🌎வாலை_தியானத்தின்_முதல்நிலை🌎



எந்த ஒரு மந்திரத்தையும் மூன்று பார்வைகள் ஒன்றிணைத்து தான் செய்ய வேண்டும். பள்ளி பாடங்களை மனப்பாடம் செய்யும்போது இந்த மூன்று பார்வையும் ஒருங்கிணையும்போது தான் பாடங்களை கவனிக்கும் ஆற்றல் உண்டாகும். அப்போதுதான் மனப்பாடம் ஆகும். ஒன்றை கூர்ந்து கவனிக்கும்போது தன்னாலேயே இந்த நிகழ்வு அறியாதவருக்கும்  உண்டாகும். இந்த பாடங்கள் வலதுபக்க மூளையில் மறவாத சக்தியாக பதியும்.


ஆனால் ஞான சக்தியை பெற? இம்முறை மட்டுமே போதாது. கூடுதலாக கீழ்நிலை முக்கோணத்தின் சக்ரா சக்தியும் துணை வேண்டும். மிக அழுத்தமான மூன்று பார்வை நோக்கும், மிக ஆழமான ஒற்றை சிந்தனையும், சுழிமுனை வாசியும் இந்த சாதாரண உடலை மந்திர உடலாக மாற்றுகிறது.


புதிதாக பயிற்சி செய்யும்போது நம் கிரகசக்திகளும், கர்ம பாவ புன்னிய பதிவுகளும் இடம் வலமாகவும், வலம் இடமாகவும் மாறிமாறி செயல்படும். நாம் சுவாசிக்கும் காற்று நம் உடலில் 18 இடங்களில் பதிவை உண்டாக்குகிறது. இந்த பதிவு இடங்களை அடங்கல் என கூறுவார்கள். அந்த அடங்களில்தான் நவகிரகம் மற்றும் வானசக்தியும் நம் முன்னோர் பாவபுண்ணிய சக்தியும் பதிந்து நம்மை செயல்படுத்துகின

்றன. இவையோடு நம் மனமும் இணைந்துவிடும். அதனால் நம்மை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் இல்லாமல் வெளிசக்தியின் ஆளுகையில் வாழ்கிறோம். (நம் மனதை நாம் கட்டுப்படுத்தினால் அவைகளை நாம் ஆளலாம். அதனால்தான் மனம் போன போக்கில் போகக்கூடாது என்பார்கள். 


கிரகசக்தியின் இயல்புகள் நம் மனதை ஆளும் இதுவே மனம் போன போக்கில் ஈர்த்துச் செல்லும். இதை கட்டுப்படுத்த பழக வேண்டும்).


இவ்வாறு இருக்கையில் சுழிமுனை வாசியால் இந்த 18 அடங்களில் உள்ள தீயசக்திகளை அழிக்க முடியும். அதற்கு தொடர் பயிற்சியால் சில நாட்களிலேயே வெற்றி அடையலாம். அந்த வெற்றி கிடைக்கும் வரை நம் உடலில் சக்கராக்களின் இயக்கத்தினால் இடம்வலமாகவும் வலம் இடமாகவும் இரு பின்னப்பட்ட பாம்புகள்போல் வாசி எனும் சுழிமுனை சக்தி மேலே எழும்.அப்போது 18 அடங்களில் உள்ள நம் கிரக பாவபுண்ணிய பதிவுகள் அமைதியாக சிறுக சிறுக செயல்பட்டதை சீண்டிவிட்டாற்போல் ஆகி வேகமாக செயல்பட ஆரம்பித்துவிடும். இதனால் நம் குண செயல்பாடுகளில் சில தற்காலிக மாற்றம் உண்டாகும். கோபம், காமம் தூண்டப்படல், அவமானம் ஏற்படுவதாக உணர்தல், வெறுப்பு போன்றவை நம்மை தாக்கும். வெளியில் இருந்தும் சில பிரச்சனைகள் வரும்.


கர்மாவை தூண்டுவதால் இப்பிரச்சனைகளை சாதகன் யாராக இருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் அனுபவித்தேயாக வேண்டும். யாரோ சிலருக்கு மட்டும் திடீர் அதிஷ்டங்கள் உண்டாகும். இதை அறியாமல் வெறுப்புக்கோ அல்லது காமத்திற்கோ இசைந்து தன் பயிற்சி எனும் விரதத்தை விட்டு விலகுபவர்கள் ஏராளம்பேர் உள்ளனர்.


