🌹 அன்னதானத்தின் மகிமை🌹

🌹 அன்னதானத்தின் மகிமை🌹



அன்னதானத்தின் மகிமை

சத்தியபுரி என்பது அந்தப் பட்டணத்தின் பெயர். அந்தப் பட்டணத்தைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பாக, முன்னோர் கட்டி வைத்த பிரம்மாண்டமான ஒரு சிவன் கோயில் இருந்தது.அதை நிர்வகித்து வந்த விசுவநாதர் பக்தியும் ஒழுக்கமும் நிரம்பியவர். அவருக்கு வாய்த்த மனைவியும் கணவ னுக்கு இணையாக நல்லொழுக்கங்களுடன் திகழ்ந்தாள்.

விசுவநாதர் பிறந்தபோது, 'இந்தக் குழந்தைக்கு இதுவே கடைசிப் பிறவி. இவர் ஒரு குழந்தைக்குத் தந்தையானதும் துறவறம் மேற்கொள்வார். அந்த வாழ்க் கையின் மூலம் பிரம்மஞானம் அவருக்கு வாய்க்கும். அவர் மேற்கொள்ள விரும்பும்பொழுது உறவினர் யாரும் அவரைத் தடுக்க வேண்டாம். அவ்விதம் தடுப்பதனால் பயன் ஒன்றும் ஏற்படாது. அவருடைய போக்கிற்கு விட்டுவிடுங்கள்' என்று அவருடைய ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

விசுவநாதர் பசிப்பிணி போக்கும் மருத்துவர் போல் விளங்கினார். தம்மை அண்டிய ஏழை எளியவர்களுக்கு

190

அருள்நெறிக் கதைகள்

அவர் அயராமல் உணவளித்தார். இறைவன் திருவருளால் அவருக்குப் போதிய செல்வம் இருந்தது. அவருடைய அன்னதானப் பணிக்கு எந்தக் காலத்திலும் தடை ஏற்படவே இல்லை.

அந்தத் தம்பதிகளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு குணசீலன் என்று தம்பதிகள் அன்புடன் பெயர் சூட்டினர்.

ஓரிரவு விசுவநாதர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர், வாராணசியில் உறையும் சிவபெருமான் தம்மை அழைத்துச் சன்னியாச தீட்சை தருவது போல உணர்ந்தார். அதே கனவில் அவர் தம்மிடம் சிவ பெருமான், 'வா, நீ என்னைச் சேர்ந்தவன். நீ என் சொத்து. என்னிடமே விரைந்து வா' என்று கூறுவதைக் கேட்டார்.

விசுவநாதர் தமக்கென வாய்த்த கடமைகளை அறநெறி வழுவாது நடத்தி வந்தார். அவர் கடைப்பிடித்து வந்த இயல்பான கடமைகளே அவருக்குப் போதிய மனப் பக்குவத்தைத் தந்திருந்தது.

விசுவநாதர் கண்ட கனவு அவர் உள்ளத்திலிருந்து ஏதோ ஒரு திரையை விலக்குவது போல இருந்தது. அவர் காசி க்ஷேத்திரத்தை நோக்கித் துறவியாகச் சென்று விட்டார்.

விசுவநாதர் சென்ற பிறகும் அவருடைய மனைவி, தான் சிரமப்பட்ட நிலையிலும் கணவன் விட்டுச் சென்ற அன்னதானப் பணிக்கு ஒரு குறைவும் வராமல் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

ஒருநாள் சிறுவனான குணசீலன், 'அம்மா, நீ நாள்தோறும் இப்படி அன்னதானம் செய்கிறாயே; இதற்கு என்ன காரணம்? இவ்விதம் அன்னதானம்

அன்னதானத்தின் மகிமை

191

செய்வதால் உள்ள செல்வமும் கரைந்துபோய் நாம் வறுமையில் வாடும் நிலை வருமே!' என்று தாயைக் கேட்டான்.

அதற்கு அவள், மகனே! எனக்குக் காரணம் ஒன்றும் தெரியாது. உன் தந்தை இது போலவே அன்னதானப் பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் பல ஆண்டுகளாகச் செய்து வந்தார். அவருக்கு விருப்பமானது என்பதால் நானும் அதைத் தொடர்ந்து செய்து வருகிறேன், அவ்வளவு தான்' என்றாள்.

தாயின் பதில் குணசீலனைச் சிந்திக்க வைத்தது. 'எந்தச் செயலுக்கும் பலன் உண்டு என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதன்படியே அன்னதானப் பணிக்கும் ஏதாவது பலன் இருக்கவேண்டும் அல்லவா? அது என்ன பலன் என்பதைக் காடு சென்று நான் கடுந்தவம் இயற்றி அறிந்து கொள்ளப் போகிறேன்' என்று தாயிடம் குணசீலன் தெரிவித்தான்.

அவனுடைய யோசனையைத் தாயும் மனமுவந்து அங்கீகரித்து வாழ்த்துக் கூறினாள். ஒரு வீரனைப் போலத் தவ வாழ்க்கைக்குச் செல்லும் மகனை அவள் ஆசீர்வதித்தாள்.

மகனுக்கு வேண்டிய உணவு போன்றவற்றை அவள் ஒரு மூட்டையாகக் கட்டினாள். குணசீலன் தன் தாயை மும்முறை வலம் வந்து வணங்கி அவளுடைய ஆசியைப் பெற்றான். பிறகு அவள் தந்த மூட்டையுடன் காடு நோக்கிப் புறப்பட்டான்.

வழியில் பசியால் வருந்திய ஒரு வயோதிகரைச் சிறுவன் சந்தித்தான். அன்னதானத்திற்கே பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்தவன் அல்லவா குணசீலன்? அவன்

அருள்நெறிக் கதைகள்

தாய் தந்த உணவை வயோதிகரிடம் கொடுத்து விட்டுத் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தான்.

பொழுது சாய்ந்தது. இருள் சூழ்ந்து கொண்டதால், சிறுவனால் பயணத்தைத் தொடர இயலவில்லை. 'என்ன செய்வது?' என்று அவன் தயங்கி நின்றபோது அந்தக் காட்டில் வேடன் ஒருவன் தற்செயலாக எதிர்ப்பட்டான். அவன் குணசீலனிடம், 'தம்பி, அகால வேளையில் கொடிய மிருகங்கள் நடமாடும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறாயே! எந்த நிமிடமும் மிருகங்களால் உனக்கு ஆபத்து நேருமே?' என்றான்.

சிறுவன் வேடனிடம், 'ஐயா! என் தாயின் அனுமதி யுடன் அன்னதானத்தின் சிறப்பை அறியும் பொருட்டுத் தவம் பழக வந்திருக்கிறேன். இன்னும் நீண்ட தூரம் போகவேண்டும் என்று தெரிவித்தான்.

வேடன், 'உன் நோக்கம் சரியானதுதான். ஆனால் கொடிய மிருகங்களிடமிருந்து ஆபத்து நேராமலிருக்க இன்று இரவை நீ என்னுடன் கழித்துவிட்டுக் காலையில் உன் பயணத்தைத் தொடங்கலாம்' என்று சொல்லி, குணசீலனைத் தன் இருப்பிடத்திற்கு சென்றான். அழைத்துச்

வேடன் நல்லவன். ஆனால் அவன் மனைவி அவனுக்கு நேர் மாறானவள். கணவன் முன் பின் தெரியாத ஒரு சிறுவனைத் தன்னுடன் அழைத்து வந்ததைக் கண்டு அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. மிகுந்த கோபத்துடன் அவள், 'ஏதேது, நமக்கே உணவு விருந்தாளி ஒருவனையும் அழைத்து வந்துவிட்டீரோ? அழகுதான்!' என்று சீறினாள்.

வேடன், 'பரவாயில்லை, நீ கவலைப் படாதே; என் பங்கு உணவை இந்தத் தம்பியுடன் பகிர்ந்து

அன்னதானத்தின் மகிமை



.

கொள்கிறேன்' என்று கூறி, அவ்விதமே செய்தான்மூவரும் உணவு உண்டனர்.

காட்டு
மிருகங்களின் ஆபத்தைத் தவிர்க்கக் கணவனும் மனைவியும் பரண் மீது உறங்குவது வழக்கம். வேடன் குணசீலனை மரத்தின் மீது இருந்த பரண் மீது ஏற்றித் தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் படுக்க வைத்தான். 'இந்தச் சிறுவன் என் அருகில் படுக்கக்கூடாது. பரணில் பாதி இடத்தை எனக்குக் கொடுத்துவிட்டு மீதி இடத்தில் வேண்டுமானால் நீங்களும் இவனும் படுத்துக் கொள்ளுங்கள்' என்று வேடனின் மனைவி மீண்டும் உறுமினாள்.

