❤️மணவாழ்க்கை தோஷம் போக்கும் திருத்தலங்கள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்❤️❤️❤️

 ❤️மணவாழ்க்கை தோஷம் போக்கும் திருத்தலங்கள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்❤️❤️❤️





கோவில் முகவரி


அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,


திருச்செங்கோடு-637211,


நாமக்கல் கோவில் தொலைபேசி

04288255925.


நடை திறந்திருக்கும் நேரம்


காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை


பிரிந்த கணவர், மனைவி ஒன்று சேர்ந்ததும் அவர்கள் ஒற்றுமை யுடன் குடும்பம் நடத்த அருளும் திருத்தலம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், நாமக்கல்லில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகில் கோவில் உள்ளது. அடிவாரத்தில்

இருந்து பஸ் வசதி உண்டு 


பிருங்கி முனிவர் கயிலாயம் வந்து

பார்வதியை வணங்காமல் சிவனை மட்டும் வணங்கினார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, முனிவரை சக்தி இழந்து போகும்படிச் சாபம் இட்டாள். உடனே சிவனும், சக்தியும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்த சிவன், அம்பிகைக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். இவரே இந்த தலத்தில் அருள் பாலிக்கிறார். மலைக்கோவிலான இங்குள்ள பாறையில் சுயம்புலிங்க வடிவமாக அர்த்தநாரீஸ்வரர் வெண்ணிறத்தில் காட்சி அளிக்கிறார்.


❤️பரிகார முறை❤️


ஒற்றுமையுடன் வாழ விரும்பும் கணவன், மனைவி ஆகிய2பேரும் கோவிலுக்கு வந்து அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டுசாமிக்கு பாலாபிஷேகம் செய்து தீபம் ஏற்றவேண்டும் சுவாமி அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.


திருச்செங்கோடு மலையில் அம்பாள் 21 ஆயிரம் வருடம் தவம் செய்து சிவபெருமானிடம் சுவாமியிடம்

இடப்பாகத்தை பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. இதனால் இந்த மலையை பவுர்ணமி தினத்தன்று வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும்


கணவன்-மனைவி ஒற்றுமையுடன் வாழ இந்த கோவிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை, அஷ்டமி திதியில் தொடங்கி 21 நாள் கடைப்பிடிக்கப்படுகிறது


🙏திருச்செங்கோட்டு வேலவர்🙏


இது சிவாலயம் என்றாலும் இங்கு செங்கோட்டு வேலவருக்கு சிறப்பு அதிகம் தனது வலது கையில் வேலும் இடது கையில் சேவலும் ஏந்திக் கொண்டு நின்ற கோலத்தில் செங்கோட்டு வேலவன் ஆக காட்சிதரும் முருகப்பெருமான் அது தரிசனம் காணக்கிடைக்காத காட்சி.


செங்கோட்டு வேலவர் சன்னதிக்கு செல்லும் வாசலில் அழகான இரண்டு துவாரபாலகர்கள் சூட்சமமான சிற்ப அழகுடன் அவர்கள் அணிந்திருக்கும் மாலைக்கும் அவருடைய மார்புக்கும் இடையே இடப்பக்கம் ஒரு ஊசி நுழைந்து அந்தப் பக்கம் எடுத்து விடலாம்.


ஆதிகேசவ பெருமாள் சன்னதி


சிவன் கோயிலில் பெருமாள் ஆலயம் இருப்பது விசேஷம் தான் இந்த ஆலயத்திற்கு அந்த சிறப்பு உண்டு திருமகள் நிலமகள் உடையோர் ஆதிகேசவ பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் 


தலவிருட்சம்- கடம்பு.


வழியும்-தூரமும்


ஈரோட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில். சேலத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும், நாமக்கல் லில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திலும் இத்தலம் உள்ளது. சென்னையில் இருந்து ரயிலில் வரும் பக்தர் கள் காட்பாடி, சேலம் வழியாக ஈரோடு வர வேண்டும் அங்கிருந்து கோவிலுக்கு பஸ்வசதி உண்டு. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 5 நிமிடத்திற்கு ஒரு தடவை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.


சர்வம் சிவார்ப்பணம்..

Comments

Popular posts from this blog