🔔🔔🔔திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோயில்
பேச்சுக் குறைபாடு நீக்கும் திருக்கோலக்கா திருத்தலம்🔔🔔🔔
விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள ஒலிக்குறிப்புகளே உதவுகின்றன. வாய்திறந்து, மொழி வாயிலாக பேசவும், பாடவும் இயலக்கூடிய உயிரினம் மனிதன் மட்டும்தான். ‘மனித குலத்துக்கு கிடைத்த இந்த அற்புதமான வரத்தை, எல்லோரும் பெற்று விட்டார்களா?’ என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சிலருக்கு பிறவிலேயே பேச்சு இல்லாமல் போகிறது. வார்த்தைகளை தட்டுத்தடுமாறி பேசுபவர்களும் உண்டு. நோய், விபத்து போன்ற காரணங்களால் இடையில் பேச்சை இழந்தவர்களும் இருக்கிறார்கள்.
நோயின் தன்மைக்குத் தக்கபடி மருத்துவமும், பயிற்சிகளும் இருப்பினும், தெய்வத்தை நம்பி அதற்கேற்ற கோவில்களுக்கு வந்து கை தொழுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
💰💰💰💰திருத்தல மகிமை :💰💰💰
பிறந்தாலே முக்தி தரும் திருவாரூரில் இருந்து கிழக்காக 3 கிலோமீட்டர் சென்றால், விளமல் என்ற ஊர் உள்ளது. திருவிளமர் என்ற பெயரில் விளங்கிய இந்தச் சிற்றூரில், சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம் ஒன்று இருக்கிறது. திருக்கோவிலில் சுயம்பு வடிவாக மூலவர் பதஞ்சலி மனோகரர், கிழக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார்.
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், பதஞ்சலி முனிவராக வடிவெடுத்து, சிவபெருமானின் திருநடனம் காண தவம் இருந்தார். அவருக்கு இந்த ஆலயத்தில் அஜபா நடனம் ஆடி திருப்பாதம் காட்டியருளினார் ஈசன். ஆகவேதான் பதஞ்சலியின் பெயரிலேயே இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். மண்ணால் உருவான இத்தல சிவலிங்கம், தீபாராதனையின் போது கண்ணாடி போல் பிரதிபலிப்பதைக் காணலாம்.
தென்முகம் பார்த்த சன்னிதியில் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறார் பராசக்தி மதுரபாஷிணி அம்மன். தமிழில் ‘யாழினும் மென் மொழியம்மை’ என்று புகழப்படுகிறார். அம்பிகைக்கு தேன் அபிஷேகம் செய்வது சிறப்புக்குரியதாகும். அபிஷேகம் செய்த தேனை, பள்ளி செல்லும் குழந்தைகளின் நாவில் தடவினால், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.
பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளவர்களும், நா குழறுபவர்களும், இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை உள்ளம் உருக வழிபட்டு, அபிஷேகத் தேனை தினமும் பக்தியுடன் சுவைத்தால் குறைகள் தீரும். அமாவாசை நாளில் இத்தல தீர்த்தத்தில் மூழ்கி, சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்தால், பிதுர் தோஷம் விலகும் எனவும், மோட்ச தீபம் ஏற்றினால், ஆன்மா அமைதியுறும் என்பதும் இத்தல சிறப்புகளாகும்.
இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கை, வலது கையில் திரிசூலமும், இடக்கையில் கிளியும் ஏந்தி, சிம்ம வாகனத்தில் காட்சி யளிக்கிறார். தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
Comments
Post a Comment