🔔மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி 🔔
காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.
சோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவலஞ்சுழி – விநாயகர் சுவாமிமலை – முருகன், பட்டீசுரம் – துர்க்கை, ஆலங்குடி – தட்சிணாமூர்த்தி போன்றவை பரிவார தெய்வங்களின் கோவில்களாகும். திரு விடைமருதூரில் இருக்கும் சுவாமிதான் பெரியவர். அதனால் மகாலிங்கம் என்று பெருமைப் படுத்தப்படு கிறார்.
மருதவனம் :
காவிரியின் தென்கரையில் மருத மரங்கள் நிறைந்த வனத்தில் இந்தத் திருக்கோவில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. ஏழு கோபுரங்களையும்,ஏழு பிரகாரங்களையும் கொண்டு ஓங்கி உயர்ந்தும், பரந்து விரிந்தும் காணப்படுகிறது. இத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.
காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.
சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரப் பாடல்கள் தாலாட்டும் தலம் இதுவாகும்.
பட்டினத்தார் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (பதினோராம் திருமுறை)
"காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே"
என்ற பட்டினத்தாரின் வாக்கிலுள்ள உண்மை
எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே.
பட்டினத்தார் தன் உலக வாழ்க்கையின் கடைசி வருடங்களை
திருவிடைமருதூரில் கழித்தார்.
அவர் அருளிச்செய்த திருவிடைமருதூர் மும்மணிக்கோவையிலிருந்து
ஒரு சில பாடல்களை இந்தபதிவில் பகிர்கிறேன்.
ஒரு சில பாடல்கள் எழுபது அடிகள் கூட கொண்டவையாக
இருக்கின்றன. மும்மணிக்கோவை என்பது, வெண்பாவும், ஆசிரியப்பாவும்,
கட்டளைகளித்துறையில் அமைந்த பாடல்களையும் மாறிமாறி
கொண்டிருக்கிறது. ஒரு சில பாடல்களில் அந்தாதி அமைப்பை
பார்த்தேன். இது தமிழின் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும்.
அம்பாளின் சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில்
மகாலிங்க ஸ்வாமி அருள்பாலிக்கிறார்.
மருது என்ற பெயரைக்கேட்டால் பெரும்பாலும் தமிழர்களுக்கு
மருதுபாண்டியர்கள் நினைவு தான் வரும்.
"மருதா மருதா" என்று சிவனை
அருந்தமிழில் அழைக்கிறார் பட்டினத்து பிள்ளை.
ஐந்து தேர்கள் கொண்ட சிறப்புடையது இந்தக்கோயில்.
சமீபத்திய வருடங்களில் பூஜ்யஸ்ரீ தயானந்த ஸ்வாமிகளின் அருளாசியுடன்,
ஐந்து தேர்களோடு சிறப்பாக திருவிழா நடந்தேறியது.
கண்ணெண்றும் நந்தமக்கோர்
காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல
எழுத்தென்றும் - ஒண்ணை
மருதஅப்பா என்றும் உனை
வாழ்த்தாரேல் மற்றும்
கருதஅப்பால் உண்டோ கதி.
அப்பா... மருதப்பா, உன்னை கண்ணென்றும்,
எங்களை காக்கும் காப்பென்றும், நாங்கள் கற்ற எண்ணும்,
எழுத்தும் நீயே என்றும் உன்னை வாழ்த்துவதே எங்களுக்கு கதியை,
நல்ல வழியைத்தரும். அப்படி வாழ்த்தாவிடில் எங்களுக்கு ஏது கதி?
திருமுறையில் உள்ள அனைத்து பாடல்களுமே, பெரும்பாலும், தீயவினை மாளும் வழியைக்காட்டுவனவாக உள்ளன. கெட்ட செயல்களை செய்தால் தான் பாவம் என்றில்லை.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி பாடல், மனம் வாக்கு, செயல்
என்று நான் எதை செய்தாலும், அதை நாராயணனுக்கு
அர்ப்பணிக்கிறேன் என்று முடியும். இப்போதுள்ள நுகர்வு
கலாச்சாரத்தில், அளவுக்கு மீறிய ஆசையும், பொறாமை,
போட்டிகளும் இல்லாத மனிதர்கள் இல்லை.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
என்கிறார் வள்ளுவர்.
கப்பலில் பெருவணிகம் செய்த செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்
பட்டினத்தார். பெருநெறியை பிடித்தொழுகினார்;
அனைத்தையும் உதறினார்.
வழிபிழைத்து நாமெல்லாம்
வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள்
எல்லாம் - பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொருகால்
வாய்கூப்ப வேண்டா
கருதிடத்தாம் நில்லா கரந்து.
எப்படியோ இறைவனின் கருணையால் இதுவரை
பிழைத்துவந்துவிட்டோம். வந்த வழியில் சேர்த்த பாவங்கள் எல்லாம்,
பொழில் சூழ்ந்த மருதனை வாயால் கூட அழைக்கவேண்டாம்.
மனத்தால் நினைத்தாலே அந்த பாவங்கள் மறைந்துவிடும் என்கிறார்
பட்டினத்தார்.
அன்றென்றும் ஆமென்றும்
ஆறு சமயங்கள்
ஒன்றொன்றொடு ஒவ்வா
துரைத்தாலும் - என்றும்
ஒருதனையே நோக்குவார்
உள்ளத் திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.
பட்டினத்தார் காலத்திலும், சமயப்பிரிவினைகள் இருந்திருக்கின்றன.
ஒன்றோடு ஒன்று அவை ஒவ்வாமை கொண்டிருந்திருக்கின்றன.
ஒருவனே இறைவன் என்ற கருத்தை கொண்டிருக்கும் மனிதர்களுக்கு
குழப்பம் இல்லை. அவர்கள் உள்ளம் மருதனைதான் நோக்கி ஓடி வரும்
என்கிறார் பட்டினத்தார்.
எளிதில் தினமும் சொல்லும்படியான எளிமையான
பாடல்களைத்தான் இந்தப்பதிவில் பகிர்ந்துள்ளேன்.
பிரம்மஹத்தி தோஷம் :
வரகுண பாண்டியன் என்ற மன்னன் காட்டில் வேட்டையாட சென்று திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவன் வந்த குதிரை, வழியில் ஓர் அந்தணனை மிதித்துக் கொன்று விட்டது. அதனால் பாண்டிய மன்னனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவன் அநேக நேரங்களில் மனநிலை மாறி, தன் நிலை இழந்து திரிந்தான். இதை யடுத்து அந்த மன்னன் தனது குல தெய்வமான மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கி முறையிட்டான். அப்போது ஒலித்த அசரீரி, திருவிடைமருதூர் சென்று அங்குள்ள ஈசனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று கூறியது.
இதையடுத்து வரகுண பாண்டிய மன்னன் திரு விடைமருதூர் திருத்தலம் வந்தான். மகாலிங்க சுவாமியை வணங்குவதற்காக பாண்டியன் ஆலயத்துக்குள் பிரவேசித்தபோது, அவனைப் பற்றிக்கொண்டிருந்த பிரம்மஹத்தி, சக்தி மிக்க ஈசனின் முன் செல்ல அஞ்சிக் கொண்டு மன்னனை விட்டு வெளி வாசலிலேயே ஒதுங்கி நின்றது. வழிபாடு முடித்து மன்னன் திரும்பி வரும்போது, மீண்டும் அவனைப் பிடித்துக் கொள்ள எண்ணிய பிரம்மஹத்தி அங்கேயே காத்திருந்தது.
கோவில் ஆலயத்தின் வாசலில், தலையை சாய்த்தபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கும் கற்சிலை ஒன்று காணப்படுகிறது. அதைத்தான் பிரம்மஹத்தி என வர்ணிக்கிறார்கள்.
வரகுண பாண்டியன் மகாலிங்கத்தின் முன் நின்று மனம் உருகி வழிபட்டபோது, பஞ்சபூதங்களின் வடிவான பரமேஸ்வரனின் பேரருளால் பூரண குணமடைந்து தெளிவு பெற்றான். பிறகு இறைவனின் உத்தரவுப்படி, வந்தவழியே மீளாமல் வேறு வழியே வெளியே சென்று விட்டான்.
மனநோய்க்கு மருந்து :
இன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன் நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். முன்பெல்லாம் சித்தப் பிரமை பிடித்தவர்களை இவ்வூரில் ஒரு மண்டலம், அல்லது அரை மண்டலம் தங்க வைத்து கிழக்கே உள்ள காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடச் செய்து, சுவாமி முன் நிறுத்தி காலை, மாலை இருவேளையும் வழிபடச் செய்வார்கள்.
தற்போது இந்த ஆலயத்தில் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வந்து தீர்த்தமாட வைத்து, சுவாமி சன்னிதியில் தெற்கு உட் பிரகாரத்தில் இருக்கும் ஆண்ட விநாயகரை மும்முறை சுற்றிவந்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மூலவர் மகாலிங்கப் பெருமான் முன் நின்று இறைவனின் அருட்பார்வை கிடைக்குமாறு அர்ச்சித்து, பிரகாரம் வலம் வந்து வழிபட வேண்டும். தொடர்ந்து பெருநலமுலையம்மை சன்னிதி வந்து பிரார்த்தித்து விட்டு, அடுத்ததாக மூகாம்பிகை சன்னிதி வந்து, மூகாசுரனை அழித்து சர்வ சக்தி வடிவாக வீற்றிருக்கும் அம்பிகையின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும். பின்னர் பிரகாரத்தில் உள்ள மகாமேருவை தரிசித்து, அசுவமேதயாகப் பிரகாரம் என்னும் வெளி சுற்றில் சிவமந்திரத்தை உச்சரித்தவாறு வலம் வர வேண்டும். தொடர்ந்து ஆடவல்லான் மண்டபத்தில் 27 லிங்கங்களில், அவரவர்க்குரிய நட்சத்திர லிங்கத்துக்கு அர்ச்சனை செய் கிறார்கள்.
எப்படி இருப்பினும் மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரே மருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கைஆகும்.
பழிபாவம் நீக்கும் பரமன் :
திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்று வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன. மோட்ச தீபம் ஏற்றி வைத்து, முக்கண்ணனின் பேரருளைப் பெறுவோரும் உண்டு.
“பழிபாவங்கள் நீங்க மருதீசர் பெயரைச் சொல்ல வேண்டும் என்ற பட்டினத்தாரின் பாட்டு இதோ.
வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் – பொழில்சூழ்
மருதிடத்தான் என்றுஒருகால் வாயாரச் சொன்னால்
கருதிடத்தான் நில்லா கரந்து”.
இந்த ஆலயத்தில் தான் மன்னனாக இருந்து துறவியான பத்திரகிரியார், சிவ ஜோதியில் கலந்தார் என்று தல புராணம் எடுத்துரைக்கிறது. பட்டினத்து அடிகள் பேய்க் கரும்பினைப் பெற்ற தலம் இது. மார்க்கண்டேயர், அர்த்த நாரீசுவராக சிவனின் அருட்காட்சி கண்ட தலமும் இதுவே.
ஆலய அமைப்பு :
கிழக்கு கோபுரத்திலிருந்து உள் நுழையும் போது படித்துறை விநாயகர், காவிரியை நினைவு கூறுகிறார். அதை அடுத்து சுதையால் ஆன மிகப் பெரிய வெள்ளை நிற தேவேந்திர நந்தி அமர்ந்த நிலையில் இருக்கிறது. வலது புறமுள்ள ஆடவல்லான் மண்டபத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் உரிய சிவலிங்கங்கள் இருக்கின்றன. இங்கு நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், தங்கள் நட்சத்திரங்களுக்குரிய பரிகாரம் செய்கிறார்கள்.
தெற்கில் உள்ள சித்திரப் பிரகாரம் என்பது சுதைச் சிற்பங்களாலும், ஓவிய வடிவங்களாலும் நிறைந்து நம் கண்கள் மகிழ கலைக் கூடமாகக் காட்சி தருகிறது.
வடக்கில் உள்ள பிரணவப் பரிகாரத்தில் நாயக்கர் கால கட்டிடக்கலையின் படி தேர் வடிவில் சன்னிதி அமைக்கப்பட்டு அதில் வேம்படி முருகன் ஆட்சி செய்கிறார். எதிரே வேல் மண்டபமும், பிறகு காசிபரும், அவர் விரும்பியபடி கண்ணனாகக் காட்சி தரும் சிவனும் தலவிருட்சமான மருத மர நிழலில் இளைப்பாறுகிறார்கள். அங்கே சிங்கமுகத் தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கிறது.
மூகாம்பிகை :
சுவாமிக்கு வலதுபுறம் தல நாயகியாக தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி நின்றருளும் ‘பெருநலமுலை அம்மை’ காட்சி தருகிறார். அவருக்கு பின்னே பிரகாரத்தில் இருக்கும் அன்பிற் பிரியாள் அம்மையும், அம்பாள் சன்னிதிக்கு அருகே மூகாம்பிகை அம்மன் வடதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பது பெரும் சிறப்பு. கர்நாடகாவில் உள்ள கொல்லூருக்கு அடுத்தபடியாக மூகாம்பிகை இத்தலத்தில் பூஜிக்கப்படுகிறார். பக்கத்தில் மகாசக்கரமேரு உள்ளது.
அமைவிடம் :
கும்பகோணம் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் கிழக்கில், மயிலாடுதுறை மார்க்கத்தில் இருக்கிறது மத்தியார்ஜீனம் (அர்ஜீனம் – மருதமரம்) எனப்படும் திருவிடைமருதூர். ஆந்திர ஸ்ரீசைலம் – தலைமருது, நெல்லை திருப்புடை மருதூர் – கடைமருது. இவை இரண்டுக்கும் இடையே உள்ளதால் இந்தத்தலம் திருஇடைமருதூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் திருவிடைமருதூர் என்றானதாக கூறுகிறார்கள்.
Comments
Post a Comment