👏#பிரதோஷம்நடைபெறாதசிவாலயம்!👏
பிரதோஷம் நடைபெறாத சிவாலயம்!m
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், நாகலாபுரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ளது ராமகிரி. இங்குள்ள வாலீஸ்வரர் கோயிலில், சிவனாருக்கு எதிரில் நந்திக்குப் பதிலாக அனுமன் அருள்கிறார். அடுத்ததாக நந்தி அமைந்துள்ளார். சிவன் எதிரில் நந்தி இல்லாததால் இங்கு பிரதோஷம் நடைபெறுவது இல்லை.
நந்தி தீர்த்தம்!m
கோயிலுக்கு வெளியே நந்தி தீர்த்தம் அமைந்துள்ளது. இதன் ஒரு கரையில் இருக்கும் நந்தி முகத்தின் வாயிலிருந்து தண்ணீர் குளத்துக்குள் விழுந்துகொண்டே இருக்கிறது. இதில் நீராடிவிட்டு ஸ்வாமியைத் தரிசிப்பதும் வழிபடுவதும் விசேஷ பலன்களைப் பெற்றுத்தரும் என்கிறார்கள்.
அனுமனின் கதை...m
ராமனின் வழிபாட்டுக்காக காசியிலிருந்து அனுமன் எடுத்துவந்த லிங்கமூர்த்தம் கால பைரவரின் அருளாடலால் இங்கேயே தங்கிவிட, பின்னர் கால பைரவரை வழிபட்டு வேறொரு லிங்கத்தை அனுமன் எடுத்துச் சென்றதாக இந்தத் தலத்தின் புராணம் சொல்கிறது. அனுமன் இங்கு அருள்புரிவதற்கும், இத்தலம் ராமகிரி எனப் பெயர் பெற்றதற்கும் இக்கதையே காரணமாகச் சொல்லப்படுகிறது.
சந்தான பிராப்தி பைரவர்m
இந்தக் கோயிலில் கால பைரவர், ‘சந்தான பிராப்தி பைரவ'ராக அருள்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கேவந்து இந்தப் பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையைக் கொண்டுவந்து பைரவருக்குக் கொடுத்துவிட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை ஒரு கல்லில் செய்து, அதை குழந்தைக்கு விலையாகக் கொடுத்து, திரும்பவும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள்.
வேறு பெயரும் உண்டு!
திருக்காரிக்கரை என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார், தமது தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, ‘கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்’ என்று வைப்புத் தலமாக வைத்துப் பாடியிருக்கிறார். ‘ராமகிரி’ என்ற பெயருக்கு, ராமாயண காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவமே காரணம் என்கிறார்கள்.
எப்படிச் செல்வது?m
சென்னை - திருப்பதி மார்க்கத்தில், சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில், நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் உள்ளது ராமகிரி. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உண்டு. நடை திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் 11 மணி வரை மாலை 3 முதல் 6 மணி வரை.
#குறிப்பு#
பிரதோஷம் நடைபெறாத கோவில்கள் உள்ளன என்றால் அது எந்த ஊர் என்று குறிப்பிடவும் கருத்து தெரிவிக்கவும் சர்வம் சிவார்ப்பணம்m
👏நன்றி ஷங்கரநாராயணன்🌎
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 40 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 50 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.
நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
🌎https://www.facebook.com/om14422019/
பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ
இது குடும்பமாக இருந்தாலும் சரி,
உறவுகளாக இருந்தாலும் சரி,
நட்பாக இருந்தாலும் சரி,
தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,
பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!
🌎நன்றி ஓம்🍓
Comments
Post a Comment