🌹யோக நித்திரை🌹🌹🌹

 

🌹யோக நித்திரை🌹🌹🌹



யோக நித்திரை

(உடல், மனத்தைத் தளர்த்துதல்)

தளர்த்துதல் என்?



அன்றாட வேலைகளால் தசைகள் இறுகுகின்றன. சிலபல அசைவுகளால் விறைப்புறுகின்றன. இவற்றைத் தளர்த்திக் கொள்ளுவது நல்லது, உடலுக்கு அமைதி தரும். இல்லையேல் பழுதுற வாய்ப்பாகும். வலிகள் உண்டாகும். தசை முறிவு, சுளுக்கு ஏற்படவும் வாய்ப்பாகும். இதைத் தவிர்க்க தளர்த்திவிட்டுக் கொள்வது சிறப்பு.

உடலும், மனமும் சாந்தம் பெற இது உதவி செய்யும். இதை அறிந்தவர் தம், உடல், மனத் திறமையை வீணாக்கமாட்டார். தளர்த்திக்கொள்ளல் (warming up) உடற்பயிற்சி இல்லை. நீட்டி நெளிவெடுத்தல், கருக்கத்தை விரித்து விட்டுக் கொள்ளுதல் எனலாம்.

உடலைத் தளர்த்துதல்

சவாசனத்தில் படுத்துக் கொள்ள வேண்டும். மல்லார்ந்தபடி சும்மாக் கிடத்தல், இடதுபுறமும் வலது புறமும் கால்களையும், கைகளையும் தீட்டி உடலை முறுக்கி, நன்கு புரண்டு புரண்டு எளிது செய்த பிறகு, சவாசன நிலைக்கே வந்து அசைவின்றிக் கிடக்கவும். உடலை. தலையிலிருந்து பாதம் வரை இருக்கும் எல்லாத் தசைகளையும் தளர்த்திவிட்டுக் கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு பகுதியையும்


தளர்த்தி விட்டுக் கொள்ளத் தனித்தனிப் பயிற்சிகள் உள்ளன. கழுத்தை அசைத்துச் சுழற்றி மெதுவாகச் செய்து தலை, கழுத்து தளர்த்தப்படும். மணிக்கட்டு சுழற்றப்பட்டு முழங்கையை மடக்கி நீட்டி சுழற்றியும், தோள்களை சுழற்றி, உயர்த்தித் தாழ்த்தி, முன்னாலும், பின்னாலும் அசைத்து கைகளைத் தளர்த்திக் கொள்ளலாம்.

கால்கள், பாதங்களைச் சுற்றி முழங்கால்கள் உயர்த்தி மடக்கி நீட்டித் தரையில் லேசாய்த்தட்டி கண்டச்சதை முதலியவற்றுடன் தளர்த்தப்படும் இன்னும் பல அசைவுகள் செய்வர் இடுப்பைத் தூக்கி வளைத்தும், நின்று இடுபபைச் சுழற்றியும், மேல் உடம்பைச் சுற்றியும் தளர்த்துவர். இதனால் உடல் களைப்புத் தீரும். மீண்டும் வேலைக்குத் தயாராகிவிடுவர்.

மனத்தால் உடலை, சவாசனத்தில் கிடந்தபடி, ஒவ்வொரு அங்கமாகப் பிடித்துவிட்டும் தளர்ததிக் கொள்வர். யோக சாதகர் இப்படித் தளர்த்துவதை ஒரு கலையாக ஆசனங்களுடன் பழகிக் கொள்ளுவர் அதோடு உடல் கிடக்க, பிடித்துவரும் (massage) கலையும் யோகிகள் அறிவர். இருக்க வேண்டியநிலையில் உடலை வைத்துக் கொள்ள முடியும்.

மனத்தைத் தளர்த்துதல்

அமைதி நம் அனைவருடைய தேவை உடலைத் தளத்துதல் உடலின் டென்ஷனை விடுவிப்பதே (relax) மனத்தைத் தளர்த்துதல் மன இறுக்கத்தைக் (tension) குறைப்பதே கவலை, கோபம், பரபரப்பு,. பட படப்பு நீங்கினால் அமைதி, தெளிவு, உணர்வு வசப்படுவது டென்ஷன். மனத்தை லேசாக வைத்துக் கொள்ளுதல் இறுக்கமின்றி இருந்தலாகும். எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும். மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். உடலைத் தளர்த்துவது உடலோடு சேர்த்து மனத்தையும் லேசாக்குவதே.

ஒரு குழந்தையை சமாதானப்படுத்துவது போன்றதே மனத்தைத் தளர்த்துவதும். மனம் தளரும் போது உடலும் சாந்தம் அடைகிறது. மனத்தைத் தளத்துவது என்பது களைப்பைப் போக்குவது. ஒன்றையும் எண்ணாமல், விருப்பப்படி மனம் இருக்கும்போது தனருகிறது.

இயற்கை அழகை ரசித்தல், நல்ல இசையைக் கேட்டல், உடலை நீட்டித் தரையில் சமநிலையில் சாய்ந்துக் கிடத்தல், உடலில் பிராணனை சமமாகப் பரவச் செய்கிறதால் மனமும் தளர்ந்து சாந்தம் அடைகிறது. குப்புற மகராசனத்தில் படுத்தும் உடற்பயிற்சி முடிந்ததும் அமைதியாக கிடக்கலாம். சவாசனத்தில் மல்லார்ந்து சிலு வென்ற காற்றில் தீவிரமின்றி மனத்தை லேசான மகிழ்வான எண்ணங்கள் இட்டபடிக் கிடப்பது நல்லது. ஏதோசெய்த பின், சில உறுப்புகளில் திரண்ட பிராணன உடலெங்கும் பரவும்போது இதயம் அமைதி பெறும்.




சில மூச்சுகளை இழுத்து விடலாம். விருப்பமான நினைவுகளில் சஞ்சரித்தும், ஏதோ ஓர் இசையை இசைத்தும், நல்ல ஜோக்குகளை எண்ணிப்பார்த்தும் அப்படியே மௌனமாகிக் கிடப்பது போன்றவை நல்ல ரிலாக்ஸிங் நுணுக்கங்கள். அதே நிலையில் தூங்கிவிட்டாலும் நலமே. தூங்கி விடாமல் ஃப்ளோட்டிங் நிலையில் கிடப்பது மிக சுகம்.

15லிருந்து 30திமிடம் இப்படி இருக்கலாம். பரந்த வானில் ஒரு பறவையான நீங்கள் பறப்பதுபோல, பாவனை செய்து பார்த்துக் கொண்டிருங்கள். பரந்த கடலில் சின்னப் படகில் போய்க் கொண்டே இருக்கிறீர்கள் உங்கள் விருப்ப தெயவத்துடன் பிரியமாகப் பேசிக் கொண்டிருக்கிறர்கள். இப்படி மிதக்கும் எண்ணங்கள் மனத்தை நன்கு லேசாக்கி அமைதி தரும்.

யோக நித்திரை

உடல், மனம் இரண்டையும் ஒரே நேரத்தில் தளரச் செய்து உடலை விட்டு நாம் வேறான ஆத்மப் பொருள் எனத் தனியே உள்ளே இறங்கச் செய்து அமைதி அளிக்கும், நம் நோய்களைத் தீர்க்கும் பிராணபலத்தால் உடல் உறுப்புகள் எல்லாம் நலம் பெறும். தளர்த்து பிறகு பலம் பெறும் செயல் நுணுக்கமே யோக நித்திரை.

எந்த பாகத்திலாவது காற்று தேங்கி இருக்கலாம். நாடிகளில் ஏதாவது நகங்கி இருக்கலாம். காற்றைப் பரவச் செய்யவும், நாடிகளைத் தம் வடிவை அடையச் செய்வதற்காகவும், இம்மாதிரி தளர்த்திவிட்டுக் (relaxation) கொள்ளும் நுணுக்கங்களையும் யோகநித்திரை போன்றவற்றையும் கையாள வேண்டியவராக இருக்கிறோம். நாம் எப்படிப்பட்ட உணர்வுகளில் இருந்தோமோ. என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தோமோ அதே நிலையில் இல்லாமலும், அதே சூழ்நிலையில் சிக்கியிராமலும் முற்றிலும் விலகி விட்டாலேயே நம் இறுக்கமான நிலை மாறிவிடும்.

சூழ்நிலைக்கேற்ப நம் மனமும் உடலும் பாதிக்கப்படுகின்றன. இதைத் முடிவதில்லை. இதுவே, உடல், மன இறுக்கத்தின், விறைப்பின் காரணம். ஆகவே நம் சூழ்நிலையை மாற்றிக் கொள்ளுவதும், இருக்கிற நிலையிலிருந்து உடலை விடுவிப்பதும் மனத்துக்கும் இதமாகும்.

அலுவலகத்தில் உள்ளவரையிலும் பலப்பல விதங்களில் உண்டாகிய டென்ஷன், வீடுதிரும்பி மனைவி முகத்தை குழந்தையின் வடிவைக் காணுகையில் அது மாறிக்

குறைகின்றதன்றோ! இன்னும் பிடித்த விளையாட்டில் ஈடுபடும் போது, உடலின் அசைவுகள், உள்ளப்போக்கு மாறுவதால் உடலும் மனமும் தளருகிறது.

விருப்பப்பட்ட பொழுதுபோக்கில் மனம் லயிக்கையில் முற்றிலும் முந்தைய இறுக்க நிலை குறைந்துவிடுகிறது. துன்பம், சிக்கல் உண்டாகும்போது நண்பரைப் பார்ப்பதும் மனத்துக்கு இதமானது. இன்பம், வெற்றி ஏற்படும்போது முற்றிலும் இறுக்கம் விலக்கம் ஆகிறது.

இதற்கெல்லாம் அப்பால், யோக முறையில் உடல் பாகங்களை அசைத்தும் மனத்தை உடல் முழுவதும் செலுத்தியும், மனத்தின் தோழனான பிராணனை உடலெங்கும் போக வைத்தும் உடலில் பிராணன் சமமாகப் பரவ, குறிபிட்ட பகுதியில் போய்க் கொஞ்சம் தங்கி குறைகளைப் போக்க யோக நித்திரை பயன்படுகிறது. இதனால் உடலில் எந்தக் குறையுள்ளதோ அதற்குத் தொடர்பான உறுப்பைச் சரிபடுத்தி நோயை போக்கிக் கொள்ளலாம். இனி நுணுக்கத்தைப் படியுங்கள்.

யோக நித்திரை நுணுக்கம்

"இப்போது உங்கள் உடல், மனக்குறை நீங்க உங்களுக்கு யோக நித்திரை அளிக்கப்போகிறேன்.

நிம்மதியாக உங்கள் பொறுப்புகள், கவலைகள், மனச்சுமைகளை எல்லாம் விட்டுவிட்டு விரிப்பில் மல்லார்ந்து படுத்துக் கொள்ளுங்கள். கை, கால்களை நன்றாக நீட்டிக் கொள்ளுங்கள். முகத்தை நேர் மேலாகக் காணும்படிப் பின்பக்கத் தலை விரிப்பில் பட்டிருக்க வைத்திருங்கள். மெல்லக் கண்களை மூடிக் கொள்ளுங்கள்.

ஓம்..

என் குரலை மட்டுமே கவனியுங்கள். நான் சொல்வதுபோல மானசீகமாகப் பார்த்துச் செய்யுங்கள்.

மெல்ல ஒரே சீராக மூச்சை வெளிவிடுங்கள் அப்படியே மெதுவாக ஒரே சீராக அறுகாமல் மூச்சை உள்ளிழுங்கள். இரு மூக்குத்துளைகள் மூலமாகவும் இப்படி மூச்சை அவசரப்படாமல் இழுத்து விடுங்கள். பத்துமுறை மூச்சை இப்படி இழுத்து விடுங்கள்

ஓம்... என்று நீளமாக உச்சரியுங்கள்.

என் குரலைக் கவனியுங்கள்.

இப்போது உடல், மனச்சுமை லேசாகிவிட, நிம்மதியாக இருக்கிறீர்கள். உங்கள் வெளிச்சுவாசத்தால் கவலை, பலவீனம், ரத்த அழுத்தம் முதலிய அதிக குறைகளை உடல் அழுககுடன் வெளியேற்றி விட்டீர்கள். உங்கள் உள் மூச்சுடன் பலம், வீரியம், சக்தி, திறமை, ஆனந்தம், ஆரோக்கியம் போன்ற நலன்களை உள்ளிழுத்துவிட்டீர்கள். மகிழ்ச்சி நரம்பு பல அதிகரிக்க உங்களிடம் இப்பொது ததும்புகிறது.

உங்கள் பிராணசக்தி உங்களிடம் வல்லமை அளிக்கிறது. அது ஒரு வெண்மையான பஞ்சு உருண்டை போல எலுமிச்சை அளவில் திரண்டு உள்ளது. உங்கள் வலதுகால் விரல் நுனிகளில் வந்து நிற்கிறது. மனக்கண்ணில் இதைப் பாருங்கள். மெல்ல அது உங்கள் பாதத்தின்

மேல் பக்கத்தில் உருண்டு பரவி நலம் தருகிறது. பாத அடியில்

உடல் முழுவதும் உள்ள உறுப்புகளுடன் தொடர்புள்ள தரம்பு

மையங்களைத் தடவி நலம் தருகிறது.

இப்படி மேல், கீழ், பின்புறம் குதிங்கால் பக்கவாட்டுப் பாதங்கள் என்று எல்லாப் புறங்களிலும் பாதத்தைப் பிடித்து விட்டு நலம் தருகிறது.

அந்த உங்கள் பிராணசக்தியானது வெள்ளை பஞ்சு உருண்டை போன்றது. வலது கணுக்காலை அடைந்து மூட்டுக்கள், நரம்புகள், தசைகளைப் பரவி அவற்றின் அயர்வைப் போக்கி மிகவும் நலம் தருகிறது. பிறகு மெல்ல மிக மெல்ல மேலே குதிரை எலும்புப் பகுதியைக் குணப்படுத்தி பின்பகுதி கணைக்காலின் கெண்டச்சதை தசைப்பகுதியைப் பிசைந்து விடுகிறது.

முழங்காலை அடைத்து மூட்டுகளை நலப்படுத்தி, அதனுடன் சேர்ந்த தசைகளைச் சரி செய்து அங்கே சுரக்கும் திரவத்தைச் சரியாகச் சுரக்கச் செய்து மூட்டுக்கள் நகராமல் பலமுடன் நன்கு இயங்கும் நிலையில் இருக்கச் செய்கிறது. அப்புறம் அந்த உங்கள் பிராணசக்தியான வெள்ளைப் பஞ்சு உருண்டை மேலே ஏறி வலது துடையைப் பிசைந்து பிடித்துவிட்டு தசைகளை, நரம்புகளைச்





சரிபடுத்துகிறது. மெல்ல மிக மெல்ல மேவேறி இடுப்பை வலது பக்கத்தில் சரியாக இருக்க விட்டு, இடது கால் விரல் நுனிக்கு வருகிறது.

இடது கால் விரல் நுனிகளைச் சரிசெய்து நலமுடன் வைத்துப் பாதமேல்புறத்து நரம்புகளை நன்கு இருக்கச் செய்து அடிப்புறத்தை விரல்களின் கீழ்பக்கத்தைப் பிசைந்து விட்டு நடுப்பாதப் பகுதியைச் சரியாக்கி, குதிக்கால் பகுதியை குணப்படுத்திப் பக்கவாட்டுப் பகுதிகளை சரியாக்கி, முழு இடப்பாதத்தையும் அயர்வு நீங்கப் பிடித்துவிட்டு நல்லபடி இயங்கும்படிச் செய்கிறது. அப்புறம் இடது கணுக்காலைப் பரவி எலும்புகள், நரம்புகள் பகுதியை எல்லாம் களைப்பு நீங்கிப் பலமடையச் செய்கிறது

மெல்ல மிக மெல்ல மேலே குதிரை எலும்பு (ஷின்) பகுதியை நன்கு வைத்துப் பின்புற கெண்டைச் சதையைப் பிசைந்து விட்டு நலமுறச் செய்து வலிகளைப் போக்குகிறது உளைச்சலை நீக்குகிறது. நரம்புகளை நலப்படுத்துகிறது. பிறகு மெல்ல மேலே இடது முழங்கால் பகுதியை அடைந்து, மூட்டுக்களின் குறைகளை நீக்கிக் குணப்படுத்தி தசை, நரம்புகளின் இணைப்பை நன்கு வைத்து நலமுறச் செய்கிறது.

பிறகு மெல்ல மிக மெல்ல, அந்த உங்கள் வெள்ளைப் பஞ்சு பொதி போன்ற பிராணசக்தி முழங்காலைக் குணமாக்கி விட்டு, மேலே ஏறித் துடை களைப் பிசைந்து விட்டு அதில் உள்ள குறைகள், வலிகள் முதலியவற்றை நீக்குகிறது.

மேலே உள்ள இடுப்பின் இடப்பகுதியை எட்டி அங்கே

நரம்புகளுக்குப் பாதுகாப்பாக உள்ள எலும்புகளைக் குறைநீக்கி

இணைக்கும் தசைகளை நல்ல நிலையில் வைத்து விடுகிறது.

இரு கால்களும் விரல் நுனிமுதல் இடுப்புவரை நல்ல ஓய்வில் இருக்கிறது. 'சையாடி A' நரம்புகள் நன்கு உள்ளன உடலின் மொத்த எடையைச் சுமந்து எப்போதும் உழைக்கும் உங்கள் இருகால்களும் இடுப்பும், மிக நல்ல நிலையில் வாதம், பித்தம், கபம் மூன்று குறைகளால், பிராணனின் ஏற்றத்தாழ்வால் உண்டாகும் நோய்களின் பாதிப்பு இல்லாமல் இருக்கின்றன. உங்கள் ஆனந்தத்துக்கும், கழிவுகளை நீக்கவும் உள்ள குறியும், குதமும் அவற்றைச் சார்ந்த அங்கங்களும் குறைகளின்றி, பலம் பெற்று நன்கு இயங்குபவையாக இருக்கின்றன.

இப்போது உங்கள் இடுப்பிலிருந்து கீழ்ப் பாகங்கள் இடுப்பிலிருந்து உள்ள கீழ் உடல் முழுவதும் களைப்பு நீங்கி, குறை நீங்கி, முழு ஓய்வில் தளர்ந்து நல்ல நிலையில் உள்ளது. புரோடஸ்ட் கரப்பி தன் பணியைப் புரிகிறது. பிறகு, மேலே அடிவயிற்றுப்பகுதிக்கு உங்கள் பிராண சக்தி வெள்ளைப் பஞ்சுப் பொதி வடிவில் உருண்டையாக வந்து முக்கிய தரம்புகளை, சிறு குடல்களில்,



பெருங்குடல்களில் பரவி குறைகளை நீக்கி, நன்கு ஜீரண உறுப்புகளை இயக்கப் பலம், அழுத்த சக்தி, ஜீரணநீர் சுரப்புகளைத் தர வல்லதாகிறது. குடல்களை மூடிய மெல்லிய தசை, பலமுடன் இருக்கட்டும்.

பெண்களானால் யூடரஸ் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கட்டும். ஆண்களானால் குடலிறங்கி விதைப் பைக்குள் வராமல் நல்ல நிலையில் இருக்கட்டும். ரத்த ஓட்டம், நரம்புகள், தசைகள் நன்கு அடிவயிற்றுப் பகுதியில் இருக்கட்டும் ஜீரணித்து உணவுச் சக்தியை உடலுக்கு நிறையத் தரட்டும் கழிவுகளை நன்கு வெளியேற்றட்டும். மலக்குடல் மூத்திரகோசம் அடைப்பின்றி சிக்கலின்றி, மூலம் போன்ற நோயின்றி நன்கு இயங்கட்டும்.

சிறுநீரகங்கள் குறையின்றி வைக்க பிராண சக்தி உதவுகிறது சிறுநீர்பாதையில் இன்ஃபெக்ஷன் இல்லாமல் ரத்தத்திலிருந்து அழுக்கைப் பிரித்து தன்கு வெளியேற்ற உதவுகிறது.

அட்ரினல் சுரப்பிகளும் நன்கு இயங்கி அளவுடன் அட்ரினலினைச் சுரக்கின்றன. 'ஸ்ப்ளீன்' சக்தியை சமமாக எல்லா உறுப்புகளுக்கும் அனுப்பும் வேலையை நன்கு செய்ய வெள்ளைப் பஞ்சு உருண்டை போன்ற உங்கள் பிராண சக்தி சென்று உதவுகிறது. அடிவயிறு தொப்புள் பகுதி எல்லாம் பரவி அங்குள்ள சுரப்பிகள், உறுப்புகள், ரத்த நாளங்கள், நரம்பு வலைகள் எல்லாம் நலமுற பலம் பெறச் செய்கின்றது கணையத்தை இன்சுலின் சுரக்க வைத்துச் சரியாக இயங்க வைக்கிறது.

மெல்ல மேலேறி வயிற்றுக்கு வருகிறது. இரைப்பையை ஜீரண நீர்களுடன் நன்கு இயங்கி ஜீரணிக்க வைக்கிறது. கல்லீரலுக்குள் சுரக்கும் பித்தநீரை அளவுபடுத்தி கல்லீரலை குறையின்றி இயங்க வைக்கிறது. வயிறையும் சுவாச கோசத்தையும் பிரிக்கும் உதரவிதானத்தை (டையாஃப்ரம்) நன்றாக வைக்கிறது.

நுரையீரலுக்குச் சென்று சுவாசம் நன்கு ஆழ்ந்து நடக்க அது நன்றாகச் சுருங்கி விரிய பிராணசக்தி நன்கு உதவுகிறது. பலம் தருகிறது. வாயுமாற்றம் நடந்து பிராண வாயு உடலுக்குக் கிடைக்கச் செய்கிறது. ரத்தம் நன்கு சுத்தீகரிக்கப்பட்டு அசுத்தத்தை, ரத்தத்திலிருந்து பிரித்து வெளி மூச்சுடன் வெளியேற வைக்கிறது.

பிறகு இதயத்துக்குச் சென்று அது நன்கு சுருங்கி விரிய, ரத்தத்தை தலை முதல் கால்வரை நன்கு பாய்ச்ச தலமும் இதயபலமும் தருகிறது. மெல்ல, பிராண சக்தி உருண்டை தைமஸை நன்கு திடமாகச் சுரந்து பருவதிற்கேற்ற குணம் - உணர்வு அடையச் செய்கிறது. மெல்ல மிக மெல்ல முக்கிய தமனிகளை நன்கு இயங்கச் செய்தபடியே, கழுத்துக்குப் போய், தைராய்டு, பாரா தைராய்டு அளவோடு சுரந்து உடல்நலம் பெற நோய்கள் நீங்கச் செய்கிறது. குரல் வளம் பெற வைக்கிறது.





உணவுக்குழல், மூச்சுக்குழல் ஆகியவற்றை தூய்மையாக வைத்து நலம் தந்து மேலேறி உள்நாக்கு, உள்வாய், நாக்கு, பற்கள், உதடுகள், மேல்வாய், தாடை அனைத்தையும் சரிசெய்து மேலேறி மூக்கின் பின்புற இடத்தைத் தூய்மையாக்கி, சைனஸைக் குணமாக்கி மூக்கின் முன்புறத்தையும் முகத்தசைகளையும், நரம்புகளையும், குறைநீக்கிப் பலம் தருகிறது.

மேலும் இடது, வலது காதுகளிலும் பிராணசக்தி பரவி புறப்பகுதி உட்பகுதிகளைத் தூய்மைசெய்து நோய்நீக்கி முகரும், கேட்கும், பேசும், சுவை பார்க்கும் தன்மைகளையும் சீராக்குகின்றது. அப்படியே மேலேறிக் கண்களில் பரவி நலம் தருகிறது. விழிகள், திரை, பாப்பா,நரம்புகளை இருக்க வேண்டியவாறு வைத்துப் பார்வைக்குப் பலம் அளிக்கின்றது

இமைகள், புருவங்கள் அங்கிருக்கும் நாடி, நரம்புகள் எல்லாவற்றையும் சரிபடுத்தி நரம்பு மையங்களை நன்கு இயக்கம் பெறச் செய்கிறது. அப்படியே மூளைக்குச் சென்று புலன் உணர்வு மையங்களை நலப்படுத்தி நியூரான்களைச் சரியாக வைத்து, கார்டெக்ஸ், தாலமல், பெருமூளை, சிறுமூளை, முகுளம், பிட்யூட்டரி சுரப்பி அனைத்தையும் சரியாக்கிப் பலம் தந்து மூளையின் எல்லாப் பகுதிகளுக்கும் பிராணனை அளித்து இருக்க வேண்டியபடி வைக்கிறது.

ஆங்ஞை பூரணகிரி, ஸஹஸ்ராரம் முதலிய முக்கிய யோகச் சக்கரங்களை நன்கு இயக்கி பினியல் சுரப்பியை அடைகிறது. அங்கிருந்தே தலை முதல் காலநுனி வரை நன்கு பரவச் செய்கிறது. உடலைப் போர்த்திய தோலை நன்கு தொடு உணர்வு அடையச் செய்கிறது. ஆல்ஃபா அலை நிலையில் நன்றாக நலமுடன் இருக்கச் செய்கிறது.

யோகச் சக்கரங்கள், நரம்பு மையங்கள் வலைகள், நாளமில்லாச் சுரப்பிகள், நாளங்கள், சிம்பதடிக், பாரா சிம்பதடிக், அட்டானமிக் நரம்பு மண்டலங்கள் மூளை எல்லாம் நன்கு தூயமனம் இருந்து சக்தியுடன் இயங்க உங்கள் பிராணசக்தி உதவி, உங்கள் அறிவை நல்ல குணத்தை அதிகப்படுத்துகிறது.

நீங்கள் குறை நீங்கி, அழுக்கு நீங்கி, நோய் நீங்கி நல்ல மனிதராகி விட்டீர்கள், நலத்தோடு பலத்தோடு அமைதியாக இருக்கிறீர்கள். அப்படியே மானசீகமாக 'ஓம், ஓம்' என்று கூறியபடி இருங்கள். இறைவனை எண்ணுங்கள். அப்படியே மீண்டும் நான் அழைக்கும் வரை நல்ல ஓய்வில் இருங்கள்.

ஓம் ஓம் ஓம் ஓம் ..! (அப்படியே இருக்க விடவும்). இந்த சஜ்ஜஷனில் உங்களுக்கு இருக்கும் குறை - நோய் நீங்கவும், நல்ல விரும்பும் நிலை அடையவும் சொல்லிக் கொள்ளலாம்.




இதைப்பேசி சி.டி. அல்லது கேஸட்டில் போட்டு கேட்டபடி தினமும் தூங்கலாம். இன்னொருவரை கணீரென்று சொல்லச் செய்து கேட்டபடியே உறங்கிவிடலாம். பாதியிலேயே உறங்கிவிடுவீர் பரவாயில்லை).

மெல்ல எழுங்கள், கை, கால்களை அசையுங்கள். முகத்தைத் துடைத்துக் கொண்டு இடப்பக்கமாகப் புரண்டு எழுந்திருந்து உட்காருங்கள். இந்த யோக நித்திரையை ஒவ்வொரு நாளும் செய்து கொண்டு உறங்கப் போனால், ரத்தக் கொதிப்பு குறைந்திடும். இருக்கிற வேறு குறைகளும் குறைந்து வரும்.

புலால் உணவு வேண்டாம்

இறைச்சியில் அதிகச் சத்து இருப்பதாகவும் மரக்கறி, தானிய உணவு சத்துக் குறைந்ததாகவும் ஒரு கருத்து சாமானிய மக்களிடம் உள்ளது. இதன் தாக்கத்தால், சில வசதியுள்ள படித்தவர்கூடத் தம் குழந்தைகளுக்கு முட்டையைத் தருகின்றனர். மேல்நாட்டு நாகரிகம் கடத்திய நம்மவர், தம்மைத்தாமே நாகரிக குடும்பங்களாகக் கருதிக் கொண்டிருப்பவர் படிப்படியாக எல்லா வகைப் புலால் உணவையும் சாப்பிடத் தொடங்கி விட்டனர். பேச்சில் மட்டும் ஒழிந்துவிட்ட ஜாதி ஒவ்வொரு ஜாதியினரிடமும் இருந்த நல்ல கண்டிப்பான ஒழுக்கங்களை ஒழித்து விட்டதே மிச்சம்.

நம்மைப் போல உலகில், நம்மிடையே நடமாடி வாழ்க்கை நடத்தும் ஆடு போன்ற பிராணிகளையும், கோழிபோன்ற பறவைகளையும் கொன்று தின்னும் கொடிய வழக்கம் நம்மனத்தை எப்படி சாத்விகக் குணத்துடன் இருக்க விடும்?

தாவரமும் உயிர்கள்தாமே? அவற்றிலிருந்து பெறும் கத்தறி, வெண்டை போன்ற காய்கறிகள் அசைவமில்லையா? என்று சில அதிமேதாவிகள் கேட்பதுண்டு.

நம்மிடையே தாவரங்கள் உலவுவதில்லை. குரல்கொடுப்பதில்லை. அதிக அறிவும் இன்றி விதை வடிவில் ஏதோ கொஞ்சமே அவற்றைப் பெற்றுள்ளன. கறிகாய்களைப் பறிப்பதால் அவை இறப்பதில்லை. நெல், கோதுமை போன்ற பயிர் அழிகின்றனவே? என்றால் 'இல்லாமல் முடியாது' என்ற நிலையில் அவற்றோடு நம் உணவை வரையறுத்துக் கொள்ளலாமே?

பசுவின் ரத்தம்தானே பாலாகிறது? பாலைக் குடிப்பவர் புலால் ஒன்றால் என்ன? என்பர். தாய்ப்பாலைக் குடிக்காத உயிரில்லை. யின் புலாலை உண்ணுவார்களா புலால் உணவுக்காரர்? பாட்டார்கள் அல்லவா?

இறைச்சி உணவில் இருக்கும் வைட்டமின்களும், புரதமும்,

கொழுப்பும், காய்கறி, பருப்பு வகை, தானியங்கள் கிழங்குகளிலும்




இருக்கின்றன. பிற்கு வளர்ந்த நாகரிக மனிதனுக்கு ஏன் புலால் உணவு' வேத இதிகாசி புராண காலத்தில் எல்லோரும்தாளே இறைச்சி உண்டமா? என்றும் சிலர் கேட்பா

ஆதிமனிதன் நிரவாணமாகத் திரிந்து கொண்டிருந்தான் அதை

உதாரணமாக்கி இன்று யாராவது அப்படிப் போக முடியுமா? பால், வெண்ணெய், கிழங்கு, தானியங்களில், பழங்களில், காய்கறிகளில் நமக்குத் தேவையான ஏ.பி.சி.டி வைட்டமின்கள் உள்ளன. எலுமிச்சம் பழமும், காய்கறிகளும் அதிகம் சேர்த்து உணவை சரிவிகிதத்தில் உண்டால், எத்தோயும் வராது. பலமும் வகும்.

இன்று இறைச்சி உண்பவர்க்கே பல நோய்கள் பயங்கரமாக வருகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேல் நாட்டினரே ல விழுக்காட்டினர் புலால் உண்ணுவதில்லை. இறைச்சி, காரசார மசர்லா உணவை விலக்குங்கள். பழையது. இருமுறை சமைத்தது, அதி* புளி, உப்பு, காரமுள்ளவை, நாற்றம் கொண்டதையெல்லாம் விலக்குங்கள்.. *உணவு முவிதமாகிறது. உணவின் துட்பாம்சம் மனமாகும்.

தடுப்பட்ட அம்சத்தால் சதையாகும். ஸ்நூல் அம்சத்தால் மலமும்.

உண்டாகும்' என்கிறது உபநிடதம்

"உணவின் தூய்மையால் தூயமனம் உண்டாகும்'ஆக சாத் இயலயை அடைந்து, உடல், மனம் தளர்ந்து சுகமாக அமைதியாக வாழ சாத்வீக ஆகாரம் முக்கியம். எனவே இறைச்சி உணவு வேண்டாம்.

ஓம்..
🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


Comments

Popular posts from this blog