வேடனுக்குத் தன் மனைவியின் போக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது.

அவன் தன்

மனைவிக்கும்

சிறுவனுக்கும்

இடையில் படுத்துக் கொண்டான்; குணசீலன் கீழே

விழுந்து விடாதவாறு அவனை அணைத்துக் கொண்டே

தூங்காமல் கண் விழித்திருந்தான்.

நடு இரவில் மனைவியும், சிறுவனும் ஆழ்ந்து

உறங்கிக் கொண்டிருந்தபோது, வேடன் தனக்கும் மனைவிக்கும் இடையில் குணசீலன் உறங்கும் வகையில் பரணின் ஒரு மூலையிலிருந்த விளிம்பில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான். விரைவில் உறங்கியும் விட்டான்.

நள்ளிரவில் கண் விழித்த மனைவி, 'இடைஞ்சலாக வந்து சேர்ந்த இந்தப் பையனைத் தொலைத்துவிட வேண்டும்' என்று நினைத்தாள். இரவு நேர இருட்டில், பரணின் ஓரமாக ஒதுங்கிப் படுத்திருப்பவன் வேடன் என்பதையும், தன் பக்கத்தில் படுத்திருப்பவன் சிறுவன் என்பதையும் அவளால் உணர்ந்து கொள்ள முடிய




அருள்நெறிக் கதைகள்

வில்லை. பரணின் ஓரத்தில் ஒட்டியபடி படுத்திருந்த தன் கணவனைக் குணசீலன் என்று நினைத்த அவள், மெதுவாக அவனை உருட்டிக் கீழே விழும்படிச் செய்து விட்டாள். அது காரணமாக மகிழ்ச்சியும் கொண்டாள். கீழே விழுந்த வேடனை அருகில் காத்திருந்த காட்டு மிருகங்கள் கொன்று விட்டன.

அதிகாலை நேரத்தில், தற்செயலாக உறக்கம் கலைந்து எழுந்த குணசீலன் தன்னருகில் வேடனைக் காணாமல் திகைத்தான். பிறகு பரணிலிருந்து இறங்கி மேற்கொண்டு தன் பயணத்தைத் தொடங்கினான். பொழுது புலர்ந்ததும், கணவனை மிருகங்கள் கொன்று விட்டதை அறிந்த வேடனின் மனைவி நடந்ததை ஊகித்துத் தானும் இறந்துவிட்டாள்.

பிரயாணத்தின்போது குணசீலன் ஒரு தன் குடிசையின் முன்னால் கோல் ஊன்றி நின்று முடவன் கொண்டிருப்பதைக் கண்டான். முடவன் குணசீலனிடம், ‘எங்கே போகிறாய், ஏன் இங்கு வந்தாய்?' என்றெல்லாம் விசாரித்தான். குணசீலன் காரணத்தை விவரித்தான். தன் பயணத்துக்கான

அதைக் கேட்ட முடவன், 'அப்படியானால் தம்பி, நீ எனக்காக ஒரு காரியம் செய். எனக்குப் பசியே எடுப்பதில்லை. அதற்கான காரணத்தையும் நீ தவமி ருக்கும்போது உன் தேவதையிடம் விசாரித்து வா என்று கேட்டுக் கொண்டான். குணசீலனும் அவ்விதமே செய்வதாக வாக்களித்தான்.

மேலும் அவன் சென்று கொண்டிருந்தபோது நல்ல பாம்பு ஒன்று வருவதைக் கண்டான். நாகம், குணசீலனிடம் அவனது பயணத்திற்கான காரணத்தை விசாரித்தது. அவன் முடவனிடம் தெரிவித்த அதே விவரங்

அன்னதானத்தின் மகிமை

195

களைப் பாம்பிடமும் தெரிவித்தான். அதைக் கேட்ட பாம்பு, 'சிறுவனே! நான் சரியாகக் கண் தெரியாமல் அவதிப்படுகிறேன். இந்தத் தொல்லையிலிருந்து விடுபட நான் என்ன செய்யலாம் என்பதைத் தயவு செய்து தேவதையிடம் கேட்டு வா' என்று வேண்டியது. குண சீலன் அதன் கோரிக்கைக்கும் சம்மதித்தான். பாம்பு, அருகில் இருந்த தன் இருப்பிடத்தையும் குணசீலனுக்குக் காட்டியது.

மேலும் அவன் நடந்து சென்றபோது, ஏராளமான பழங்கள் பழுத்துக் குலுங்கும் மாமரம் ஒன்றைக் கண்டான். அந்த மரம், 'என்னுடைய எல்லாக் கனிகளிலும் புழுவும் பூச்சியும் உற்பத்தியாகி விடுகின்றன. அதனால் மக்கள் என் கனிகளைப் பயன்படுத்துவதே இல்லை. என் பழங்களைப் புழுவும் பூச்சியும் அரிக்காமலிருந்து மக்களுக்கு நான் பயன்பட வேண்டுமானால், அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்ற விவரத்தைத் தேவதை யிடம் விசாரித்துத் திரும்பி வரும்போது எனக்குச் சொல்ல வேண்டும்' என்று பிரார்த்தித்தது. குணசீலன் அவ்விதமே செய்வதாக ஒப்புக்கொண்டான்.

சிறுவன் காட்டை அடுத்து உயர்ந்திருந்த மலைச் சிகரத்தை அடைந்தான். அங்கே ஓரிடத்தில் அமர்ந்து, தேவதையை நினைத்துக் கடுந்தவம் செய்தான். சிறுவன் எனினும் நல்ல பழக்க வழக்கங்கள் இருந்ததால் அவனால் கடுந்தவம் இயற்ற முடிந்தது. தூய நோக்கத்துடன் அமைந்த பாலகனின் தவம் வீணாகவில்லை. தேவதை அவனுடைய தவத்திற்கு இரங்கி அவன் முன் தோன்றி, 'குழந்தாய்! உனக்கு வேண்டுவதையெல்லம் தாராளமாகக் கேள். நீ கேட்பது அனைத்தும் உனக்குத் தரப்படும்' என்று சொன்னது.



அருள்நெறிக் கதைக

குணசீலன், 'தேவதையே! எனக்காக எதையும் கேட்கும் நோக்கத்துடன் நான் வரவில்லை. அன்னதானம் செய்வதன் பலனைப் பற்றி அறிய விரும்புகிறேன்' என்றான்.

தேவதை, 'மகனே, உன் கேள்விக்கான பதிலை நீயாகவே அறிந்துகொள்ளச் செய்கிறேன். உன் நாட்டு அரசனுக்குப் பத்து மாதம் கழித்து ஒரு நாள் காலை 5-30 மணிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கப்போகிறது. நீ அரசனைச் சென்று சந்தித்து, பிறக்கும் குழந்தையின் உடல், தரையின் மீது படுவதற்குள்ளாக அதைத் தங்கத் தாம்பாளத்தில் ஏந்தும்படிச் செய்து, அந்தக் குழந்தை யிடம் அன்னதானத்தின் பலனைப் பற்றிக்கேள். அது கூறும் பதிலில் அன்னதானத்தின் மகிமையை அறிந்து கொள்வாய்' என்று தெரிவித்தது.

அடுத்ததாக குணசீலன் தான் சந்தித்த முடவன், பாம்பு, மாமரம் ஆகியவற்றின் கோரிக்கைகளையும்

அன்னதானத்தின் மகிமை

தேவதையிடம் தெரிவித்து, அவற்றுக்கான பதில்களைத்

197

தெரிந்து கொண்டான். தேவதை, மேலும், உனக்குத் தேவையானதையும் தயங்காமல் கேள்' என்றது. குணசீலன் தனக்கென்று எதுவுமே வேண்டாம் என்று தெரிவித்துவிட்டான்.

தேவதை அவனை ஆசீர்வதித்து மறைந்தது.

குணசீலன் மீண்டும் ஊர் திரும்பும் வழியில் மாமரம் அவனை வரவேற்றது. அதனிடம் அவன், 'மாமரமே! கடந்த பிறவியில் நீ பெரும் பணக்காரனாக இருந்தாயாம். ஆனால் உன் பணத்தை ஒரு சிறிதும் பிறருக்காகப் பயன் படுத்தாமல் கருமியாகவே இருந்தாயாம். நீ எந்த இடத்தில் உன் செல்வத்தை ஏராளமான தங்கக் கட்டி களாக மாற்றி, புதைத்து வைத்திருந்தாயோ அதே இடத்தில் இப்போது மாமரமாக வளர்ந்திருக்கிறாய். நீ உன் செல்வத்தைப் பிறருக்குப் பயன்படுத்தாமல் இருந்த காரணத்தினால்தான் உன்கனிகள் புழுத்துப் போகின்றன என்று தேவதை கூறியதைத் தெரிவித்தான்.

காரணத்தை அறிந்த மாமரம், 'இதைக் கேட்டு வந்ததற்கு மிக்க நன்றி. தயவு செய்து நீயே என் கீழுள்ள தங்கக் கட்டிகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று பிரார்த்தித்தது.

குணசீலன் தங்கக் கட்டிகளுடன் ஊர் திரும்பும் வழியில் நாகப்பாம்பு அவனை வரவேற்றது. அவன், 'நாகமே! நீ மாணிக்கக் கல் ஒன்று வைத்திருக்கிறாயாம். அதை யாருக்காவது நீ கொடுத்து விட்டால் உன் கண் பார்வை சரியாகி விடும் என்று தேவதை கூறியது' என்றான். பாம்பு உடனே மாணிக்கக் கல்லைக் கக்கி வெளியே எடுத்து, 'அப்படியானால், காரணத்தை அறிந்து



அருள்நெறிக் கதைகள்

வந்த நீயே இந்த மாணிக்கத்தை எடுத்துக்கொள்' என்று வேண்டியது.

குணசீலன் மாணிக்கத்தையும் பெற்றுக் கொண்டு சென்றபோது முடவன் அவனை வரவேற்றான். முடவ னிடம் அவன், நீங்கள் அறிந்துள்ள கலையைப் பிறருக்குப் போதிக்க வேண்டும். அவ்விதம் செய்யாமை யால் உங்களுக்குப் பசியின்மை இருப்பதாகத் தேவதை தெரிவித்தது' என்றான். முடவன், 'அப்படியா! மிக்க நன்றி. நான் அறிந்த கலையை உனக்கே போதிக்கிறேன்' என்று சொல்லி குணசீலனுக்குத் தான் அறிந்த கலையைக் கற்பித்தான்.

குணசீலன் அரசனின் மாளிகையை அடைந்தான். மன்னனைச் சந்தித்து, 'அரசே! பத்து மாதங்களுக்குப் பிறகு தங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று நாள் நேரம் ஆகியவற்றைத் திட்டவட்டமாகவும், தேவதை சொன்ன ஏனைய விவரங்களையும் தெரிவித் தான்.

குணசீலன் சொன்னதைக் கேட்டு மன்னன் ஆச்சரிய மும் மகிழ்ச்சியும் அடைந்தான். அந்தக் குழந்தை பிறக்கும் வரையிலும் குணசீலனை அரண்மனையிலேயே, தங்க வைத்து உபசரித்தான்.

குணசீலன் குறிப்பிட்ட காலம் நெருங்கியது.அரசன், குணசீலன் சொன்னபடியே அந்தப்புரப் பெண்களை அழைத்து, 'பிறக்கும் குழந்தை தரையில் விழும் முன் தங்கத் தட்டில் அவனை ஏந்திக் கொண்டு வாருங்கள் என்று கட்டளை பிறப்பித்தான்.

பெண்கள் அவ்விதமே குழந்தையைக் கொண்டு வந்தனர். குணசீலன், 'குழந்தையே! அன்னதானத்தின்

அன்னதானத்தின் மகிமை

199

பலனைப் பற்றித் தெரிவிக்க வேண்டும்' என்றான். குழந்தைக்குத் தேவதையின் திருவருளால் முற்பிறவியின் நினைவு வந்தது.

அது, 'உன்னை நான்தான் வேடனாகக் காட்டில் சந்தித்தேன். அப்போது நான் உனக்கு உணவு அளித்ததன் பயனாகவே இப்போது அரசகுமாரனாகப் பிறந்திருக் கிறேன். எனது அந்தச் செயலைத் தடுத்த என் மனைவியோ இப்போது இதே ஊரில் உள்ள சேரியில் பன்றி யாகப் பிறந்திருக்கிறாள்' என்று சொன்னது.

அன்னதானத்தின் சிறப்பைக் குழந்தையிடம் அறிந்த குணசீலன் ஊர் திரும்பினான். தான் புறப்பட்டது முதல் நடந்தவை அனைத்தையும் தாயிடம் விளக்கினான். அன்னதானத்தின் பெருமையைக் கேட்ட அவள் மிகவும் மகிழ்ந்து எப்போதும் போலவே விருந்தினரை உபசரித்து வாழ்ந்து முடிவில் நற்கதி பெற்றாள்.

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog