🌹🌹🌹சகல சொத்து, சுகங்களை அருள்வாள் சாமுண்டி🌹🌹🌹🌹
சக்தி வழிபாடு மிகவும் மேலான இடத்தினை பெறுகின்றது. உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்தே சக்தி வழிபாடும் இருந்துள்ளதாகக் கருதுகின்றனர்.
ஆயினும் சிந்துவெளி காலத்தில் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழான பெண் முத்திரை, உலகப் படைப்புக்குரிய முதற்காரணமாக சக்தி விளங்குகிறாள் என்பதையும், அப்போது இருந்திருக்கக்கூடிய சக்தி வழிபாட்டையும் குறிக்கிறது. வேத காலத்தில் உஷை என்னும் தெய்வம் சக்தி வழிபாடிற்குரியதாகத் தெரியவருகிறது. இயற்கையோடு தொடர்புகொண்ட பூமி போன்றனவும் சாக்த தெய்வங்களாக இருந்திருக்கின்றன.துர்க்கை மகிஷாசுரன் என்னும் அசுரனை அழித்த கதையைமார்கண்டேய புராணம் கூறுகின்றது.
அதோடு, லலிதா ஸஹஸ்ர நாமம் என்ற சக்தியின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி வழிபாடும் நடைபெற்றிருக்கிறது. மகா பாரதத்தில் சக்திக்குரிய பல நாமங்
களைக் குறிப்பிடும் துர்கா தோத்திரம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
தேவி உபநிடதம், தேவியின் பெருமையைச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. குப்தர் காலத்தில் பிறவியிலே பேச்சிழந்த காளிதாசருக்கு, தனது சூலத்தினால் அவர் நாவில் குத்தி பேசும் வல்ல மையை காளி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. காளி மீது மிகுந்த பக்தி கொண்டவராதலால் அவர் காளிதாசர் என்றே அழைக்கப்பட்டார்.
இதேகாலத்தில் ஆதிசங்கரரும் சிறந்த தேவி பக்தராக இருந்ததை அவர் இயற்றிய ‘சௌந்தரியலஹரி’ வாயிலாக அறியலாம். இந்நூல், சக்தி வழிபாடு அக்காலத்திலேயே இருந்ததை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. குப்தர் கால நாணயங்களில் காளியின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தமை அக்காலத்திய சக்தி வழிபாட்டின் உயர்நிலையைக் காட்டுகின்றது.
தமிழ்நாட்டில் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் கொற்றவை வழிபாடு என சக்தி வழிபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. பாலை நிலத் தெய்வமாகிய கொற்றவை பிரிவுத் துயரை நீக்கும் தெய்வமாக வழிபடப்பட்டிருக்கிறாள். அதோடு முருகனை சங்க காலப் பாடல்கள் ‘கொற்றவையின் புதல்வா’ என்று அழைக்கின்றன.
பல்லவர் காலத்திலே கோயிற் சுவர்களில் துர்க்கை, மகிஷாசுரனை அழித்த சம்பவம் சிற்பமாகத் தீட்டப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் சக்தி வழிபாடு கடைபிடிக்கப்பட்டதற்கு அப்பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்ட விக்கிரகங்கள் ஆதாரமாக நிற்கின்றன. கம்பர், சரஸ்வதி தோத்திரம் என்னும் நூலை எழுதி சக்தி வழிபாட்டுக்கு உதவினார்.
நாயக்கர் காலத்தில் குமரகுருபரர், அபிராமிபட்டர் ஆகியோர் சிறந்த சாக்த சமயத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். 19ம் நூற்றாண்டில் பாரதியார், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் சக்தி வழிபாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். சக்தி வழிபாடு, இரண்டு வகைப்பட்டதாக அமைந்துள்ளது -- ஒன்று வாம மார்க்கம். இது வட இந்திய மரபில் வழிபாடு செய்வதைக் குறிக்கும்.
ஓம்..
இரண்டாவது தட்சிண மார்க்கம் - இது தென் இந்திய திராவிட மரபில் வழிபாடு செய்வதைக் குறிக்கும். தட்சிண மார்க்கம், ஆகம விதியைத் தழுவாது பக்தி நெறியில் மேற்கொள்ளப்படுவது. வாம மார்க்கத்தில் மந்திரம், தந்திரம், யந்திரம் என்னும் மூன்று வகையிலும் சக்தி வழிபாடு அனுசரிக்கப்படுகிறது. மந்திரம் என்பது சக்தியின் நாமங்களை உச்சரிப்பது; தந்திரம் என்பது ஆகம முறைப்படி கோயில்களில் விக்கிரகங்களை வழிபடுவது; யந்திரம் என்பது அரிசிமாவு அல்லது மஞ்சள்மாவால் யந்திரம் அமைத்து அந்த யந்திரத்திலே சக்தியை ஆவாஹனம் செய்து வழிபடுவது. இது சக்கர வழிபாடு எனவும் கூறப்படும்.
தமிழ்நாட்டில் சக்தி பீடங்களில் சுமங்கலி பூஜை சுவாஸினி பூஜை என பலவகை வழிபாடுகள் இடம்பெறுகின்றன. பெண்கள் நித்திய சுமங்கலிகளாகத் திகழ இந்த வழிபாடுகள் முக்கியம் எனக் கருதப்படுகிறது. வித்யா வழிபாடு சக்தியின் பல்வேறு நாமங்களைச் சொல்லி உபாசனை செய்தலாகும். இவ்வுலகில் சக்தியே மேலானவள் எனும் கருத்தை அது தருகிறது. தமிழ்நாட்டில் சில சக்தி பீடங்களில் சக்தியின் 1008 நாமங்களை உச்சரித்து வழிபாடு செய்தல் இதனோடு தொடர்புடையது. சக்தி (துர்க்கை),
மகிஷாசுரன் என்னும் அசுரனை அழித்ததை நினைவுபடுத்துகிறது. நவராத்திரி வைபவத்தில் 10வது நாள் ஆயுத பூஜை இடம்பெறுகிறது. ஒவ்வொரு தொழிலாளனும் கலைஞனும் தமது தொழில் கருவிகளை வைத்து வழிபடுவதே ஆயுத பூஜை. இதன் நிறைவாக துர்க்கை, மகிஷாசுரனை அழித்த கதை கூறும் நிகழ்ச்சியும் இடம் பெறும். சும்பன், நிசும்பன் என்ற அசுரர் கள் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து அரிய பல வரங்களைப் பெற்று மூவுலகங்களுக்கும் தலைவர்களாக விளங்கினர். அவர்கள் தேவர்
களைத் துன்புறுத்தி, தேவேந்திரப் பட்டினத்தைப் பறித்துக்கொண்டு அவர்களை துரத்தினர்.
தேவர்கள் பராசக்தியை சரணடைந்தனர். அவர்களுக்கு அபயமளித்த தேவி இளமங்கையாக, ஸர்வ லட்சணங்களும் கொண்டு சும்ப-நிசும்பரின் பட்டினத்திற்கு அருகிலிருந்த மலையின் மீது அமர்ந்து தவம் செய்தாள். தேவியின் தோற்றப் பொலிவில் மயங்கிய சும்ப-நிசும்பரின் ஒற்றர்கள் ஒரு பெண் பேரழகுப் பெட்டகமாய் தனித்திருப்பதை அவர்களிடம் கூறினர்.
அதைக் கேட்டு மயங்கிய அசுரர்கள் தனது சேனாதிபதிகளான சண்ட-முண்டரிடம் அப்பெண்ணை அழைத்து வருமாறு பணித்தனர். அதன்படி அவர்கள் அன்னையை இழுத்துச் செல்ல முற்பட, தேவியின் வலது தோளிலிருந்து அழகிய ஒரு பெண் கத்தி, கேடயத்துடன் தோன்றினாள். அவள் பார்வதியின் கருத்தையறிந்து ஒரு நொடியில் சண்டன், முண்டனின் தலைகளைக் கொய்தாள். அதனால் மகிழ்ந்த அன்னை ‘இன்று முதல் உன் திருநாமம் ‘சாமுண்டி’. ஸப்தமாதர்களில் ஒருத்தியாக குவலயத்தோர் உன்னை வழிபடுவர்’ என்று வரமருளினாள். இவள் ‘சிவகாளி’ என்றும் அழைக்கப்படுவாள். சிவந்த நிறத்தினள். அழகானவள். கோபம் கொண்ட முகத் தோற்றம் கொண்டவள். ரக்த சாமுண்டி, பிரம்ம சாமுண்டி எனவும் போற்றித் துதிக்கப்படுபவள். தேவாதி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் போரில் வெற்றி பெற அருள்பவள் இந்த சாமுண்டி தேவி. தாருகன் என்ற அசுரன் தாருமதியின் புதல்வனாய்ப் பிறந்தான்.
அவன் பிரம்மனை நோக்கித் தவமிருந்து தேவர்களால் மரணம் ஏற்படாத வரத்தையும், அமிர்த பலத்தையும், பிரம்ம தண்டத்தையும் பெற்று, தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். அவன் துன்பம் தாங்காமல் தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். சினம் கொண்ட பிரம்மா ‘நீ ஒரு பெண்ணால் மரணமடைவாய்’ என தாருகனை சபித்தார். மகாசக்தியான தேவி, ப்ரம்மாதி தேவர்களின் துதியால் கருணை கொண்டு ப்ராம்மி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, இந்த்ராணி, வாராஹி, கௌமாரி ஆகியோரோடு போர் புரிந்தனர். அப்போது அவர்கள் உடலிலிருந்து பீறிட்டெழுந்த ரத்தத் துளிகளி
லிருந்து எழுந்த அசுரர்கள் பரமனை எள்ளி நகையாடினர்.
அதனால் சினம் கொண்ட மகேஸ்வரன் ஸம்ஹார மூர்த்தியாய் மாறி நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து தோன்றினாள் பத்ரகாளி. மலை போன்ற கருத்த தேகம், ஆயிரம் முகங்கள், நெருப்பைக் கக்கும் ஒளி பொருந்திய கண்களுடன் உலகை நடுங்க வைக்கும் பேரொலிச்
சிரிப்புடன் தோன்றினாள். அவளுடைய உக்ர ரூபத்தைக் கண்ட பார்வதி அவளை சுய உருக்கொள்ள பணித்தாள்.
அவ்வாறு சுயஉரு அடைந்த அவளிடம் ‘ஷண்மாதாக்களோடு நீயும் சேர்ந்து எழுவராய், ஸப்தமாதாக்களாய் உலகை பரிபாலனம் செய்து வருவாய்,’ என வாழ்த்தினாள்.
சப்த கன்னியரில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல தேவர்களுக்கும் வரங்களை அருளுபவள் இவளே! இவளை வழிபட்டால், எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாள்; நமக்குத் தேவையான சகல பலங்கள், சொத்து, சுகங்களைத் தருவாள்.
தேவகணங்கள் புடைசூழ மஹா வித்யா ரூபிணியாய் சாமுண்டி தேவி தாரகனுடன் போர்புரிந்து அவனை வதைத்தாள். இதை தேவி மஹாத்மியம் 700 துதிகளால் விளக்குகிறது. மனித வாழ்வின் நோக்கமே ஒரு தேடலை நோக்கித்தான்! சில சமயங்களில் அது அன்றாடத் தேவைகளுக்காகவும், கிட்டாத எட்டாப் பொருள்களுக்காகவும் இருந்தாலும், இவையெல்லாம் கூட ஒரு விடுதலையை நோக்கித்தான் எனப் புரியும்.
இன்றைய கஷ்டங்களில் இருந்து விடுதலை, நாளையத் தேவைகளை அடைய விரும்பும் விடுதலை என இதனை வகைப்படுத்தலாம். இந்த விடுதலை வேட்கை என்பதை சற்று ஆழமாக ஆராய்ந்தால் புலப்படும் உண்மை இதுதான் - இது ஆத்மாவின் தேடல்! ஆனால், ஆத்மாவுக்கு பிறப்பிலிருந்து விடுதலை எனத்தானே அறிந்திருக்கிறோம்; பிறகு, அது ஏன் இதையெல்லாம் விரும்புகிறது? இது போன்ற எளிய ஆசாபாசங்களினால் அலைக்கழிக்கப்பட்டு, தன்னிலை மறந்த ஆத்மா, இந்த ‘விடுதலை’ என்ற ஒன்றை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ‘எதிலிருந்து விடுதலை’ என்னும் பொருளை மறந்து போய்விடுவதாலேயே இது நிகழ்கிறது என்பார்கள் ஆன்றோர்கள்.
‘தேவி மஹாத்மியம்’ என்பது என்ன?
தன்னிலை மறந்த ஆத்மா, தன் தேடலை மட்டும் விடாமல் நிகழ்த்திக் கொண்டு, படிப்படியாகத் தன்னிடம் இருக்கும் அழுக்குகளைக் களைந்து “உண்மையான விடுதலை” எது என்பதை அறிய நடத்தும் போராட்டமே, ஒன்பது நாட்களுக்குள் நிகழ்வதாகச் சொல்லப்பட்டிருக்கும் கதையே தேவி மஹாத்மியம்!
இந்தப் போராட்டம், அலுப்புத் தட்டக்கூடியதல்ல; ஓர் உன்னதமான விடுதலைப் போரைப் போன்றது இது. இதைப் படிக்கின்ற சாதகனுக்கு ஒரு தெளிவைத் தந்து, அவரது எழுச்சியை அதிகப்படுத்தி, அடைய வேண்டிய ‘விடுதலையை’ விரைவாக்கும் உன்னதமே தேவியின் திருக்கதை. பதின்மூன்று அத்தியாயங்களைக் கொண்ட தேவி மஹாத்மியம் மூன்று கதைகளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. பகவத் கீதை, திருக்குறள் போன்ற நூல்களும் இதே வகையின என்பதை பெரியோர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
ஓம்...
ஆத்மாவின் விடுதலைத் தேடலுக்கான பயணம் மூன்று முக்கிய நிலைகளைத் தாண்டிச் செல்கிறது. இடையில் சின்னச் சின்னத் தடைகள்! இவை அனைத்தையும் முறியடித்து, உண்மைப் பொருளை எப்படி அடைகிறது ஆத்மா என்பதே இதன் மையக் கருத்து. மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹா
சரஸ்வதி என்னும் மூன்று தெய்வங்களின் உதவி, ஆளுமை இவற்றால் ஒரு சாதகனுக்குள் என்ன நிகழ்கிறது என்பதைப் புரிய வைப்பதே இதன் நோக்கம்! தான், தனக்கு என வாழும் ஒரு மனிதன் எப்படி தனது உறவுகளைப் புரிந்து, அவர்களுடன் கூடியிருந்து, குலாவி, பின் ஒவ்வொன்றாய் எப்படி அவர்களும் நிலையானவர் அல்லர் எனப் புரிந்து அவற்றினின்று விடுபட்டு, திடீரென, தான் இப்போது எவருக்கும் உறவல்ல; ஆனால், அதே சமயத்தில் இந்த மொத்த உலகமே தன்னுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்னும் பேருண்மையை அறிந்து தானே ஒன்றாகவும், பலவாகவும் இருக்கும் அதிசய அனுபவத்தில் திளைத்து, ஆன்மாவை விடுவிக்கிறான் என்பதே இதன் மையப் பொருள்! இதன் முதல் நிலை, ஆதிசக்தியான விஷ்ணுமாயா, திருமாலை ஆழ்துயிலிலிருந்து எழுப்பி மது---கைடபரை அழிப்பதைச் சொல்கிறது. இரண்டாம் நிலையில், இதே சக்தி தன்னை மஹாலக்ஷ்மியாக மாற்றிக் கொண்டு மகிஷாஸுர வதம் செய்ய விரைகிறது. கூடவே, சண்ட-முண்ட வதம், ரக்தபீஜ வதம் எனச் சில நிகழ்வுகள்.
மூன்றாம் நிலையில், மஹா சரஸ்வதி சும்ப-நிசும்ப வதம் நிகழ்த்துகிறாள்! மூன்று, மூன்று தினங்களாக இந்த நிலைகள் ஒன்பது நாட்களிலும் நவராத்திரியாக கொண்டாடப்
படுகிறது. இறுதி வெற்றியாக விஜயதசமி, பத்தாம் நாளன்று! இயற்கையின் சக்திகளை முறியடித்த சாதகன், தன் விடு தலையை வெற்றிக்கனியாக அடைகின்ற நாள். எண்கள் அனைத்தையும் இந்த ஒன்பதுக்குள் அடக்கிவிட முடியும். அப்படி எல்லாவற்றையும் அடக்கியபின், பத்தாவதாக வெற்றிதானே! இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள். கறுப்பு நிறமானவள். பயங்கர தோற்றம் கொண்டவள். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவள். பாம்புகளை உடலில் அணிந்திருப்பாள். ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண் களைக் கொண்டிருப்பாள். விரித்த சடையில் கபாலம் தரித்தவள். மூன்று கண்கள், கோரைப்பற்கள் கொண்ட வாய், மண்டை யோட்டு மாலை அணிந்தவள். திருக்கரங்களில் சூலாயுதமும், கபாலமும் ஏந்தி இருப்பாள். இத்தேவி பிடாரி (பீடா=துயரம், ஹாரி=நீக்குபவள்) என்று பண்டை நாளில் வணங்கப்பட்டாள்.
பிடாரிக்கோயில்கள் பற்றி ஏராளமான கல்வெட்டு குறிப்புகள் பல்லவ, சோழர், பாண்டியர், சாசனங்களில் கிடைக்கின்றன. உடலுக்கும், ஆன்மாவுக்கும் ஏற்படும் துயரங்களை நீக்கும் அதிதேவதையாக சாமுண்டா தேவி போற்றப்பட்டாள். அக்னி கிரீடத்துடன் கூடிய இவ்வம்மையே மாரியம்மன் உள்பட பல்வேறு கிராம தேவதையாக உள்ளாள். தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கள்ளர் பசுபதிகோயிலில் சாமுண்டா தேவிக்கு, சோழர் காலத்தில் மிகப்பெரிய தனித்த ஆலயம் இருந்திருக்கிறது. தேவி ஒருத்தியே வடிவங்கள் பல தாங்கி மனித குலத்திற்கு ஏற்படும் இன்னல்களை நீக்கி, கருணை மழை பொழியும் தாய்மையின் உருவமாக கொண்டாடப்பட்டதே சப்த மாதர் என்ற சப்த மங்கையர் என்ற சப்த கன்னியர் வழிபாடாகும். சப்தமாதர் வழிபாடு இன்றும் கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்புறங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. இவள் சீற்றம் கொண்டால் ஊரில் கலகம் உண்டாகும். காளியின் கதையைக் கேட்டும், கவரிமான் விசிறியால் அன்னைக்கு விசிறியும், தயிர் அபிஷேகம் செய்தும் அவல், சேமியா திண்பண்டத்தை நிவேதனம் செய்து எளியோர்க்கு அளித்துத் துதித்தால் தேவி மனம் குளிர்வாள். இவளை வணங்குவோர் வாழ்வில் எத்தகைய துன்பமும் எளிதில் தீரும்.
த்யானம்
சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டிதாத்யேயே சாமுண்டா ரக்தவிக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தாம்புஜை
நிர்மாம் ஸாபிமனோஹரா க்ருதிதரா ப்ரேதே நிஷண்னா சுபா!
ரக்தாபா கல சணட முண்ட தமணீ தேவி லலா போத்பவா
சாமுண்டா விஜயம் ததாது நமதாம் பீதிப்ராணா சோத்யதா
மந்த்ரம்
ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஔம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:
காயத்ரி
ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: சாமுண்டா ப்ரசோதயாத்
தேவி மஹாத்மியத்தில் சாமுண்டா
தம்ஷ்ட்ரா கரால வதனே சிரோமாலா விபூஷணே
சாமுண்டே முண்ட மதனே நாராயணீ நமோஸ் துதே.
தெற்றிப்பல் திருவாயும், முண்டமாலையை அணிந்தவளும், முண்டனைக் கொன்றவளுமான நாராயணீ உனக்கு நமஸ்காரம். இவள் மிகுந்த கோபம் கொண்டவள். சண்டா என்று சங்கு புஷ்பத்திற்குப் பெயர். அந்த புஷ்பத்தில் பிரியமுள்ளவள்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment