🎈🎈அங்குச முத்திரை 🐘🐘🐘




தரை வாழ் உயிரினங்களில் உருவத்தில் மிகப் பெரியது யானை .அங்குசம் உருவத்தில் மிகச் சிறியது ஆனால் ஒரு திறமையான பாகன் இந்த சிறிய அங்குசத்தை வைத்து பெரிய யானையை அடக்கி விடுவான்.

கடவுளை மனமுருகி வேண்டினால், மலைபோல் வந்த பிரச்சனைகள் கூட பனிக்கட்டி போன்று உருகி மறைந்து விடும் என்பார்கள் .அதற்காக நம் முன்னோர்கள் உருவாக்கிய முத்திரையே இந்த அங்குச முத்திரை.


பிரச்சனைகள் தலைவிரித்து ஆடும் போது இந்த அங்குச முத்திரையைச்  செய்தபடி விநாயகரை வழிபடுங்கள். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை உங்களால் எளிதில் சமாளித்து விட முடியும்.




🐚🐚செய்முறை 🐚🐚

கைவிரல்களை மடக்கி முஷ்டியை உருவாக்குங்கள் 

பெருவிரலால் மோதிர விரலின் மேல் பதிந்து இருக்கட்டும்

 நடு விரலை நிமிர்த்தி வளைவின்றி நேராக வைத்துக் கொள்ளுங்கள்

 சுண்டு விரலை ஆள்காட்டி விரலால் நிமிர்ந்து அதன் பக்கவாட்டு பகுதி நடுவிரலின் நடுக்கோடு இருக்குமிடத்தில் பக்கவாட்டில் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைத்துக் கொள்ளவும்

சுட்டுவிரலின் மேல் பகுதியை மட்டும் சற்றே வளைத்து அங்குசம் போல் வைத்துக் கொள்ளுங்கள் கைகள் மார்புக்கு அருகில் இருக்கட்டும்

 இதுவே அங்குச முத்திரை.


                      🌷🌷🌷 அமரும் முறை 🌎🌎🌎

இது விநாயகருக்கு வழிபாடு செய்யும்போது செய்ய வேண்டிய முத்திரை நின்று கொண்டே செய்யலாம்

அசு வழிபாட்டில்  ஈடுபடுபவர்கள், தரையில் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்தோ அல்லது சாதாரணமாக காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்தோசெய்யலாம்.


விநாயகரை மனதில் நிறுத்தி, அங்குச முத்திரை செய்தபடி உங்களது பிரச்சனைகளும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் திறனை தரவேண்டிய பிரார்த்தனைகள் செய்யுங்கள்

 மனம் ஒருமுகப்பட்டு செய்தால்தான் பலன் அதிகமாக இருக்கும் 

இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் முத்திரைச் செய்ய வேண்டும்.

🚗🚗🚗சுவாசம் 🚓🚓🚓


சுவாசம் இயல்பான நடையில் இருந்தால் போதும் 

ஆழமாகவும் சீராகவும் இருக்கட்டும்

" கும்பகம்" மூச்சை அடக்குதல் கூடாது.


⛽⛽ எவ்வளவு நேரம் 🚆🚆🚆


வழிபாடு அல்லது தியானம் முடியும் வரை

 குறைந்த பட்சம் 8 நிமிடங்கள் 

அதிக பட்சமாக 48 நிமிடங்கள் வரை செய்யலாம்.


🌍🌎🌏 பலன்கள் 🚇🚇🚇


விநாயகரின் அருளைப் பெற்றுத் தரும் ஒரு அற்புதமான முத்திரை இது

 தடைகள், சோதனைகள்அகலும்; வாழ்க்கை இன்பமாகும் .

கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த முத்திரையில் அமர்ந்து தொல்லைகளை விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் படிப்படியாக கடன் தொல்லைகள் அகலும்.

 நீண்ட காலமாக நோயின் கொடுமைகளை அனுபவித்தவர்கள் கூட இந்த முத்திரையில் அமர்ந்து விநாயகரை வழிபட நோய் படிப்படியாகக் குறையும்.



🚙🚙🚙 ஆத்மீக பலன்கள் ⛽⛽⛽


"யானை" என்பது தந்திர யோகத்தில் பருவு டலையும் ,மூலாதாரத்தையும் குறிக்கும் குறியீடு என்பதை ஏற்கனவே கண்டோம்

 யானையை அடக்கும் ஆயுதமே அங்குசம்

 அங்குச முத்திரையை தொடர்ந்து செய்து வர பருவுடலின் இச்சைகள் படிப்படி யாக அடங்கும்

 புலன்களின் ஆட்டம் அடங்கி, ஐம்புலன்களும் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும்

 புலன்கள் கூர்மை அடையும்.

பரு உடலின் முக்கியமான இச்சைகளால் ஆன உணவின் மேல் உள்ள நாட்டம் சிற்றின்பத்தில் மேல் உள்ள மோகம் ஆகிய இரண்டும் அடங்கும்.

 உயர்ந்து நிற்கும் நடுவிரல் ஆகாயம் நமது ஆணவம் எனும் மலத்தைக் குறிக்கும்

 தான் எனும் ஆணவமும் அகங்காரமும் அடங்கும் போது தான் ஞானம் உருவாகும்

 ஆணவம் iruku athu விரலோடு அங்குசத்தால் இருக்கும் ஆள்காட்டி விரலை இணைக்கும் போது அந்த ஆணவம் எனும் யானை இந்த அங்குசத்துக்கு கட்டுப்பட்டு அடிபணியும்

 ஆன்மீகத்தில் மேல் நிலையை அடைய விரும்புவோர்கள் கட்டாயமாக செய்ய வேண்டிய ஒரே முத்திரை இது.


                 ⚽⚽⚽மூலாதாரச் சக்கரம்🎃🎃🎃

"யானை" என்ற சொல் நமது மூலாதார சக்கரத்தில் குறிக்கிறது

 மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை போன்ற பூமியை சார்ந்த ஆசைகளை தூண்டிவிடுவது மூலாதாரச் சக்கரம் ஆகும்

 மூலாதார சக்கரத்தின் ஆளுமையில் இருந்து விடுபடும் போது தான் இந்த ஆசையில் இருந்தும் விடுபட முடியும் 

உலகில் இருந்தும் பேராசையில் இருந்தோம் மனம் விடுபட வேண்டுமானால் மூலாதாரம் எனும் 'யானை"யின் செயல்பாடுகளில் இருந்து விடுபட வேண்டும் 

அந்த யானையை அடக்கும் அங்குசம் என்ற அங்குச முத்திரை ஆகும்.


🎈🎈🎈 அடுத்து வரும் முத்திரை விக்ன முத்திரை 🎈🎈🎈




Comments

Popular posts from this blog