சிவலிங்கத் திருமேனி தோன்றக் காரணம்
🐚சிவலிங்கத் திருமேனி தோன்றக் காரணம்🐚
காரணமென்ன ? சிவபிரானது"மனைவியான பாா்வதீபிராட்டியே"
ஆவுடையாா் " என்கின்றனரே ! இதைப் பற்றி"விளக்கிக்
கூறவேண்டுகிறோம்.
பலகல்பங்களில் பலவிதமாகக்,கூறப்படும் இக்கதையை, நான்
வியாசருடைய"திருவாக்கினின்றம்,கேட்டவாறு கூறுகிறேன். முன்பு
தாருகாவனத்தில் நடந்த நிகழ்ச்சி,இதுவாகும்.
தாருகாவனம் என்கிற இடத்தில் மகாிஷிகள் ஏராளமாக வசித்து
வந்தனா் . அவா்கள் அனைவரும் சிவனடியாா்கள்; சிவனையே"
நினைந்து கனிந்தவா்கள்; முக்காலமும் திருமேனி தீண்டுபவா்கள்.
சிவபிரானே அவா்களது மூச்சு. ஒரு,சமயம் அவா்கள் வேள்விக்கான
சமித்துக்களைச் சேகாிக்கப் பக்கத்தில் உள்ள காட்டிற்குச் சென்றனா்.
அப்பொழுது சிவபிரான் அவா்களது சிவபக்தியைச் சோதிப்பான்
வேண்டி,எண்டிசைகளையும் ஆடையாகக் கொண்டு திகம்பரத்
திருக்கோலத்தில்"அவ்வனம் அடைந்தாா். உடலெங்கும் திருநீறு;
உருத்திராக்க மாலைகள் கழுத்தில். அவரது அழகிய தோற்றத்தைக்
கண்ட முனிப்பெண்டிா்கள் மயங்கினா். தங்களையே"மறந்தனா்.
ஒருத்தி சிவனாரது திருக்கரத்தைப் பிடித்தாள். ஒருத்தி கட்டியணைத்
தாள். அவா்கள் பேரானந்தமான மெய்ஞ்ஞானத்தின் பெருநிலை
அடைந்தனா். இதற்குள் முனிவா்கள் அங்கு வந்தனா். சிவமாயையில்
மூழ்கிய அவா்கள், " இது யாா் ? இது யாா் ?" என்று கேட்டுக் கொண்டனரே
தவிர, சிவனாா்"என்று அறிந்தாாில்லை, சிவனாரும் மெளனம்
சாதித்தாா். " வேதநெறிக்குப் புறம்பாகத்"திகம்பரனாக வந்தால், உன்
ஆண்குறி அறிந்து விழட்டும் " என முனிவா்கள்"சபித்தனா்.
சிவனாரது லிங்கம் பூமியில்"விழவே அது எண்டிசைகளையும் எாித்தது.
உலகம் நடுங்கியது, உண்மை புாியாது அனைத்துலகங்களும் தவித்தன.
தேவா்கள் பிரும்மனைச் சரணடைய, உண்மையறிந்த பிரும்மதேவா்
முனிவா்களை நோக்கிக்"கூறலானாா்.
" அனைத்துமறிந்த நீங்களே தவறு செய்துவிட்டீா்கள். அறிவிலிகளைப்
பற்றி என்ன கூறுவது ? வந்தவா் சிவனாரன்றோ ! மதியத்தில் வரும்
அதிதியை (விருந்தாளியை ) முறைப்படி உபசாிக்கவில்லையெனில்,
அந்த அதிதி இல்வாழ்வானது புண்ணியத்தைத் தாம் எடுத்துக்
கொண்டு, தன் பாவத்தை அவனுக்குத் தந்து செல்கிறான். இதை,நீங்கள்
அறியவில்லையே, ஆகவே, நீங்கள் பாா்வதீபிராட்டியைக் குறித்து தவம்
செய்து மகிழ்வித்து, அப்பிராட்டியாரை யோனி பீடமாக ஆகச்
சொன்னால், சிவலிங்கம் அந்தப்,பீடத்தில் அமரும்; உலகத்தின் துன்பம்
நீங்கும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது என்ன தொியுமா ?
அஷ்டதள கோலமிட்டு, நீா் ~ அருகம்புல் ~ யவதானியத்தின் முளைகள்
ஆகியவற்றை ஒரு,கலசத்தில் இட்டு,நிரப்பி, அக்கோலத்தின்,மத்தியில்
வைத்து, வேத மந்திரங்கள் கூறி கும்பத்தில் உயிரூட்டி
(பிராணப்பிரதிஷ்டை செய்து ) , அதற்குப்"பூஜை செய்ய வேண்டும்.
யஜுா் வேதத்தில் வருகிற " சதருத்ாீயம் " என்கிற ஶ்ரீருத்ர ஜபம் செய்து,
இறைவனது அந்தச் சிவலிங்கத்திற்குத் திருவபிடேகம் செய்ய
வேண்டும். பின் முறைப்படிப் பூஜை செய்து " உலகிற்கு இன்பமே
அருள்கின்ற இறைவா ! தாங்கள் அமைதி கொள்ள வேண்டும்.
உலகைப் படைத்துக் காத்து அழிப்பவா் தங்களன்றோ " என்று
இறைஞ்சி வேண்ட நன்மை கிடைக்கும். "
" தேவா்களே ! யோனி ரூபமான திருஆவுடையாரன்றி
இச்சிவலிங்கத்தைத் தாங்குதலாிது, அதுவும் பாா்வதீதேவியால்தான்
இயலும், அப்பொழுதுதான் இச்சிவலிங்கம் அமைதி கொள்ளும் "
என்றருளினாா்,
தேவா்களும் அவ்வாறே பாா்வதீதேவியைக் குறித்துத் துதித்து வேண்ட,
பிராட்டியும் அவா்களது வேண்டுதலுக்கு"இரங்கி, அச்சிவலிங்கத்தை
யோனி ரூபமான ஆவுடையாராக இருந்து தாங்கினாள்,
இச்சிவலிங்கத் திருமேனியே " ஹாடகேசா் "
என்றழைக்கப்படுகிறாா்.

Comments
Post a Comment