அங்ஙனம் நிலைபெற்று,
ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான்
சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால்,
காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு,
கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம்,
செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால்
போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப்
பருகுகிறான்.
அமரத்துவம் பெறுகிறான்.
பேரின்பத்தில் திளைக்கிறான். இதையே
உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள். இந்த
அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த
பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும்
சுழுமுனை வழியாக மூலாதாரத்தை
அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள்
என்று சொல்லப்பட்டுள்ளது. அவளோடு
அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால்
உடம்பு கொழுந்து போன்று என்றும்
பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர்
சொல்கிறார். முதல் ஆறு சக்கரங்களையும்
யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம்
போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து
செய்துவர தாண்டிவிடலாம், ஆனால்
ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது
அவ்வளவு எளிதல்ல. அதற்கு நீண்ட
பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த
குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். சக்கரங்களின் வாசல் எளிதில்
திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம்,
இந்திரிய ஒழுக்கமும் அவசியம்.
இவையெல்லாம் கூடுமானால் மெல்ல
மெல்லத் திறக்கும
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தியானம் மிக முக்கியமான ஒரு செயலாகும். தற்போது ஒரு சில இடங்களில் தியானம் சொல்லிதருவதாக பணம் சம்பாதிக்கிறார்கள்.
தியானம் என்பது அடுத்தவர் சொல்லித்தரும் விசயம் அல்ல, அது ஒவ்வொருவருக்குள்ளும் தனிமையில், அமைதியில் இருந்து முதலில் தன்னை தானேயும், பின் இந்த பிரபஞ்சம் உருவானதையும், உருவானதன் நோக்கமும், சகல ஜீவராசிகள் பிறப்பு இறப்புகளின் உண்மையையும் உணரும் நிலையாகும்.
இந்த நிலையில் இருந்து தான் நம் சித்தர்கள் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கலைகளையும் நமக்கு எழுதிவைத்தார்கள். ஆய கலைகள் 64(மருத்துவம், ஜோதிடம், மந்திரம்………,) நம் உடலுக்கும், 65 வது கலையான தியானம் உயிருக்கும், அதாவது இறைவனை உணர்வதர்க்கும் என்று சொன்னார்கள்.
தியானம் தான் தனிமனிதனின் அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும் ஒரே செயல். தியானத்திலும் சிறந்த செயல் இந்த உலகில் வேற எதுவும் கிடையாது.
தியானம் செய்வதன் மூலம் உடல், மனம் தெளிவு மட்டுமல்லாமல், ,நூலகத்திலிருந்தும் அறிய முடியாத, கூகுளில் தேடியும் கிடைக்காத, விஞ்ஞானியால் கூட கண்டுபிடிக்க முடியாத, பல விசயங்களை நம்மால் அறிய முடியும்.
எப்படி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடங்களும் உள்ளனவோ, அதேபோல் தியானத்தில் அனைத்து விசயங்களும் உள்ளன.
சுருக்கமாக சொன்னால், “தியானம் என்பது பல்கலைக்கழகம் போன்றது”.
எனவே அனைவரும் தியானத்தை கையாண்டு அதிலுள்ள அனைத்து பாடங்களையும் அறிந்து வாழ்வில் மேன்மையடைந்து இறைவன் அருளையும் பெற வாழ்த்துக்கள்.
🌎நன்றிஓம்
🌏நன்றி ஷங்கரநாராயணன்
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
https://www.facebook.com/om14422019/
🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏
Comments
Post a Comment