நாம் பயிற்சியை விடாமல் தொடர்ந்து செய்யும்போது இந்த இடம் வலம் அலைபாயும் கர்ம தொடர்புகளான கிரகங்கள், பாவ புண்ணிய பதிவுகள் ஒருநிலைக்கு வரும் அப்போது எந்த தாக்கமும் நமக்கு தெரியாது. எல்லாம் சமநிலைக்கு வந்துவிடும்.

(இன்னொரு தகவலையும் இங்கு அறியுங்கள். பயிற்சி தொடங்கிய சில நாட்களிலும் பயிற்சி நன்றாக செய்துவிட்டு பிறகு மனம் மாறி பயிற்சிபோதும் என விட்டுவிடும் சில நாட்களிலும் இந்த உடல்மாற்றம் தவிர்க்க முடியாதது. இதனால் வெளிச்சக்தி தாக்கம் காமம், கோபம், வெருப்பு, அவமானம் உண்டாவது குறைந்தளவாவது தூண்டுதல் இருக்கத்தான் செய்யும்.


எனவே பயிற்சியை விட நினைப்பவர்கள் உடனடியாக விடக்கூடாது. பயிற்சி நேரத்தை சிறுக சிறுக குறைத்துக்கொண்டே வந்துதான் விடவேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களே உங்களுக்கு எதிர்ப்பாக மாறலாம். அதை நீங்கள் ஆரம்பகால கட்டத்தில் சந்திக்க வேண்டிவரும். அதை நீங்கள்தான் பெரிதுபடுத்தக்கூடாது. இந்த சங்கடமே வேண்டாம் என்று அக்காலத்தில் சாதகம் செய்ய விரும்பியவர்கள் உணவு பண்டங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு தனியான மலை மற்றும் வனஇடங்களை நாடிச்சென்று சிலநாள் அங்கேயே தங்கி ஆரம்ப பயிற்சியை செய்து தன் உடல் மாற்றங்களை சகித்துக்கொண்டு இருந்தனர்.


உடல் சூட்டால் உண்டாகும் காமத்தை தடுக்க இருவேளையும?் குளித்து உடல் சூட்டை தணித்துக் கொண்டார்கள். தனிமையான உயரமான இடம் சாதகம் செய்ய சிறந்த இடம்அதற்காகவும் அவ்விடத்தை நாடினார்கள். இதை வேறொரு கட்டுரையில் விரிவாக காணலாம்).

மேற்கண்ட ஆரம்ப பயிற்சிதான் வாலை தியானத்தின் முதல் நிலையாகும். வாலை அருள் என்பது நாம் பயிற்சியில் வெற்றி காண்பதாகும். வாலை சக்தியை பெற மந்திரங்களின் உதவியை நாடினால் எளிதாகும். வாலை என்பது உடலின் முக்கோண சக்திகளை சிறப்பாக செயல்பட வைத்து ஒரு தகுதியான உடல் தரத்தோடு இருப்பதாகும். உடலில் உள்ள அனைத்து சக்தி மையங்களையும் தன் மனக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்து குறிப்பிட்ட சக்தி மையங்களை மட்டும் இயக்கக்கூடிய ஆற்றலும் அல்லது எல்லா சக்தி மையங்களையும் மந்திர ஒலியால் இயக்கக்கூடிய ஆற்றலும் கைவரப் பெறுதலும் வாலை சக்தி என்பதாகும். வாலை என்பது அனைத்திற்கும் பொதுவான சக்தி உடலாகும். அதாவது அஷ்டகர்மங்கள் எட்டு என அறிவீர்கள். மந்திர ஒலிகளும் பலநூறு என்பதை அறிவீர்கள். 


இவைகளை எல்லாம் இயக்க தகுதியான மந்திரஉடல் வேண்டும். அதை தயார்படுத்தி வைப்பதே வாலை சக்தி உடலாகும்.


ஓம்..


💥#மேலும்அறிக :-


மனம், ஆழ்மனம் என இரண்டுண்டு. இதில் மனம் சஞ்சலப்படக்கூடியது. இது புற வாழ்க்கைக்கு மட்டுமே லாயக்கானது. ஆழ்மனம் மட்டுமே ஆற்றல்களை பெறும் தகுதி வாய்ந்தது. இது மனதையும் கட்டுப்படுத்தும் சக்தி பெற்றது. 


இந்த ஆழ்மனதை நம் நெற்றிக்கண்ணுக்கு நிலையாக இருக்க முன் நிறுத்தினால் பல அதிசயத்தக்க நிகழ்வுகளையும் தகவல்களையும் தருவதோடு சித்த சாதனை செய்ய வைக்கும். ஆக இந்த ஆழ் மனதை நாம் முன்நிறுத்த முயற்சிக்கும்போது மனமானது பல இன்னலான கேள்விகளை கொடுத்தும் புதிய புதிய சந்தேகங்களை உண்டுபண்ணியும் ஆழ் மனதை செயல்பட விடாதபடி தடுக்கப்பார்க்க

ும். இந்த மனதை அமைதிப்படுத்த ஒரே வழி புற ஆசையை வெறுக்க வேண்டும். அல்லது ஒதுக்க வேண்டும். ஆசைகளிடம் மனம் போகாமல் மனதைக் கொண்டே மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதை செய்தால் மனமானது ஆழ்மனம் முன்வந்து ஆக்ஞா சக்கரத்தில் நிலைத்து நிற்க தடை செய்யாது. ஆழ்மனம் வந்து நின்றுவிட்டால் அதில் எந்த சக்தியை அழைத்தும் பேசமுடியும்.இதுதான் வாலை.


நீங்கள் எந்த சக்தியை நினைத்து தியானிக்கிறீரோ, எந்த உருவத்தை நினைத்து தியானிக்கிறீரோ, எந்த மந்திரத்தை நினைத்து தியானிக்கிறீரோ அவையெல்லாம் உங்கள் விருப்பம். ஆனால் ஆழ் மனம் ஆக்ஞா முன்வந்து நின்றால் மட்டுமே பலன்.


இன்னும் ஒரு உண்மையை சொல்லப்போனால் தெய்வ உருவம், யந்திரம், மந்திரம், விளக்கு பார்த்தல், கரும்புள்ளி பார்த்தல் எல்லாமே ஆழ்மனதை முன் நிறுத்தத்தான். யார் யாருக்கு எதன்மேல் பிரியமோ? எதன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையோ, எதை மனம் ஏற்கிறதோ அவையெல்லாம் ஆழ் மனதை பாதிக்காதவை ஆகும்.


  எனவே ஆக்ஞாவில் பிடித்ததை வைத்து உற்று நோக்கும் போது ஆழ் மனம் அமர்ந்து நிலைத்து விடும். இந்த ஆழ்மனதால் மட்டுமே நெற்றிக்கண் திறக்க முடியும். ஆழ் மனதில் மட்டுமே தெய்வ சக்தியாகட்டும், அசுப சக்தியாகட்டும் எதுவுமே வந்து பேச முடியும். இதுதான் வாலையின் பரிபூரண இரண்டாம் நிலை அருளாகும்.


நம் மனம் எந்த மதத்தை ஏற்கிறதோ, எந்த தெய்வத்தை விரும்புகிறதோ, எந்த மந்திரத்தின்மேல் பிரியம் உண்டாகிறதோ எடுத்து கையாளலாம் தவறில்லை. எடுத்துக்கொண்டதை கடைசிவரை நம்பிக்கை இழக்காமல் மாற்றம் செய்யாமல் கையாள வேண்டும். இது முக்கியம்.


இன்னும் கூடுதலான இயக்கமும் புரிதலும் மிக அவசியமாகும் . அதை புரிந்துகொண்டால் சக்தி பெறுவது மிக எளிதாகும்


“சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை,

முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்,

பத்தியை பாழில் உருத்த அப்பாவிகள்

கத்திய நாய் போல கதறுகின்றனவே”

– திருமந்திரம் பாடல் 1199


சக்தி-வாலை-கன்னி ‘ய’ குமரி – பாலா- அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி – மானோன்மணி தாய் நமது இடது கண்ணாக சந்திர கலையாக மணி ஒளியாக துலங்கும் பெண் பிள்ளை. அவள் நமக்கு சாதகமாகவே இருப்பாள். அம்மா, தாயே நீயே கதி உன் பாதமே கதி என சரணடையுங்கள். அவள் சகாயத்தால் சற்குருவை பெற்று தவமுறை அறிந்து வைராக்கியத்துடன் தவம் செய்து அவளே முக்தியடைய அமுது தருபவள் , முக்திக்கு நாயகி என்பதை அறியலாம் உணராமல் அடையலாம். தாயை அறியாதவர்கள் தாயை பணியாதவர்கள் மாயையிற் சிக்குண்டு பக்தி நெறி அறியாமல் பாழாய் போவர். அது மட்டுமின்றி தான் தான் பெரியவன் என நாய் போல் கத்துவார் முட்டாள்கள். என திருமூலர் கூறுகிறார். சக்தியை பணிந்தால் உனக்குள் சக்தி பிறக்கும். ஞானம் பெறலாம்.


நம் அன்னை வாலை அருள் பெற, ஞானம் பெற பக்தி வேண்டும். பரிபூரண நம்பிக்கையுடன் வைராக்கியத்துடன் தவம் செய்ய வேண்டும். பக்தியால் தான் நீ பண்படுவாய். பக்தி இல்லை என்றால் ஞானம் இல்லை. 


குருவிடம் பக்தி செலுத்து உருப்படுவாய். எப்படியோ பக்தி வேண்டும். அது தான் உனக்கு பணிவை கொடுக்கும். ஒழுக்கத்தை கொடுக்கும். நல்ல நெறியோடு வாழ்வாய். பத்தியே முக்திக்கு முதல் படி.


மூட நம்பிக்கையில் மூழ்கி விடாதே!? பரிகாரங்கள் செய்வது , உலக மாயையில் சிக்கி அதற்காக அலைவது பக்தி அல்ல!? ஜம்பத்திற்காக செய்யும் எந்த செயலும் பக்தியல்ல!! இறைவனின் பெரும் புகழை மனமுருகி பாடு! ஆடு ! இறைவனை பற்றி உலகுக்கு எடுத்து கூறு. ஞான தானம் செய். இறைவன் ஒவ்வொரு மனித உடலிலும் உயிராகவே ஆத்மா ஜோதியாகவே தங்க ஜோதியாகவே அருட்பெரும் ஜோதியாகவே துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறு.


இதுவே ஞானதானம். இதை விளக்கும் மெய்ஞான நூற்களை தானம் செய்.


“பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் பரத்தை கூட்டும்” என்பதே ஆன்றோர் வாக்கு. பக்தி முத்தினால் ஞானம். ஞானம் முத்தினால் முக்தி. ஒளியுடல்.

கண்ணிலே மணியிலே ஒளியிலே பக்தி செலுத்து! பணி! அன்பு செலுத்து! அவிலே அன்பு – அன்பு உ செலுத்து. அவிலே உவை செலுத்து அதுவே ஞானத்தில் பக்தி. “அ” வாகிய சூரியன் ஊடுருவ வீணும் ‘உ” விலே சந்திரனிலே.


“சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவ முக்திக்கு மூலம் அது” – அவ்வையார் பாடியருளிய அமுத மொழி.


இறுதியான உறுதியான பக்தியே , அதனால் வரும் தவமே ஞானம் பெற எதூவாகும். பக்தி இல்லையேல் ஞானம் இல்லை.


ஓம்..


🌎#உங்களுக்குஓர்உண்மைதெரியுமா?


பெரும்பாலும் ஆண் பெண்ணிடம் ஈர்க்கப்படுகிறான். அதுபோல் பெண்ணும் ஆணிடம் ஈர்க்கப்படிகிறாள். இது இயற்கை நடத்தும் சூட்சும விளையாட்டு.

உலகலாவிய உந்துதலில் வாழும்வரை அது சரியே.

ஆன்மீகம், ஆன்மா என்ற இன்னொரு உலகமும் நம்முள்ளேயும் வெளியேயும் இருக்கிறது. நாம் அறிவோம்.


அவ்வுலகில் ஆண், பெண் என்ற பேதமில்லை. வெறும் ஆன்மா மட்டுமே. தத்துவார்த்தமாய் அதுவும் சரியே.


நடுவில் கொஞ்சம் கவனமாக விழிப்புணர்வாய் ஆண் - பெண் வாழ்க்கையை நகர்த்துவோரே விசனப்படாமல் வாழ்வை வெல்கிறார்கள்.


உலகியல் வாழ்வில் சிக்குண்டு வாழ்வை வெறுக்கும் ஆண், பெண் ஒரு புரியாதப் புதிர் என்பான். அவள் ஒரு மாயை நம்பாதே என்று அனுபவச் சான்றிதல் வேறு கொடுப்பான். இன்னும் கொஞ்சம் சினம் கூடினால், பெண்ணா ? பிசாசா ? என்று கேள்வியாய் குழம்பிப் போவான்.


உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா?

பெண்ணை ஓர் ஆன்மாவாகப் பார்க்கப் பழகியவனுக்கு அவள் எந்நாளும் சக்திதான். மாயையாக மாறவே மாட்டாள். உடலளவிலும் மனத்தலளவிலும் மட்டுமே பார்ப்பவனுக்கு அவள் எந்நாளும் மாயைதான் சக்தியாக மாறவேமாட்டாள்.


ஒரு பெண், பணிவிலும் பரவசத்திலும் (பரம்பொருளின் வசம், என்றுணர்க) இருக்கும்வரை அவள், சக்தியின் வடிவம். அவள் மாயையாக மாற மாட்டாள். ஒரு பெண், பயத்திலும் பலவீனத்திலும் இருக்கும்போதுதா

ன் மாயையாக 'விசுவரூபம்' எடுக்கிறாள்.


ஒரு காலத்தில் பெண்ணை மாயையாகப் பார்த்து மருண்டவர்தான், பட்டினத்தடிகளார்.

பிற்காலத்தில் தெளிவு பெறும்போது அதே பட்டினத்தடிகளார் 'வாலை' எனப்பெறும் சக்தியாகப் போற்றிப் பாடுகிறார்.


"மூலத்து உதித்தெழுந்த

முக்கோண சக்கரத்துள்

வாலைதனை போற்றாமல்

மதிமறந்தேன் பூரணமே"


பதினெண் மையக்கணக்கு நூலிலிருந்து - இரகசியம் ஒன்று

ஆரோக்கியமான தேகம் கொண்ட ஒரு பெண் பூப்பெய்தக்கூடிய வயது 12. ஏன் 12? இதற்கு சித்தர்கள் சித்தர்கள் அளித்த விளக்கம் என்ன?


எப்படி ஒரு செடி நான்கு பருவங்களையும் கண்டபின் பூ பூக்கிறதோ , அது போல் நம் உடலில் உள்ள 12 அவயங்களும் முழு வளர்ச்சி அடைந்து தன்னை தனது அடுத்த பயணத்திற்கு தயார் செய்துக் கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு 12 வருடங்கள்.


இந்த 12 வருடங்கள் 12 இராசி/நட்சத்திர மண்டலங்களைக் குறிக்கின்றது. ஒரு குழந்தை பிறந்த பின், பூமி இந்த 12 நட்சத்திர மண்டலங்களையும் 12 முறை கடந்து முடிக்கும் பொது, உடலின் 12 அவயங்களின் அடிப்படை வளர்ச்சியும் முற்று பெரும்.


இங்கிருந்து தொடங்குவதே இவ்வுடலின் அடுத்த பயணமான தன்னுள் இருந்து மற்றொரு ஜீவனை உருவாக்கும் பணி.

இதன் காரணம் கொண்டே, உடலில் ஏற்படும் இந்த மாற்றத்தை சித்தர்கள் - " பூப்பெய்துதல்" என்றும் "பருவம் அடைதல்" என்றும் அழைத்தனர். ( தமிழ் அழகானது மட்டுமல்ல ஆழமானதும் கூட )

12 அவயங்கள் என்ன என்ன என்று கேட்போருக்கு- இதயம், மூளை, நுரையீரல், கணையம், குடல், சிறுநீரகம், கருப்பை, ஐம்புலன்கள்(5)


ஓம்..


#ஆதிபரப்பிரம்மசக்திஎன்றமனோன்மணி


இந்திய அரசு அமைப்பின் படி வி.ஏ.ஓ.தான் ஆணிவேர்;அவருக்கு மேல் வருவாய் ஆய்வாளர் எனப்படும் ஆர்.ஐ.அவருக்கு மேல் மாவட்ட துணை ஆட்சியாளர்;அவருக்கும் மேல் மாவட்ட ஆட்சியாளர்;ஆளுநர்,ஜனாதிபதி;ஐநா சபை என மிகப்பெரிய நிர்வாக இயந்திரம் செயல்பட்டுவருகிறது.


அதே போல்,நம்மை இயக்குவது நவக்கிரகங்கள்.நாம் முற்பிறவி அல்லது முற்பிறவிகளில் செய்த பாவபுண்ணியங்களு

க்கேற்ப நாம்பிறக்கும் நேரத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்டராசியில் நின்று நமது வாழ்க்கைப் பயணத்தை இயக்கும்.அனுபவம

ுள்ள ஜோதிடர்களுக்கு இது புரியும்.


