🌹அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்🌹


🌹காதலாகிக் கசிந்து, கல்லில் வடித்த பக்தி!🌹




கண்களை மூடினாலும் கண்ணுக்குள் கம்பீரமாக எழுந்து நிற்கிறது அந்த விஜய நாராயணர் ஆலயம். அந்தக் கலைக்கோயிலைக் கண்டு வந்தது முதல் அதே நினைவில் உலவுகிறாள் அவள். அத்தனை ஆழமாக அவன் நினைவுகளில் பதிந்து விட்டது அந்த அபூர்வ ஆலயம். அப்படி ஆலயம் கண்டு, புளகித்து, புல்லரித்துப் போயிருப்பவள் - ஹொய்சள நாட்டின் (கர்நாடகம்) கலையரசியான சாந்தளாதேவி.

ஓ! எத்தனை அற்புதமான ஆலயம்! கல்லைக் களிமண்ணாய்ப் பிசைந்து, கனவுகளைக் குழைத்துக் கவிதை எழுதி வைத்தது போல் எத்தகு சிற்பத்திறன்! கேசவப் பெருமாளுக்கே கல்லில் ஒரு காவியம் அல்லவா சமைத்துவிட்டார் மன்னர் விஷ்ணு வர்த்தனர்.

அந்த அற்புத ஆலயத்தை சுற்றிக் காட்ட, மன்னர் விஷ்ணு வர்த்தனர், தன் கையைப் பற்றி எத்தனை குதூகலமாக அழைத்துச் சென்றார். வாத்சல்ய மணம் கமழும் அந்த ஆர்வப் பரபரப்பு. காவியம் ஒன்றிற்கு வரி வரியாக வியாக்கியானம் செய்வது போன்று அந்த ஆலயத்தில் ஒவ்வோர் அடியாக நின்று, ஒவ்வொரு சிற்பம் பற்றியும் விஷ்ணு வர்த்தனர் அளித்த விளக்கங்கள்... அந்த ரசானுபவம் அவள் இதயத்தை என்னவோ செய்தது!

நட்சத்திர வடிவில் கருவறை அமைக்கப்பட்டு, முன்புறம் சதுரவடிவ மண்டபத்துடன் இணைக்கப்பட்ட அந்த ஆலய சுவரில் அடித்தளத்திலிருந்து அடுக்கடுக்காக யானை வரி, மகர வரி, ஹம்ச வரி, புரவி வீரர், யானை வீரர், தெய்வ வடிவங்கள், வேட்டைக்குச் செல்வோர், நடனமாதர், பாணர், விதவிதமான இன்னிசைக் கருவிகளை இசைப்போர் என்று காட்சிகள் எல்லாம் எழிலுடன் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருந்தன. செடிகளும் கொடிகளும் மலர்களும்... கல்லில் ஒரு பூக்காடு! வாடி உதிர முடியாதபடி, அந்த மலர்களுக்கெல்லாம் சிற்பி அமரத்துவம் அளித்திருக்கிறான்.

ராமாயண, மகாபாரதக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டே வந்த அவள் ஓரிடத்தில் வைத்த விழி அகற்ற இயலாமல் நின்று விட்டாள். அரசவை அப்படியே இடம் பெயர்ந்து கோயிலுக்குள் வந்து விட்டது போலிருந்தது! அரியணையில் மன்னர் விஷ்ணு வர்த்தனர்; அருகில் பட்ட மகிஷியாக அவள், சாந்தளாதேவி.அப்படியே ஆடியில் பிரதிபலிப்பது போல் அந்த அரசவைக் காட்சி, சிற்ப விசித்திரமாக்கப்பட்டிருந்த நேர்த்தி கண்டு அவள் வியந்து நின்றாள். அதற்கும் மேலாக, மன்னர் விஷ்ணுவர்த்தனர் தன்மீது காட்டும் அன்பை எண்ணி அவள் மெய்சிலிர்த்துப் போனாள்.

அரச ஆணையில்லாமல் எந்தச் சிற்பியாவது அரசனையும் அவன் தேவியையும் சிற்பமாக்க முடியுமா? மன்னர் விஷ்ணு வர்த்தனரின் மனம் கடலளவு பரந்து கிடப்பது என்பது அவளறியாததல்ல. நடன மாது என்றாலே, ஒரு கணிகையாகத்தான் (விலைமகளாக) இருக்க முடியும் என இழிவாக எண்ணும் உலகில், ஒரு நாட்டியக்காரியான தன்னை இதய சிம்மாசனத்தில் ஏற்றது மட்டுமல்லாமல், கொற்றவன் தேவியாகக் கொலு மண்டபத்தில், அரியணையில், அருகமரும் பட்டத்தரசியாகவும் ஆக்கிய பண்பாளராயிற்றே அவர். ஆயினும் ஆயிரமாயிரம் பேர் வந்து வணங்கும் சென்ன கேசவர் ஆலயத்தினுள் காலகாலத்துக்கும் வீற்றிருக்கும் பாக்கியத்தை அவர் அளிப்பார் என்பது அவள் கனவிலும் கருதாதது.

அரசன் பக்கத்தில் அரசி இருப்பது போன்று சிற்பம் வடிப்பது அத்தனை வியப்பிற்குரிய ஒன்றா என்ன? ஆம்; வியப்பிற்குரியதுதான்! காரணம், சாந்தளாதேவி - சமண சமயத்தினள்!
மன்னர் விஷ்ணுவர்த்தனரோ வைணவர். அதுவும் ஆச்சார்ய புருஷரான ஸ்ரீராமானுஜராலேயே வைணவராக்கப்பட்டவர். வைணவ சித்தாந்தம் ஒரு புதுவெள்ளம்போல் மக்கள் மனங்களிலே பிரவகித்துக் கொண்டிருந்த வேளை அது. புராதன சநாதன தர்மத்தின் வேரறுப்பவையாக இதர மதங்கள் இகழப்பட்ட வேளையும்கூட.

ஆனால், ஹொய்சால மன்னன் பிட்டிகன், பெயர் மாறி விஷ்ணுவர்த்தனராக ஆனபோதிலும் சாந்தளாதேவியின் மதச் சுதந்திரத்தில் அணுவளவும் தலையிடவோ, தடையிடவோ இல்லை. அவர் நயத்தக்க நாகரிகம் உடையவர். மதம் என்பது மனம் சம்பந்தப்பட்டது. அதில் எந்த மாற்றம் நிகழ்வதானாலும் இயல்பாகவே நிகழ வேண்டும். அதிகாரத்தாலோ, ஆயுதங்களாலோ எந்த இயல்பான மனமாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. மண்ணைக் கொத்தினால் பயிர் வளர்க்கலாம்; மனத்தைக் கொத்தினால் துயர் மட்டுமே வளர்க்க முடியும் என்பது அவர் அறிந்த உண்மை.

காட்டுத்தனமாக எந்தக் கருத்திலும் விழுந்து மேய்வது, எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்காதபோது நெறிமுறைக்குள் அடங்கிவாழும் அமைதிப் பக்குவமின்றியிருப்பது, உண்மை தேடும் உள்ளுணர்வின்றி, உந்தியெழும் மந்தி மனத்தோடு அவற்றைக் கழற்றியெறிந்து ஓடுவது என்றிருந்த சிலர், பொய் வேஷம் கட்டி ஆடினர். ‘சாந்தளாதேவி பட்டமகிஷியாக அரியணையில் அரசருக்கருகில் அமரக்கூடாது’ என்று மூலைக்கு மூலை மூர்க்காவேசமாகப் புலம்பித் திரிந்தனர்.

இப்படியொரு வேளையில் எத்தனை அழுத்தம் திருத்தமாகக் கால காலத்துக்கும் நின்றிலங்கும் கற்கலைக்கூடத்தில், கருத்தைக் கவரும் சிற்ப சிம்மாசனத்தில் அவளைக் கொலுவிருக்கச் செய்துவிட்டார், மன்னர் விஷ்ணுவர்த்தனர்!


சாந்தளாதேவி இதயத்தில் ஊற்றெடுக்கும் இன்ப நதியை அப்படியே திருப்பிவிட்டு, மன்னர் விஷ்ணு வர்த்தனரின் பாதகமலங்களை அபிஷேகித்து மன ஆராதனை நிகழ்த்தினாள். மகிழ்ச்சி கரை புரண்டோடியது. உடனே விஜயநாராயண சென்ன கேசவர் ஆலயத்தை நிர்மாணித்த தலைமைச் சிற்பி தட்சிணாச்சார்யனை வரவழைத்தாள். கேசவப் பெருமாளுக்கு தன் சார்பில் மற்றுமொரு ஆலயத்தை அவர் நிர்மாணித்துத் தரவேண்டும் என்று வேண்டினாள்.

தட்ட முடியுமா? அரசியின் வேண்டுகோள், அரச கட்டளைக்குச் சமமாயிற்றே! தட்சிணாச்சார்யனும் பேருவகையுடன் சம்மதித்தார். அடுத்த சில நாட்களில் ஆலய நிர்மாணப்பணிகள் துவங்கி விட்டன. அதுவும் அந்த விஜய நாராயண சென்ன கேசவப் பெருமாள் ஆலயத்தின் அருகிலேயே தென்புறத்தில் உருவாகத் தொடங்கியது.

‘‘எதற்கு இப்படி இரட்டைக் கோயில்?’’ மன்னர் விஷ்ணுவர்த்தனர் அன்றிரவு, பள்ளியறையில் இந்தக் கேள்வியை சாந்தளாதேவியிடமே எழுப்பினார்.
‘‘எல்லாம் காரணமாகத்தான். என் மீதுள்ள அன்பை வரலாற்றின் பக்கங்களில் அழியாத எழுத்துக்களோடு தாங்கள் ஆழமாகப் பதிக்கும்வகையில், தாங்கள் சென்னகேசவர் ஆலய சிற்ப மண்டபத்தில் சிம்மாசனம் அமைத்து என்னைக் கொலுவேற்றி விட்டீர்கள்! இந்தச் சமண மதத்து சாந்தளாதேவி, மன்னர் விஷ்ணுவர்த்தனர் பால் கொண்ட அன்பின் அடையாளமாக விஷ்ணுவுக்கு ஒரு தனிக்கோயில் எழுப்பினாள் என்றும் நாளைய வரலாறு சிலாகிக்கட்டுமே...! இந்தத் தேசத்துக்கு, மக்களுக்கு, வைதீக சநாதன தர்மத்து வைணவ சித்தாந்தத்துக்கு, நான் சமர்ப்பிக்கவிருக்கும் ஓர் எளிய காணிக்கை இது’’ என்றாள் சாந்தளாதேவி.

இரட்டைக் கலைச் செல்வம் போல் சென்ன கேசவப்பெருமாள் ஆலயத்தின் அருகிலேயே எழுந்த அந்த அழகிய சின்னஞ்சிறு கோயில், பெருமாளுக்கு மட்டும் என்றில்லாமல், விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணர் என்று அனைத்து தெய்வ மூர்த்தங்களுக்கும் இடமளிக்கும் அற்புத ஆலயமாக உருப்பெற்றது.

இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் நிறுவ, திருமால் திருமேனியை வடிக்கும்போதுதான் அந்த விசித்திர, அசம்பாவித, அற்புதம் நிகழ்ந்தது.

சங்கு சக்கர கதாபாணியாகத் திருமால் கம்பீர அழகுடன் கல்லிலே கலைக்கோலம் காட்டி எழுந்தருளி விட்டார். தட்சிணாச்சார்யனின் உள்ளம் பூரித்தது. ஒரு பூரண கலைப்படைப்பில் தெய்வம் ஆவாகனம் நிகழ்ந்துவிட்ட களிப்பில், அவருடைய நெஞ்சக் கடலில் சந்தோஷ அலைகள் ஆனந்த நாட்டியம் ஆடின. கர்வத் திவலைகள் சிதறின.
இந்தக் கர்வம்... தலைக் கனத்தின் வெளிப்பாடு அல்ல, கலைக்கனத்தின் வெளிப்பாடு!

தான் பெற்ற மகவைக் கண்டு, ‘‘என்னைப் பெற்ற ராசாவே’’ என்று கொஞ்சும் தாயுள்ளம்போல், ‘என்னைப் படைத்தவனை இதோ நான் படைத்துவிட்டேன்’ என்றெண்ணிக் களித்தது தட்சிணாச்சார்யனின் கலையுள்ளம். அப்போது ஒரு சிறுவன் அங்கே வந்து நின்றான். ‘‘இந்தச் சிலையை யார் செய்தது? இதற்கு எப்போது கண் திறப்பு...?’’ என்று கேள்வி எழுப்பினான்.
‘‘நான்தான் செய்தேன். இதோ கண் திறப்பு நிகழப்போகிறது. நல்ஓரை வரவுக்காகவும் அரசி சாந்தளாதேவியாரின் வரவுக்காகவும்தான் காத்திருக்கிறேன்...’’
‘‘நல்லவேளை, பெரும் தவறு நிகழாமல் தடுக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது! குற்றமுள்ள கல்லில் திருமால் திருமேனி அமைவது தகாதய்யா...’’ என்றான் சிறுவன்.

‘‘சிறுவனே, என்னடா பிதற்றுகிறாய்! தட்சிணாச்சார்யனைப் பார்த்தா குற்றமுள்ள கல்லில் சிற்பம் வடித்தவன் என்று கூறுகிறாய்? சிற்பிகள் கூட்டத்து சிங்கங்களையெல்லாம் வெற்றிகண்ட, சரபப்பட்சி போன்றவனடா நான். தட்சிண பாரதச் சிற்பிகள் அனைவருமே தலைமைச் சிற்பி என்று என்னைக் கொண்டாடுவதை அறியாமல் என் திறமையைக் குறை கூறுகிறாயா?’’ என்று கொதித்தான் தட்சிணாச்சார்யன்.

‘‘ஐயா, சினம் எதற்கு? சிங்கத்தை வெல்கிற திறமை சரபப்பட்சிக்கு உண்டுதான். அந்த சரபப் பட்சியைத் தன் அலகில் குத்தித் தூக்கிச் சென்று குதறிவிடும் ஆற்றல், கண்டபேருண்ட மாபறவைக்கு உண்டு என்பது தாங்கள் அறியாததா? விஜயநாராயணர் ஆலயத்தில், அற்புத சங்கிலிக் கோவைச் சிற்பத் தொடரைத் தாங்கள் சிருஷ்டித்துள்ளீர்களே, அது உயிர்களின் அழிவுத் தொடர்ச்சியைக் குறிக்கும். அதில் பன்றியை விழுங்கும் மலைப்பாம்பு, அதை நசுக்கும் யானை, யானையை அடக்கும் சிங்கம் என்று இந்தக் கண்டபேருண்ட மா பறவைவரை ஒன்றை ஒன்று வென்றழிக்கும் வரிசையில் சிற்பத் தொடரை அமைத்துள்ள தாங்கள் வீண் பெருமை பேசலாமா? இதோ பாருங்கள், இச்சிலையின் குறையை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்’’ என்ற அச்சிறுவன், ஓர் உளியை எடுத்து, அத்திருமால் சிற்பத்தின் நாபிக்கமலத்தில் ஒரு தட்டுத் தட்டினான். உள்ளிருந்து பொத்தென்று ஒரு தேரை குதித்தோடியது!

நெஞ்சில் நெருப்புத் துண்டுகள் விழுந்ததுபோல் பதறித் துடித்தார் தட்சிணாச்சார்யன். ‘தேரை இருந்த கல்லிலா நாம் திருமாலை எழுந்தருளச் செய்து விட்டோம்!’ என்று துயருற்ற அந்த மாகலைஞர், மறுகணமே தன் வலக்கரத்தைத் துண்டித்துக் கொண்டு விட்டார். குருதி பீரிட்டெழ, அதில் அந்த மாகலைஞன் தன் குற்றத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்.
‘‘ஐயோ! அப்பா! ஏன் இப்படி அவசரப்பட்டு விட்டீர்கள்’’ என்று அலறினான் அந்தச் சிறுவன்.

‘‘அப்பாவா!’’
ஆம்; அவன் மகாசிற்பி தட்சிணாச்சார்யனின் மகன்தான். மனைவியை கர்ப்பநிலையில், ஊரில் விட்டுப் பிரிந்து வந்த அவர், தொடர்ந்து ஆலயத் திருப்பணிகளிலேயே கவனமாக இருந்து விட்டார். அதை ஒரு தவம் போலச் செய்பவர் அவர். மகன் பிறந்து வளர்ந்த விவரமே அவருக்குத் தெரியாது. தந்தையைப் பார்க்கும் ஆவலில், அன்னையின் அனுமதி பெற்று வந்திருந்தான் அந்த அருமைச் செல்வன். வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டது.

தந்தையும் மகனும் உணர்வுபூர்வமாக நெகிழ்ந்து, நேசம் பாராட்டிய நிலையில், அரசி சாந்தளாதேவி அங்கு வந்து நின்றாள். நிலை உணர்ந்து மலைத்தாள், மனம் தவித்தாள்.
குறைமதி மாந்தர், கலவரம் புரியக் காரணம் தேடிக் காத்திருந்தோர் அனைவருக்கும் இது அரிய வாய்ப்பாக அமைந்தது. ‘‘சமண மதத்தைச் சார்ந்தவள் எழுப்பும் ஆலயத்தில் இறைவன் எழுந்தருள சித்தம் கொள்ளவில்லை. அதனால்தான் இந்த அசம்பாவிதம்’’ என்றனர். ‘‘இதன் பிறகாவது மன்னர் விஷ்ணுவர்த்தனர் மனம் மாற வேண்டும்; சாந்தளாதேவி பட்டத்தரசி இல்லை என்றாக்க வேண்டும்’’ என்று வாதிட்டனர்.

பிரச்னை பெரிதாகி, நாள்தோறும் கலவரம் நீடித்தது. மதத்தின் பேரால் மக்கள் நடுவே அமைதி குலைவதை சாந்தளாதேவி விரும்பவில்லை. தீர்வு காண விரும்பி, உண்ணா நோன்பினை மேற்கொண்டாள். அது பல நாள்கள் நீடித்து, அவள் ஆன்ம நிவேதனம் செய்யும் நிலையில் முடிந்தது. ஆம்; சாந்தளாதேவியின் உயிர்ப்பறவை விண்ணுலகம் நோக்கிப் பறந்தது. உலகில் சாந்தமும் சமாதானமும் நிலவ அவள் செய்த உயிர்த் தியாகத்தை நினைவு கூர்ந்தபடி, அவள் எழுப்பிய அந்த கப்பே சென்னிகராயர் திருக்கோயில் (கப்பே: தவளை, தேரை) கர்நாடக மாநிலத்தின் சிற்ப விசித்திரமாகப் பேலூரில் இன்றளவும் காட்சியளிக்கிறது.

ஓம்..
🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog