🌹🌹கீர்த்தி மிகுந்த கார்த்திகை நட்சத்திரம்🌹🌹🌹



கணித்தவர்:


பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்


வாட்ஸ்அப் நம்பர் 75 50 33 43 50


சிறப்புக்கள்


27 நட்சத்திரத்தொகுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது கார்த்திகை. இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷ ராசிக்கும், இரண்டு, மூன்று, நான்காம் பாதங்கள் ரிஷப ராசிக்கும் உரியவை.


கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாயும், சுக்கிரனும். பரிகார விருட்சம் அத்திமரம்.


அத்திமரம் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தால் வாழ்வில் மேன்மைகளைப் பெறலாம்.


ஓம்..


பெயருக்கான முதல் எழுத்துக்கள்


கார்த்திகை நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அ, ஏ மற்றும் ஆ. ஈ என்ற எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால் சிறப்பான வாழ்க்கை அமையும்.


ஆண் குழந்தைகளுக்கு அருணன், அரவிந்தன், அமுதவன், அழகப்பன், அஜீத்குமார். இளந்தேவன். இளையராஜா, இளவரசன், உதயகுமார், உதயமூர்த்தி, உமாமகேஷ்வரன், ஏழுமலை, ஏகாம்பரம், ஏகநாத் போன்ற பெயர்களை வைக்க வேண்டும்.


பெண்குழந்தைகளுக்கு அகிலா, அம்சா, அன்னபூரணி, அனுஷா. அனுராதா, இந்திராணி, இலக்கியா, இந்துமதி, ஈஷா உமா, உமாநந்தினி, உமாபாரதி, உத்ரா, ஊர்மிளா, எழில், ஏலவார்குழலி போன்ற பெயர்களை வைத்தால் வாழ்வில் வளம் பெருகும்.


இந்த நட்சத்திரக்காரர்கள் பசுவுடன் காட்சி தரும் விஷ்ணு உருவம் பதித்த மோதிரத்தை அணிந்துகொண்டால் வாழ்க்கையில் மேன்மைகள் பெறலாம். இவர்களுடைய அதிருஷ்டக்கல் மாணிக்கம்.


பொதுக்குணங்கள்


கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணவசதிமிக்கவர்களாகவும், நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர்

களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஆசார சீலர்கள், கடவுள்பக்தி அதிகம் உள்ளவர்கள். மத அனுஷ்டானங்களில் பிடிப்புகொண்டவர்கள் தங்களைப் போலவே மற்றவர்களும்அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.இவர்கள் பெண்களிடம் அன்போடும் நட்போடும் பழகும்இனிமையான குணம் கொண்டவர்கள். இவர்கள் பேசும்

போதும் செயல்களிலும் மென்மை வெளிப்படும். அதிகமுரட்டுத்தனமோ அல்லது வஞ்சமோ இருக்காது.


ஓம்..


அத்திப்பூவை பார்க்கமுடியாது திடீரென்று ஒருநான் மரத்தில் காய்கள் காய்த்து அதிசயப்படவைக்கும். அதுபோல கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் சாதாரணமாக இருப்பார்க ஆனால் திடீரென்று ஒருநாள் எல்லோரையும் ஆச்சரிப்பட வைக்கும் விதமாக உயர்ந்து விடுவார்கள்.


கோயில்ல எலக்டிரிகல் வேலை செய்து கிட்டிருந்தாவே உதயகுமார். கொஞ்ச நாளா அவனை பார்க்க முடியலியே என்றால்


அவனுக்கு ஹைதராபாதுல் போயிட்டான் சார் என்பார்கள்.


அவன் என்ன படிச்சிருக்கான்?


பிஈபடிச்சிட்டு வேலை கிடைக்காம கோயிலுக்கு வந்து சர்வீஸ் செஞ்சிக்கிட்டு இருந்தான். 


அவன பார்த்தா அவ்வளவு படிச்சா மாதிரி தெரியலேரொம்ப சாதுவா இருந்தான் என்று ஆச்சரியப்படுவதுகார்த்திகை நட்சத்திரக்காரர்களிடம் தான்.


சிலருக்கு கல்வியில் அத்தனை ஆர்வம் இருக்காது. அப்படியிருந்த போதிலும் வாழ்க்கைக்குத் தேவையான தகுதிகளைப் பெற்றிருப்பார்கள், இதன் காரணமாகத் தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.


சிலருக்கு அரசியலில் அதிக ஈடுபாடு இருக்கும், கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சற்று முன்கோபிகள் என்று சொல்லலாம். இவர்கள் மனத்தில் பட்டதை தேங்காய் உடைப்பதைப் போல உடைத்துப் பேசுவார்கள். இதனால் அடிக்கடி மற்றவர் மனத்தைப் புண்படுத்துவது இவர்கள் வழக்கம்.


இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அடிக்கடி கோபப்படுவார்கள், உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதை

விரும்பாதவர்கள், யாரோட உதவியும் தேவையில்லை எல்லாம் எனக்கே கொண்டவர்கள். தெரியும் மனப்போக்கு


பெரிய ஆசை கொள்கை எல்லாம் எனக்கு இல்லே, மூணு வேளை சாப்பாடு போட்டு, நல்லா பாத்துக்கிட்டா அதுவே போதும் என்பது இவர்களது குணம்.


ஜோதிட சாஸ்திரம் இவர்களைப் பற்றி


இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த திறமை சாலிகளாகவும், ஆசார அனுஷ்டானங்களில் நம்பிக்கை உள்ளவர்களாகவும், பலவிதமான கலைகளைக் கற்பதற்கும், கற்றுத்தருவதற்கும் ஆர்வம் உள்ளவராகவும், இருப்பார்கள்.


கிருத்திகை முதல்பாதத்தில் பிறந்தவர்கள் ஆசாரமுள்ளவர்கள், வித்துவான், பிரபு, தனலாபம் உடையவர், சூரன்,புத்திசாலிகள், ரோகமுள்ளவர்.


 இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆசாரமில்லாத வன், கோபம் உடையவன், வெற்றி பெறுபவன், சாஸ்திரங்களை விரும்பாதவன்.


மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் கெட்ட பெண்களின் சகவாசம் கொள்பவன், துர்புத்தி உடையவன், அதிகக் கோபம் கொள்பவன், தீமைகளைச் செய்வதில் ஆர்வம் கொள்பவன், அதிபுத்திசாலிகள்


நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் தரித்திரம் உடையவர், சாஸ்திரம் கல்லாதவர், எப்போதும் மனவருத்தம் கொள்பவர், பொறுமை இல்லாதவர், துக்கம் உடையவர், நோய்களை உடையவர் என ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.


ஓம்..


திருமணவாழ்க்கை


இந்த நட்சத்திரக்காரர்கள் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பட்டுக் கத்தரித்ததைப் போல பேசுவதால் காதல் கைகூடுவதில்லை. ஆகவே பெற்றோர்கள் பார்க்கும் வரனே அமையும், துணைவருடன் கருத்து மோதல்களைத் தவிர்க்க முடியாது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கே சில ஆண்டுகள் ஆகும்.


அவரு அப்படித்தாங்க நாம சொல்றதை புரிஞ்சிக்காம தம்போக்குல பேசிட்டே போவாரு, இது எனக்குப் பழகிப் போச்சி என்று பெண்கள் அலுத்துக் கொள்வார்கள்.


உங்க அண்ணன், அப்பா சொன்னதைக் கேட்டு ஆடுவியே தவிர, என்னிக்கி நான்சொன்னதை கேட்டிருக்கே என்று கணவனும் அங்கலாய்த்துக் கொள்வார்கள்.


இவர்களுக்குத் திருமணம் ஆகி சில வருடங்கள் கழிந்த பிறகே குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். முதல் குழந்தை ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது குழந்தை பிறப்பதும் உண்டு.


கல்லூரிக்குப் போகும் பிள்ளையிடம் டேய், ஊர்சுத்தறதுக்கு உன்ன காலேஜுக்கு அனுப்பலே. அங்கபோய் சிகரெட் பிடிக்காதே. அப்படிப் பிடிக்கறதா இருந்தா நான் அனுப்பற காசுல பிடிக்காதே, நீ சம்பாதிச்சி பிடிச்சுக்கோ என்றே அறிவுரை சொல்வார்கள்.


பிள்ளைகளின் மீது பாசம் காட்டினாலும் வெளிப்படை யாக கண்டிப்பே தெரியும்.


