ருத்திராக்ஷம்பற்றிய சிலதகவல்கள்🌎

 ருத்திராக்ஷம்பற்றிய சிலதகவல்கள்🌎




💯நீலகண்டன்💯: யாதொருவன் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள படி உச்சி, தலை, கழுத்து, மார்பு, தோள், கைகள், இடுப்பு என்று எல்லா அங்கங்களிலும், சரியான எண்ணிக்கைகளில் ஆன ருத்திராமங்களை அணிசிறானோ அவன் நீல சுண்டனாகவே ஆகிறான் என்று பொப்ப தேவர் கூறுகிறார் - பதார்த்த ஆதர்சம்


🙏வேத வேள்வி பூஜைகள்: 🙏ருத்திராக்ஷ மணிகளை அணிந்த ஒரு மனிதன் வேதங்களைக் சுற்று, வேள்விகள் செய்து, தவங்கள் இயற்றி, தானதர்மங்கள் கொடுத்த ஒருவன் என்ன பலன்களை அடைசிறானோ அதே பலனை அடைகிறான் - ஸ்ரீ தத்வநிதி


🌷ருத்திரன்:🌷 ஒருவன் அசுத்தனாக இருந்தாலும் சாப்பிடத் தகாதவைகளை சாப்பிட்டிருந்தாலும் செய்யத்தகாத செயல்களை செய்திருந்தாலும் சகலவிதமான பாபங்களை புரிந்திருந்தாலும் அவற்றை எல்லாம் உணர்ந்து திருந்தி சிறந்த ருத்திராக்ஷ மணிகளை அணிந்து சொண்டால் அவன் ருத்திரனாகவே ஆகிறான். - சைவ நிதி





🌍விபூதி🌍- ருத்திராக்ஷம்: யாதொரு பிராம்மணன், நித்ய கர்மாக்களையும் நைமித்திக கர்மாக்களையும், மற்றுமுள்ள காரியங்களையும் விபூதி - ருத்திராக்ஷம் அணிந்து கொள்ளாமல் செய்கிறானோ அவனுக்கு அந்த கர்மாவினால் எந்த பலன்களும் கிடைக்காது ஹரிதீஷிதியம் -


💥பாபங்களிலிருந்து விடுதலை: 💥


மனிதன் கெடுதலானசிந்தையும் நிந்திக்கப்பட்ட ஆசாரமும், நெறிகெட்ட பிறவியும் உடையவனாக இருந்தாலும், அவன் ருத்திராக்ஷத்தை தரித்துக் கொண்டானேயானால், அவன் சகலவிதமான பாபங்களிலிருந் தும் விடுதலையடைகிறான்.


ஓம்..


👍ருத்திராக்ஷ தானம்: 👍


சாந்தமுள்ள சிவபக்தர்களுக்கு உத்தம மான சிறந்தவகை ருத்திராக்ஷங்களை தானமாகக் கொடுக்கலாம் அப்படி ருத்திராடி தானம் தருவதனால் வரும் சிவபுண்ணிய பலன்களை அளவிட்டு கூற இயலாது ரௌத சிந்தாந்தம்


🙏சிவ சாயுஜ்யம்:🙏


 விபூதி, ருத்திராக்ஷங்களை அணிவதாலும் ஜபமாலையோடு சிவநாமாவை ஜபிப்பதாலும், சிவனை பூஜிப்ப தாலும், காசி, விருத்தாசலம் நைமிசாரண்யம் போன்ற ஸ்தலங்களில் வசிப்பதாலும், ஒரு மனிதன் சிவ சாயுஜ்யம் எனும் முக்தி நிலையை சுலபமாக அடைந்துவிட முடியும்

விருத்தாசலம் சிவஸ்தல புராணம்


🔥மோடிநிலை: 🔥


விபூதி ருத்திராக்ஷத்தை அணிந்து கொள் ருத்திர நாம ஜெபம் செய், சதா சிவனை பூஜை செய், புண்ணிய ஸ்தலங்களில் வாசம் செய், சிவபூஜை செய்த தீர்த்தங்களை அருந்து, சிவப் பிரசாதங்களை சாப்பிடு, சிவஞானம் உள்ள சாதுக்களுடன் சகவாசம் கொள், இரண்டற்றதான ஒரே ஆத்ம ஸ்வரூபத்தை தியானம் செய், இவற்றால் மோக்ஷம் பெறலாம் பிரம்ம கைவர்த்த புராணம்


🔥ருத்திராக்ஷம் ஞான சாதனம்:🔥


 “ருத்திராக்ஷ மணி” சிவ ஞானம் சித்திப்பதற்குரிய ஞான சாதனமாகும். சிகை உச்சியில் தரிக்கும் ஒரு மணி "ராக தத்துவமாகும்" இரு காதுகளில் அணியும் ருத்திராசஷங்களில் "வலக்காதுமணி” "பரமேஸ்வரன்" இடக்காது மணி" "பார்வதி தேவி" தத்துவமாகும். "பூணூலில் தரிக்கும் ஒரு மணி" "பிரம்ம தத்துவமாகும்” கரங்களில் தரிக்கும் மணி சகல தேவதாஸ்வரூப தத்துவமாகும்


🙏ருத்திராக்ஷ மணிமாலை தானம்:🙏


 சிவனடியார்களுக்கு பலவகையான தானங்களை அளிக்கலாம் அவற்றில் முக்கியமானவை சில பட்டுத்துணியில் செய்த திருநீற்றுப்பை, ருத்திராக்ஷ மணி அல்லது ருத்திராக்ஷ மணிமாலை, சிவபுராணம், லிங்கபுராணம் மற்றும் சிவபூஜை சம்பந்தமான சைவநூல்கள் தோல் ஆசனம், சிவனடியார் களுக்கு உணவிடுதல் என்று வரையறுக்கப் பட்டுள்ளன.


ஓம்..





🔥எட்டு சிவ புண்ணியங்களில் ருத்திராக்ஷ மாலை🔥


சிவ புண்ணியங்கள் எட்டு என்று ஞானிகளால் கூறப்பட் டுள்ளன. அவை 1. ருத்திராக்ஷ மணிமாலையில் பஞ்சாக்ஷர ஜபம் 2. சிவபூஜை. 3. சிவாலய தரிசனம், 4, குரு தரிசனம், 5, சங்கம சேவை, 6. மஹேஸ்வர பூஜை, 7. திருமுறைகள் பாராயணம், 8 சிவபுராண படனம் என்று வகுக்கப்பட்டுள்ளன இவற்றுள் ருத்தி ராக்ஷ மணிமாலையில் பஞ்சாக்ஷர ஜபம் செய்வது மிகவும் முக் கியமான சிவ புண்ணியமாகும். அந்த ஜபத்திற்கு ருத்திராக்ஷ மாலை மிகமிக அவசியமாகும்


சர்வம் சிவார்ப்பணம்..

Comments

Popular posts from this blog