இந்த நவக்கிரகங்களை இயக்குவது 27 நட்சத்திரங்கள்.(நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதே வேத ஜோதிடம்!)இந்த 27 நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்தி இயக்குபவை பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு.(நட்சத்திரங்களுக்கும் பஞ்சபூதங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குவதே பஞ்சபட்சி சாஸ்திரம்)இந்த பஞ்சபூதங்களை இயக்கும் மண்டல நிர்வாகிகளே மும்மூர்த்திகள் எனப்படும் பிரம்மா,விஷ்ணு,சிவன்.


பிரம்மா ஒரு உயிரைப் படைத்தால்,அந்த உயிருக்குத் தேவையான கல்வியைத் தரும்பொறுப்பு பிரம்மாவின் துணைவியான கலைவாணிக்குத் தரப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணு ஒரு உயிரைக் காத்தால்,அப்படிக் காக்கும்பொறுப்பு அவரது துணைவியான மகாலட்சுமிக்குத் தரப்பட்டுள்ளது.சிவன் ஒரு உயிரை அழித்தால்,ஒருவரது பிறப்புஇறப்பை நிர்ணயிப்பவராக இருப்பதால்,அந்த உயிருக்கு முக்திஎனப்படும் இறவா நிலையைத் தருவது சிவனின் துணையாகிய பார்வதிக்குத் தரப்பட்டுள்ளது.


இந்த மூவருக்கும் மேலே சதாசிவம் இருக்கிறார்.சதாசிவத்திற்கும் மேலே இருப்பவள்,இந்த மும்மூர்த்திகளை இயக்குபவள் ஆதி பரப்பிம்மசக்தி என்ற மனோன்மணி ஆவாள். அவளின் வடிவம் வாலை எனப்படும் 12 வயதுச்சிறுமியைப் போன்றது.அவளை நாம் ஒவ்வொருவரும் தரிசிக்கலாம்.

தினமும் ஒரு மணிநேரம் தனிமையில்,சப்தம

ில்லாத இடத்தில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்துகொண்டு,நமது காதுகளுக்குப் பஞ்சுவைத்து அடைத்துக்கொள்ள வேண்டும்.


மனதுக்குள் "இம்"என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.எவ்வளவு உரத்து(ஆனால் மனதுக்குள்,வாய்விட்டுச் சொல்லாமல்)க்கூற

ுகிறோமோ,அவ்வளவு நல்லது.

இப்படி இரண்டு ஆண்டுகள் ஜபித்துவந்தால்,

மனோன்மணியைத் தரிசிக்கலாம்.இன்னொரு வழிமுறை உண்டு.இங்கு அதை விரிவாக வார்த்தைகளால் விவரிக்க இயலாது.ஒரு குறிப்பிட்ட தியான முறையினால்,மூக்குக்கும் நுரையீரலுக்கும் இடையில் செய்யும் பிராணயாமத்தை,நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையில் மாற்றிட வேண்டும்.


அப்படிச் செய்தவாறு,ஒரு வரி மந்திரம் உண்டு.அதை எந்த குருவும் வாயால் நமக்கு உபதேசிக்க மாட்டார்;மனதால் உபதேசிப்பார்;அதை ஒருமுறை சொன்னாலே மனோன்மணி நேரில் காட்சியளிப்பாள்.


காட்சியளித்து,நம்மை தன்னுடன் கைபிடித்து அழைத்துச் செல்லுவாள்;இந்த பிரபஞ்சத்தில் அவள் படைத்துள்ள அத்தனைப் படைப்புகளையும் நமக்குக் காட்டுவாள்;காட்

டியப்பின்னர்,அவள் தன்னுடைய இருப்பிடத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுவாள்.அப்படிச் சென்றதும்,எதற்காக என்னைத் தேடினாய்? எனக் கேட்பாள்.நம்மால் அவளைப் பார்த்தப்பின்னர்எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது"


👏நன்றி ஷங்கரநாராயணன்🌎


🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 40 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 50 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.

 நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


🌎https://www.facebook.com/om14422019/


பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ


இது குடும்பமாக இருந்தாலும் சரி,


உறவுகளாக இருந்தாலும் சரி,


நட்பாக இருந்தாலும் சரி,


தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,


பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!


🌎நன்றி ஓம்🍓

Comments

Popular posts from this blog