தொழில்


இவர்கள் மதபோதனை செய்யலாம், இசை நடனம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாகலாம். மாடலிங், பேஷன் டெக்னாலஜி போன்ற துறைகளிலும் வருமானம் ஈட்டலாம்.


ஓம்..


பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்..


கார்த்திகை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் கடல் கடந்து வேலை செய்வதை விரும்புவார்கள் இந்த நட்சந்திரத்திற்கு மெடிகல் ஷாப், நாட்டு மருந்து கடை, அறுவை சிகிச்சைத் துறை, பால்வியாபாரம் போன்றவையும் சிறப்பான எதிர்காலத்தை தரும்


காவல்துறை, ராணுவம் போன்றவற்றில் பலரை அடக்கி வேலை வாங்கும் பதவிகளில் அமரலாம். நீதித்துறை, காடுகளை பராமரிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பள்ளி மற்றும் கல்லூரிகளை நிர்வாகம் செய்வது, கணக்கியல் ஆகிய துறைகளிலும் வருமானம் பெறலாம்.


வழிபடவேண்டிய தலங்கள்


கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துன்பம் நேரும் போதும், தொல்லைகளை அனுபவிக்கும் போதும்; சில தலங்களுக்குச் சென்று வழிபட்டால் பரிகாரமாக அமையும், நல்ல பலன்கள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் ஆலயம். இது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் அமைந்திருக்கிறது.


அத்திவரதரை தரிசியுங்கள்


கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காஞ்சிபுரம்


அத்திவரதரை சேவித்தால் நட்சத்திர தோஷங்கள் விலகும்.


வரதராஜப்பெருமாள் இருக்கின்ற இடம் அத்தியூர் எனப்படும்.


வேகவதியாற்றின் கரையில் பிரம்மா செய்த யாகத்தை மெச்சிய


மகாவிஷ்ணு புண்ணியகோட்டி விமானத்தில் அவருக்குக்


காட்சி கொடுத்தார். ஐராவதம் என்ற யானை மலைபோல


நின்று விமானத்தைத் தாங்கியதால் அத்திகிரி என்று


அழைக்கப்பட்டது. பிரம்மனுக்கு வேண்டும் வரங்கள் அளித்த


வள்ளல் அவர் ஆகவே வரம் தரும் அவர் வரதர் என்றுபோற்றப்படுகிறார்.


ஓம்..


காஞ்சிபுரத்தில் அத்திமரத்தினால் செய்த வரதராஜப்குளத்தில் பாதுகாக்கப்படுகிறது. அந்தப் பெருமாள் 40 வருடங்களுக்கு பெருமானின் சிலை அந்தக் கோயில் ஒருமுறை தான் வெளியே வருவார். அவருக்கு ஒரு மண்டலம் பூசை வழிபாடுகள் தடபுடலாக நடைபெறும். அவரை தரிசிக்க வேண்டும் என்றால் பக்தர்கள் ஒவ்வொருமுறையும் 40 வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஆகவே கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் எளிதாகத் வைத்து


தரிசனம் பெறும் மற்றொரு கோயிலை நாம் இப்போதுபார்க்கலாம்.


கடலோரக்குமரன்


திருச்செந்தூர் செந்திலாண்டவர் கார்த்திகை நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு வரமருளும் தெய்வம்.


முருகப் பெருமான் கொலுவீற்றிருக்கும் ஆலயங்களில் அறுபடை வீடுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதில் இரண்டாவது படைவீடாக அமைந்து பக்தர்களை அழைத்து அருள் தரும் தலம் திருச்செந்தூராகும். தமிழகத்தின் தென்கோடியான திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந் திருக்கும் தலம் இது. முருகப்பெருமானுக்கு உரிய அறுபடை வீடுகளுள் அலைகள் தாலாட்டும் கடலோரத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் இதுவே.


இங்கு முருகன் சூரபத்மனுடன் போர்செய்து வென்ற பிறகு சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவத்தில் வைத்து வழிபட்டார். வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக சேவல் கொடி யோடும், பார்வதி அளித்த வேலுடனும் மயில்வாகனத்தில் தரிசனம் அளிக்கிறார்.


திருச்செந்தூரின் அதிசயமாகத் திகழ்வது நாழிக்கிணறு ஆகும். கடலோரத்தில் இருந்த போதிலும் கூட நாழிக்கிணற்றின் நீர் உப்புக்கரிப்பதில்லை. இந்தக் கிணற்றில் குளித்த பிறகே பக்தர்கள், எம்பெருமான் முருகனைத் தரிசிக்கச் செல்கின்றனர்.


ஓம்..


பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்


ஒரு காலத்தில் அசுரர்களாக விளங்கிய தாரகாசூரனும், சூரபதமனும் தேவர்களை அடிமைப்படுத்தி மக்களுக்கு கொடுமைபல செய்து வந்தனர். தேவர்கள் முருகப்பெருமானி டம் முறையிட்டனர். வடக்கே தாராகசூரனை வதைத்த கார்த்திகேயன். தெற்கே சூரபத்மனை வதம் செய்யப் புறப்பட்டார். இந்திரன் முருகப்பெருமானைத் தாங்கும் மயில் வாகனமானான்.


சூரபத்மனோடு போர் தொடங்கியது, ஐந்து நாட்கள் நடந்தது. ஐந்து நாட்களில் அவனது அத்தனை படைகளையும் செந்தூர்வேலவன் பொடிப்பொடியாக்கினார். அரசுன்; ஓடி ஒளிந்து கொண்டான். ஆறாம் நாள் போருக்கு வந்தான். முருகப்பெருமானின் ஆற்றலை தாக்குப் பிடிக்க முடியாமல் கடலுக்குள் போய் ஒளிந்தான். பிறகு மாமரமாக உருவெடுத்து வந்து அவரைத் தாக்கினான். முருகப்பெருமான் தனது வேலால் அந்த மரத்தை இரண்டு கூறுகளாகப் பிளந்தார். அசுரன்; தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டினான். மரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் ஏற்று அருள் புரிந்தார் கார்த்திகேயன்.


போர்வீரர்களின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு தனது வேலால் ஒரு கிணற்றைத் தோண்டினார் வேலவன். அதுவே நாழிக்கிணறு. வற்றாத சுரங்கமாக இங்கு தண்ணீர் பல நூற்றாண்டுகளாக ஊற்றெடுத்துவருகிறது. கந்தனின் கை பட்ட காரணத்தினால் கந்தக மணம் வீசுகிறது. உப்புக்கரிக்கும் கடல் நீருக்கு அருகே நல்ல நீர் ஊற்றெடுத்து வருவது அதிசயமே. முருகப்பெருமானின் வெற்றிவேலால் தோண்டப்பட்ட இது புனிதமானது. இந்த நீர் தெய்வீக ஆற்றல் நிரம்பியது என்பது பக்தர்களின் நம்பிக்கை.


கோயிலின் கருவறையில் முருகப்பெருமான் செந்தில் நாதனாக எழுந்தருளி இருக்கிறார். நான்கு கரங்களோடும் தூக்கிக்கட்டிய சடைமுடியோடும் காணப்படுகிறார்.


ஓம்..


மேற்கரங்களில் ஜபமாலை, வஜ்ரம் தாங்கி, கீழ்க்கரங்களில் அபய ஹஸ்தம் மற்றும் தாமரை ஆகியவற்றோடு தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். செந்திலாண்ட வர் தன்னைத் தரிசிக்கும் பக்தர்களின் துயரங்களைத்தீர்த்து எதிரிகளை அடக்குகிறார். தன்னடியார்களுக்கு கேட்டதை கேட்டபடியே நல்கும் வள்ளலாகத் திகழ்கிறார். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தினம் முதல் சஷ்டி திதிவரையில் சஷ்டிவிரதம் பக்தர்களினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


எல்லா முருகன் கோயில்களிலும் சஷ்டிவிரதம் விசேஷ மாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்றாலும், குறிப்பாக திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாலசுப்பிரமணி யன் புகழ்பாடி சண்முக கவசம் முழங்க வலம் வருவது கண்கொள்ளாக்காட்சி. அதுமட்டும் அல்ல, இது மெய்சிலிர்க்க வைக்கின்ற ஆன்மீக அனுபவம்.


முருகனைப் போற்றித் துதிப்பதற்கு எத்தனையோ கவசங்கள் இருந்தபோதிலும் எல்லாவற்றிலும் மேன்மை யுடையதாக கந்தர் சஷ்டி கவசம் பக்தர்களினால் போற்றப்படுகிறது. இதற்கு அடுத்த நிலையில் சுப்ரமணியர் கவசமும் முருகபக்தர்களினால் சொல்லப்படுகிறது.


கோடிக்கணக்கான உயிரினங்கள் கவலையில்லாமல் வாழ்வதற்கு கடல் இடம் கொடுக்கிறது. அதைப்போல கடற் கரைத்தலமான திருச்செந்தூரில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கின்ற முருகப்பெருமான் தன் அடியார்களின் குறைதீர்த்து கவலையில்லாமல் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுகிறார்.


தரிசனப் பலன்கள்


நீண்ட காலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் விரக்தி அடைந்தவர்கள் குழந்தை வடிவத்தில் சிரித்த கோலத்தில் காட்சி தரும் செந்திலாண்டவரைத் தரிசனம் செய்தால் விரைவில் புத்திரபாக்கியம் கிடைக்கும். கல்வியில்

பின்தங்கியவர்கள், படித்த படிப்பிற்கு மதிப்பு இல்லாத வேலையில் இருந்து காலம் கழிப்பவர்கள் ஆகியோர் செந்திலாண்ட வரைத் தரிசித்தால் மேன்மை அடையலாம். முருகப்பெருமான அழகின் பிறப்பிடம் மட்டும் அல்ல, அறிவின் பெருஞ்சுடர் அல்லவா? நமது ரிஷிகளும், முனி அவரிடமிருந்தே கவிபாடும் ஆற்றலை வரமாகப் பெற்றார்கள். உதாரணத்திற்கு நக்கீரர் முதல் அருணகிரிநாதர் வரையில் சொல்லலாம். ஆகவே கல்விக்கு மேன்மை கிடைக்க வணங்க வேண்டிய கடவுளும் திருச்செந்தூர் முருகனே.


பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்..


இது தவிர ஆண்குழந்தை பெறவேண்டும் என்று அங்கலாய்ப்பவர்கள் அழகு கொஞ்சும் திருச்செந்தூர் முருகனைத் தரிசித்தால் எண்ணம் ஈடேறும்.


அகங்காரத்தை போக்கவும், கர்மவினைகளை அழிக்கவும் மிகச்சிறந்த தலமாகத் திகழ்வது திருச்செந்தூர்.


பிரமன் மிகவும் சிரமப்பட்டு தனது கையால் நமது தலைமீது எழுதிய கர்மவினையாகிய எழுத்துக்களை ஒரு குழந்தையின் அலட்சியத்தோடு காலால் அழிக்கும் அபார ஆற்றல் முருகப்பெருமானுக்கு உண்டாம்.


ஓம்


காலங்களில் தரிசனம் செய்து மனமுருகி வேண்டினால் குறைகள் தீரும், வளம் பெருகும், பெண்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்று இப்பெருமானைத் தரிசனம் செய்தால் திருமணத் தடைகள் நீங்கும்.


திருமணக்கிளி


இங்குள்ள இறைவியின் கையில் கிளி இருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கையில் இருப்பதைப் போல இங்கும் கிளி இருப்பதன் காரணம் என்ன? சிவபெருமானே வேத சக்தியாக மாற்றம் பெற்று அம்மனின் கையில் கிளியாக அமர்ந்திருப்பதாகத் தல புராணம் தெரிவிக்கிறது.


அம்மனின் கையில் உள்ள கிளி சாதாரண கிளி அல்ல, திருமணக்கிளி. அதாவது நீண்ட காலமாக திருமணம் ஆகாத பெண்கள், திருமணம் தடைப்பட்டு மனம் வருந்தும் பெண்கள் இந்தக் கோயிலுக்கு வந்து அம்மனையும், அம்மன் கையில் உள்ள கிளியையும் தரிசித்தால் திருமணத் தடைகள் அகலும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இக்கோயிலுக்கு கார்த்திகை நட்சத்திரத்தன்றும், அது முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளிலும் தரிசனம் செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.


அசுரர்களினால் அதிகமான துன்பங்களை அடைந்த இந்திராதி தேவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி பராசக்தி யிடம் வேண்டினர். அப்போது சிவபெருமான் தவத்தில் மூழ்கி இருந்தார். அவரைச் சுற்றி தவக்கனல் தகித்தது. அம்மை தேவர்களின் வேண்டுகோளை தகுந்த நேரம் பார்த்து எம்பெருமானிடம் தெரிவித்தாள்.


ஐயனே தேவர்களின் குறையைப் போக்க வேண்டும், அவர்களது துயரத்தை நீக்கவேண்டும். அவர்கள் மனம் நொந்து, வாழ வழி இல்லாமல் என்னைச் சரண் அடைந்து விட்டனர். நீரே எனக்காக அவர்களது குறையைத் தீர்க்க வழிகாட்டவேண்டும் என்று வேண்டினாள்.


 தவம் கலைந்து எழுந்த தயாபரனான சிவபெருமான், சக்தியைப் பார்த்து, தேவி வருந்தாதே! விரைவில் தோன்றுவான்; அவன் கார்த்திகேயன்; அவனால் அசுரர்குலம் அழியும்; தேவர்கள் நல்வாழ்வு பெறுவார்கள் என்று ஆறுதல்


கூறினார். பிறகு அவர் தனது நெற்றிக்கண்ணிலிருந்து அக்கிளி ஜுவாலையை உண்டாக்கினார். அந்த நிலையில் அவருக்கு கார்த்திகை சுந்தரேஸ்வரர் என்பது திருநாமம். அவரது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அவைகள் ஒன்றாக இணைந்து கார்த்திகேயன் என்ற பெயரைப் பெற்று குழந்தையாயின. அந்தக் குழந்தையே பிற்காலத்தில் பத்மாசுரன், சிங்கமுகாசுரன் ஆகிய அசுரர்களை சம்ஹாரம் செய்தது.


என்று அந்த நெருப்பு ஜோதியின் பிரகாசம் தங்கம் போல ஜொலித்த காரணத்தினால் காஞ்சன நகரம் இத்தலத்திற்குப் பெயர் ஏற்பட்டது. காஞ்சனம் என்றால் தங்கம் என்பது பொருள். நாளடைவில் அதுவே மருவி கஞ்சனாகரம் என்று ஆகிவிட்டது.


இந்தத் தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் காத்ர சுந்தரேஸ்வரரான சிவபெருமானைத் தினந்தோறும் கார்த்திகேயனான முருகப்பெருமான் வழிபடுவதாக ஐதீகம். இப்படித்தான் இது கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்குரிய சிறப்புத் தலமாக ஏற்றம் பெற்றுவிட்டது.


மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிமீ தொலைவில் காஞ்சனநகரம் அமைந்திருக்கிறது. மெயின் ரோட்டில் இருந்த பிரியும் சாலையில் அரை கிலோமீட்டர் பயணம் செய்தால் கோயில் வரும்.


பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்..


நாகநாதஸ்வாமி திருக்கோயில்


கார்த்திகை நடசத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய மற்றொரு பரிகாரத்தலம் நாகபட்டினத்தில் உள்ள ஸ்ரீ நாகநாத ஸ்வாமி திருக்கோயில். இங்கே சுவாமிக்கு முன்புறமாக ஆதிசேஷன் எழுந்தருளி இருக்கிறார். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஆதிசேஷனுக்கு பூசை, பரிகாரம் ஆகியவற்றைச் செய்யவேண்டும்.


சிலருக்கு கல்வியில் ஆர்வம் குறையும்; வேறு சிலருக்கு தொழிலில் முடக்கம் இருக்கும்; சில பெண்களுக்கு தகுந்த வரன் நீண்டகாலமாக கிடைக்காமல் இருக்கும், சில ஆண் களுக்கு எந்த வேலையும் நிரந்தரமாக இருக்காது. இதுபோல பிரச்சனை எதுவாக இருந்தாலும் அவர்கள் நாகநாதசுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து, சரியான முறையில் பரிகார பூசை செய்து விட்டு வந்தால், அவர்களது துன்பங்கள் காற்றில் கலையும் புகைபோல கொஞ்சம் கொஞ்சமாக மறைவது உறுதி.


இந்தக் கோயில்கள் தவிர, காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கும், திருவொற்றியூர் வான்மீகநாதர் கோயிலுக்கும், கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கும் கானாட்டு முள்ளூர் கோயிலுக்கும் சென்று கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும், நன்மைகள் சேரும்.


கணித்தவர்:


பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்


வாட்ஸ்அப் நம்பர் 75 50 33 43 50


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog