'' என்று வணங்கப்படும் காஞ்சி மாநகருக்கு அருகில் உள்ள “பத்மகிரி” எனும் ஸ்ரீபுரத்தில் எம்பெருமானைக் குறித்து தவமியற்ற உமது விருப்பம் நிறைவேறும் என அத்ரி மகரிஷிக்கு ஆலோசனை கூறினார் மரீசி முனிவர்.

மரீசி மகரிஷியின் ஆலோசனையை ஏற்ற அத்ரி மகரிஷி யட்சர், கின்னரர் மற்றும் கந்தர்வர்களால் வழிபாடு செய்யப்பட்ட பெருமை கொண்ட பத்மகிரியை அடைந்து இங்குள்ள தாமரைத் தடாகத்தின் அருகில் திருவரசு மரத்தின் கீழ் அமர்ந்து நீண்டகாலம் தவமியற்றினார்.

கல்லுக்குள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் படியளக்கும் பரமன் அத்ரி மகரிஷியின் கடும் தவம் கண்டு மனமிரங்கினார். தன் தேவி மஹா லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்த திருக்கோலத்தில் "ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மராக" திருக்காட்சி தந்தார்.

அத்ரி மகரிஷியின் வேண்டுதல்படி தம்மை பக்தியோடு வணங்கும் தன் அடியவர்களுக்கு எல்லா நன்மைகளையும் வழங்கி அத்ரி மகரிஷிக்கு தரிசனம் தந்த அதே திருக்கோலத்தில் "பழைய சீவரம்" தலத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் காட்சி தருகின்றார் எம்பெருமான். திருக்கோயிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தனது திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும் வலது திருக்கரத்தால் அபயமுத்திரை காட்டியும் இடது திருக்கரத்தால் தன் தேவியை ஆலிங்கனம் செய்தும் திருக்காட்சி தரும் எம்பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும்.


இத்தலத்தின் தாயார் "ஸ்ரீ அஹோபிலவல்லி" தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கும், ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகனுக்கும், வீரஆஞ்சநேயருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

"ஸ்ரீபுரம்" என்று வணங்கப்பட்ட இத்தலம் தற்போது “சீவரம்” என்று மருவி வழங்கப்படுகின்றது. புராதனப் பெருமை கொண்ட பழைமை வாய்ந்த தலம் இது என்பதால் "பழைய” என்ற அடைமொழியுடன் இணைந்து "பழைய சீவரம்' ஆனது. பிரம்மாண்ட புராணத்தில் பழைய சீவரம் மலை “பத்மகிரி” என்றும் “ஸுதர்சனகிரி” என்றும் போற்றி வணங்கப்பட்டுள்ளது. தன் பக்தருக்கு அருளிய எம்பெருமான்!

வடநாட்டிலிருந்து தீர்த்த யாத்திரைக்காக வந்த பக்தர் ஒருவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். பழைய சீவரம் தலத்திற்கு தரிசனம் செய்ய வந்த இந்த அன்பர் புண்ணியநதியான "ஷீர நதியில்" (பாலாறு) நீராடி எம்பெருமானை வழிபட்டு அன்று இரவு இத்தலத்திலேயே ஓய்வெடுத்தார். அவரது கனவில் பிரத்யக்ஷமான எம்பெருமான் இத்தலத்தில் ஒரு மண்டலம் தங்கி வழிபாடு செய்ய உடல் நோய் முற்றிலும் குணமாகும் என அருள்பாலித்தார். நெஞ்சம் நெகிழ்ந்த அன்பர் எம்பெருமானின் திருவுள்ளப்படி இத்தலத்தில் தங்கி வழிபாடுகள் செய்ய அவரது உடல் நோய் முற்றிலும் நீங்கியது. எம்பெருமானின் அருட்கடாட்சத்தை எண்ணி வியந்த இந்த அன்பர் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகளை செய்து மகிழ்ந்தார்.

இந்த அன்பரின் வாரிசுகளான திரு. கோவிந்தாஸ் புருஷோத்தம தாஸ், திரு.ஹரிருஷ்ணதாஸ் மற்றும் திரு. மத்ராதாஸ் ஹரிதாஸ் ஆகியோரே இன்றும் இத்தலத்தின் பரம்பரை அறங்காவலர்களாகத் தொண்டு செய்து வருகின்றனர்.

நோய் தீர்க்கும் வழிபாடு !

நாள்பட்ட வியாதிகளால் அவதியுறும் அன்பர்கள் இத்தலத்தில் வழிபட நோயின் தாக்கம் உடனடியாகக் குறைந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கின்றார் இத்தலத்தின் அர்ச்சகர். "நரசிம்ம ப்ரபத்தி " மற்றும் மந்திரங்கள்


அனைத்துக்கும்அரசனான “ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்'' சொல்லி இத்தலத்து எம்பெருமானை நெய்தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மைகளும் நம்மை நாடிவந்து சேரும். நம்மை சூழ்ந்துள்ள தீயவினைகள் (Negative forces) உடனடியாக நம்மைவிட்டு விலகி ஓடி விடும். இத்தல நரசிம்மரை சுவாதி திருநட்சத்திர நாட்களிலும், பிரதோஷ தினங்களிலும் பக்தியுடன் வழிபட நம் வாழ்க்கைப் பயணத்தில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டு புதிய பாதையில் பயணிக்கலாம். துளசி மாலையும் பானகமும் சமர்ப்பித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர் பக்தர்கள். இத்தல இறைவனை பக்தியுடன் வழிபட தங்கள் தலைமுறைக்கே புண்ணியபலன் களை அன்பர்கள் பெறலாம்.

பழைய சீவரம் - கல்வெட்டுகள்!

பழையசீவரம் லக்ஷ்மி நரசிம்மர் தலத்தில் 10 கல்வெட்டுகள் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டுள்ளன. சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1080) பழையசீவரம் "சீயபுரம்" என்றும் "திரிபுவனவீர சதுர்வேதி மங்கலம்" என்றும் இத்திருக்கோயில் "ராஜேந்திர சோழ விண்ணகர்" என்றும் வழங்கப்பட்டுள்ளது. கோயில் கல்வெட்டுகளில் எம்பெருமானின் திருநாமம் "சிங்கபிரானாழ்வார்” என்றும் "திருமாலிருஞ்சோலை ஆழ்வார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாரியம்பாக்கம் என்னும் ஊரில் இத்திருக்கோயிலுக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டது குறித்தும் "சேதிராயன்" என்பவன் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து வழிபாடுகள் தொடர "வைகானஸகாணி" என்ற பெயரில் நிலம் தானமாக அளிக்கப்பட்டது குறித்தும் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

"அருளாளப் பெருமாள்' எனும் விக்கிரமசோழ பிரம்மராயன் கோயிலுக்குத் தானமாக அளித்த நிலங்களுக்கு வரிவிலக்கு வேண்டி மன்னனிடம் விண்ணப்பித்ததை ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.


கோயில் திருப்பலியின்போது இசை மீட்டும் ஒரு நபருக்குக் கொடை வழங்கப்பட்ட விபரம் ஒரு சாசனத்தில் காணப்படுகின்றது. பழையவரம் தலத்தில் “ஏரி வாரியம்” என்ற ஓர் அமைப்பு இருந்ததையும் கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகின்றது. கி.பி. 1204-ல் பழையசீவரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு புரட்டாசி விழா நடத்த நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. கி.பி. 1729-ல் இத்தலத்தின்

இறைவன் “ஜீயபுர லக்ஷ்மிநரசிம்மர்" என வணங்கப்பட்டுள்ளார்.

பார்வேட்டை உற்சவம்!

தை மாதம் பொங்கல் விழாவிற்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் நாளில் மலை காஞ்சி மாநகரில் அருளும் தேவாதிராஜப் பெருமாள் பழையசீவரம் உச்சியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் பார்வேட்டை உற்சவம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.

காஞ்சியில் அருளும் வரதரின் சிலாரூபத் திருமேனியை வடிக்க பழையசீவரம் மலையிலிருந்து தான் கல் எடுக்கப்பட்டதாகவும் அந்த வைபவத்தை நினைவு கூரும் வண்ணமாக காஞ்சித் தல உற்சவர் தம் தேவியர் சமேதராக பழையசீவரம் தலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சி வரதர், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மர், திருமுக்கூடல் வெங்கடேசப்பெருமாள், சாலவாக்கம் ஸ்ரீநிவாசப் பெருமாள், காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் மற்றும் பொற்பந்தல் தல எம்பெருமான் ஆகியோரை ஒருசேர தரிசனம் காணும் இத்திருநாளை தங்கள் பாரம்பரியக் குடும்ப விழாவாகக் கருதி ஆயிரக்கணக்கில் திரண்டு வழிபட்டு மகிழ்கின்றனர் இப்பகுதி மக்கள்.

பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி நதிகள் சங்கமிக்கும் இப் புண்ணியபூமியில் நடைபெறும் இவ்வைபவத்தில் பல தலங்களின் பெருமாள் அனைவரையும் ஒருசேரக்கண்டு தரிசிப்பதை தங்கள் பிறவிப்பயனாகவும் இந்த தரிசனத்தால் அளவிடமுடியாத புண்ணியபலன்கள் கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

கலியின் தோஷத்தால் துன்பம் ஒன்றையே துணையாகக் கொண்டு வாடும் அன்பர்கள் பழையசீவரம் தலத்திலும் பாலாற்றின் மறுகரையிலுள்ள திருமுக்கூடல் தலத்திலும் வழிபாடுகள் செய்ய துன்பநிலை தொடராதிருக்க அருள்புரிவான் திருமகள் கேள்வன். செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 16 கி.மீ.

தூரத்திலும் காஞ்சிபுரத்திலிருந்து 21 கி.மீ. தூரத்திலும் பழையசீவரம்தலம் அமைந்துள்ளது.


பக்தி ஒன்றையே பிரதானமாகக் கொண்டு பழைய சீவரம் பெருமாளுக்கு ஆகம் விதிகளின்படி பூஜைகள் செய்து வருகின்றார் திரு. A. K. ஸ்ரீநிவாஸ் பட்டாச்சாரியார். இவரை 9443718137 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி

முதல் இரவு 7.00 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும். வாய்ப்பு கிடைக்கும் வரை கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தை பக்தியுடன் பாராயணம் செய்வோம்.

"ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம் அபயஹஸ்தாங்கிதே கருணாமூர்த்தே ஸர்வவ்யாபிதம் லோகரக்ஷகம் பாபவிமோசன துரித நிவாரணம் லக்ஷ்மிகடாக்ஷம் ஸர்வாபிஷ்டம் அனேகம்தேஹி ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹா"

"உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்! ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு மருத்யும் நமாம்யஹம்!! ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ம பரப்ரம்ஹணே நம:"


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog