🌍பசலைக்கீரை🌎

 

🌍பசலைக்கீரை🌎

🙏கீரையின் நன்மை தீமைகள்
 சிறப்புகள் எந்த நோய்க்கு
 எப்படி தீர்வு!!!!🙏


உலகம் முழுதும் புகழ் பெற்ற சூப் எது என்றால் அது பசலைக் கீரை சூப்தான். நாமும் இதை சூப்பாகவே அருந்தலாம்.

மக்கள் இந்தக் கீரையை ஒரு காய்கறியாகத்தான் பார்க்கின்றனர். அதற்கு ஏற்ப ஆண்டு முழுவதும் பசலைக் கீரை கிடைக்கிறது. மனத்திற்குத் திருப்தி தரும் அரிய தரமுள்ள முதல் கீரை பசலைக் கீரைதான். அந்த அளவிற்குச் சாப்பிடச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் கீரை இது. அதனால்தான் தினமும் இந்தக் கீரையை வாங்கி மற்ற கீரைகளைப் போலவே சமைத்துச் சாப்பிடுகின்றனர்.



பசலைக் கீரையின் மருத்துவக் குணங்கள்

நோய் நுண்மங்களைச் சேர்ந்த பொருள்களை உடலுக்குச் சென்று விடாமல் தடுக்கிறது. அதாவது பாக்டீரியாக்களை எதிர்க்கிறது.

நச்சு நுண்மங்களான வைரஸ் கிருமிகள் உடலுக்குள் நுழையாமல் தடை செய்கிறது.

ஆண்ட்டி ஆக்ஸிடென்ட்டாகச் செயல்படுகிறது. உடலில் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படாமல்தடுக்கிறது.

உடல் முதுமையடைவதைத் தடுக்கிறது.

புற்று நோயை எதிர்க்கிறது; குணமாக்குகிறது. 

உடலிலுள்ள விஷப் பொருள்களை அகற்றுகிறது.

* ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சரியாக நிர்வகிக்கிறது. 

உடலுக்கு அதிக சக்தியை உற்பத்தி செய்து தருகிறது.

மூனளயில் செயல் திறனைப் புதுப்பிக்கிறது.

 தலை முடி, நகம், பற்கள் ஆரோக்கியமாகத் திகழ உதவுகிறது.

தோலுக்கு நன்மை செய்கிறது.

 பார்வைத் திறனைக் கூர்மைப்படுத்துகிறது.

இதயத்துக்கு நல்லது,

நோய் எதிர்ப்புச் சக்தியைப் புதுப்பிக்கிறது.

 தசை மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது.

ஜீரண மண்டலத்துக்கு நல்லது.

தாளமில்லாச் சுரப்பிகள் சிறப்பாக இயங்கி, தேவையான ஹார்மோன்கள் உரிய நேரத்தில் செரிக்க உதவுகிறது. 

பசலைக் கீரையின் ஆங்கிலப் பெயர் SPINACH

100 கிராம் பசலைக் கீரையில் உள்ள சத்துகள்

புரதம்

2.0 கிராம்

கொழுப்பு

0.7 கிராம்

நார்ச் சத்து
0.9 கிராம்

மாவுப் பொருள்

3 கிராம்

கால்சியம்

73 மில்லி கிராம்

பாஸ்பரஸ்

21 மி.கி.

இரும்பு

11 மி.கி.

மக்னீசியம்

85 மி.கி.

.பொட்டாசியம்
205 மி.கி

சோடியம்
60 மி.கி.

கந்தகம்
30 மி.கி.


குளோரின்

55 மி.கி

வைட்டமின் சி
28மி.கி

ஃபோலிக் அமிலம்
50 மைக்ரோ கிராம்

.கரோட்டீன்

6000 மைக்ரோ கிராம்

இத்துடன் பி குரூப் வைட்டமின்களான தயாமின், ரிபோஃபிளவின்,
நியாசின் போன்றவை சிறிதளவு உள்ளன. மாங்கனீஸ் உப்பும் உள்ளது.

உடல் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் தேவையான லியூசின், லைசின், டைரோசின், ஆர்ஜினைன், ஃபீனைல் அலவின், திரயோவைன். ஹிஸ்டிடைன், ஐஸோலியூசின், மெதியோனைன். வேலைன், டிரைப்டோபன், சிஸ்டைன் போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் போதிய அளவில் பசலைக் கீரையில் உள்ளன. இந்த அளவிற்குப் புரதம் இருப்பதால்தான் பசலைக் கீரையை

'இரைகளின் ராஜா' என்கிறார்கள். சிறந்த புரத உணவாகவும் ஊட்டம்

மிக்க சத்துணவாகவும் திகழ்கிறது.

100 கிராம் ஆட்டுக் கறி, கோழிக் கறி, மீன், முட்டை போன்றவற்றில் கிடைக்கும் புரதத்தை விட அதிக அளவு தரமான புரதம் பசலைக் கீரையின் மூலமே குறைந்த செலவில் கிடைக்கிறது.

பசலைக் கீரைக்கு பச்சை நிறத்தைத் தரும் நிறமியான குளோரபில் (Chiorophyll)லை 'தாவர ரத்தம்' என்கின்றனர். உடல் சோர் வடையாமல் இருக்க இந்த குளோரபில் என்ற பச்சையம் உதவுகிறது. அத்துடன் திசுக்களை புற்று தாக்காமல் அடித்து வெளியேற்றி விடுகிறது.

மேலும், பசலைக் கீரையின் இலைகள் அகலமாக இருக்கும். இதில் ரத்தத்தில் சர்க்கரை அளைவக் கட்டுப்படுத்தும் குரோமியம் உப்பும், மூனையின் திசுக்களில் விஷப் பொருள்களும், உலோகப் பொருள்களும் சேமிப்பாகாமல் தடுத்து வெளியேற்றும் லிப்போயிக் அமிலமும் (Lipok Acid) தாராளமாக உள்ளன. இதனால் வயதான காலத்திலும் ஞாபக சக்தி மிகவும் விழிப்புணர்வுடனும் ஆற்றலுடனும் இருக்கும்.

இதனால்தான் பசலைக் கீரையை சாலட்டாகவும் அவசியம் சாப்பிடச் சொல்லுகின்றனர்.

கீரைகளுள் முக்கியக் கீரையாக நோய்களைக் குணப்படுத்து வதுடன், நோய்த் தடுப்பு மருந்தாகவும் உடலுக்கும் மனதிற்கும் ஆறுதலும் சக்தியும் வழங்கும் அரிய உணவு மருந்தாகவும் பசலைக் கீரை திகழ்கிறது.



பசலைக் கீரையை எப்படிச் சாப்பிடுவது?

பசலைக் கீரை சற்று உறைப்பானது. அதே நேரத்தில் சற்று இனிப்பாக லும் எளிதில் செரிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. உடலுக்குக் குளிர்ச்சி யைத் தந்து, வறண்ட தோலை பளபளப்பாகவும் மாற்றுகிறது.

கீரையை ஒரு முறை மட்டும் கழுவி சாறாக மாற்றி அருந்துவதே அதிக அளவு நன்மை பெற எளிய வழி. 

இரண்டாவதாக, கீரையைச் சிறிது சிறிதாக நறுக்கி மென்று சாப்பிடுவதும் நல்லது.

மூன்றாவதாக சூப், பொரியல், அவியல், பச்சடி என்றும் தயாரித்துச்சாப்பிடவாம்.

ஒருமுறைக்கு மேல் கீரையைக் கழுவினால் கீரையில் உள்ள வைட்ட மின்கள் கரைந்து/குறைந்து போய்விடும். இதேபோல அதிக நேரம் வேக, அவிய வைத்தாலும் சத்துகள் அழிந்து போய்விடும்.

சமைத்த கீரை என்றால் அரை கோப்பையும், சமைக்காமல் சாலட்டாக

சாப்பிடுவது என்றால் ஒரு கோப்பையும் கீரை இருக்க வேண்டும்.

சமைக்காத கீரையைச் சாப்பிடும்போது அதில் ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாப்பிடலாம். இதற்கு அரை மூடி எலுமிச்சையை சாறாகப் பிழியலாம். இதனால் கீரையில் உள்ள இரும்புச் சத்து மிக எளிதாக எலுமிச்சை மூலம் கிடைக்கும் வைட்டமின் சியால் உறிஞ்சிக் கொண்டு விடும்.

சமைத்த கீரையில் பீட்டா கரோட்டீன் சத்து அதிக அளவு பிரிந்து உடலுக்கு நன்கு கிடைக்கும். அதே நேரத்தில் கீரையில் உள்ள ஃபோலிக் அமிலமும் வைட்டமின் சியும் குறைவாகவே கிடைக்கும். எனவே, மதிய உணவில் கொண்டைக் கடலை, மொச்சை என்று ஏதாவது சேர்த்துக்கொண்டால் ஃபோலிக் அமிலமும் வைட்டமின் சியும் எளிதில் கிடைத்து விடும். இல்லையென்றால் பாசிப் பருப்பு கூட்டும் நல்லெண்ணையும் சாதத்தில் சேர்த்துச் சாப்பிட்டால் இதனால் மேற்கண்ட இரு வைட்டமின்களும் எனிதில் கிடைத்து விடும்.

கீரையைச் சமைக்கும்போது கீரையைவிட பருப்பின் அளவு குறைவாகச் சேர்க்கப்பட வேண்டும். தேங்காய்த் துருவல் சேர்ப்பதால் கீரைகளில் மறைந்துள்ள கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமிகள் வெளியேறி விடும். கரணம், தேங்காவில் உள்ள லாரிக் அமிலம், வைரஸ் கிருமிகளை வும் பாக்டீரியாக்களையும் உடனே அழித்து வெளியேற்றி விடுகிறது. தேங்காய்ப் பாலும் சேர்க்கலாம்.





பசலைக் கீரையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

100 கிராம் கீரையில் சிறுநீரில் கற்களை உண்டாக்கும் ஆக்ஸாலிக் அமிலம் 660 மில்லி கிராம் என்ற அளவில் இருக்கிறது. ஆக்ஸாலிக் அமிலம் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. அதே நேரத்தில் இந்த அமிலம்ரத்தத்தில் அதிகம் சேர்ந்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினம் ஒரு கிண்ணம், அரை கிண்ணம் என்ற அளவில் பயமின்றிச் சாப்பிடலாம். அதிகம் வேண்டாம். 

அதே நேரத்தில் சிறுநீரகக் கற்கள் தொடர்பாகவும், கல்லீரல் நோய் தொடர்பாக சிகிச்சை பெறுகிறவர்களும் பசலைக்கீரையை முற்றிலும் தவிர்க்கவும். இல்லையென்றால், உங்கள்மருத்துவர், சத்துளளவு நிபுணர் ஆகியோரின் ஆலோசனைப்படிசாப்பிடவும்.

பசலைக் கீரையைப் பயமின்றித் தினமும் சாப்பிட தயிர், பால் அல்லது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் கீரையில் உள்ள ஆக்ஸாலிக் அமிலத்தை உடல் உறிஞ்சுவதை கால்சியம் எளிதில் தடுத்து விடுகிறது என்று 2013ல் இங்கிலாந்து சத்துணவு நிபுணர்கள் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளனர்.


மலச் சிக்கல்

நாம் சாப்பிடும் பிற உணவுகளின் சத்துகள் எளிதில் உடலில் சேரவும், அதே நேரத்தில் மலச் சிக்கலைத் தீர்க்கவும் பசலையில் தாராளமாக உள்ள நார்ச் சத்து உதவுகிறது.

உணவின் சாரத்தை வயிற்றில் நன்கு பக்குவப்படுத்தி எளிதில் செரிக்கக் கூடிய உணவாகவும் மாற்றி விடுகிறது. உணவைப் பக்குவப்படுத்தி தேவையான ஈரம் வெப்பம் பசலையில் இருந்தே கிடைக்கிறது. நார்ச் சத்து உடலில் உள்ள விஷப் பொருள்களையும் வெளியேற்றி விடுகிறது. இருமலும், ஆஸ்துமாவும் இருந்தால் அவற்றையும் பசலைக் கீரை குணமாக்கி விடுகிறது.

மலச் சிக்கல் குணமாக காலையில் இந்தக் கீரைச் சாற்றை அருந்தி வந்தால் போதும். 50 கிராம் கீரையைச் சுத்தம் செய்து மிக்ஸி மூலம் சாறாக்கி வடிகட்டி அருந்தவும். இது குடலுக்குச் சக்தியைக் கொடுத்து, கழிவுகளை எல்லாம் வெளியே கொண்டு வந்து தள்ளி விடும். அந்த அளவிற்குச் சக்தி வாய்ந்தது பசலைக் கீரை.


பல் வலி

பற்சிதைவையும் பல் ஈறுகளில் உள்ள கோளாறுகளையும் முக்கியமாக பல் வலியையும் குணமாக்க தலா 50 கிராம் பசலைக் கீரை, கேரட் என இரண்டையும் சாறாக்கி (கீரைச் சாறை வடிகட்ட வேண்டும்) ஒன்றாகக் கலந்து குடித்து வந்தால் பற்கள் விழுந்து விடாமல் உறுதியாக நிற்கும். பற்களின் ஆரோக்கியத்திற்கு இந்தச் சாறு மிகவும் நல்லது. ஆஸ்துமாவையும் குணப்படுத்த இதே முறையில் பசலை கேரட் சாறு அருந்தி வரவும்.



பார்வைத் திறனுக்கும் இளமைக்கும்...

பசலைக் கீரையில் தாராளமாக உள்ள வைட்டமின், பீட்டா கரோட்டீன் தான், இதுவே 'வைட்டமின் ஓ'யாக மாறி பார்வைத் திறனை அதிகரிக் கிறது. இத்துடன் வயதாவதால் ஏற்படும் பார்வைத் திறன் குறைபாட்டை இக்கீரையில் உள்ள லுட்டின், ஜியாக்ஸ் ஆன்த்தின் என்ற இரு சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும் தடுக்கின்றன. இதனால் முதிய வயதில் தெளிவான பார்வைத் திறனை உறுதியாகப் பெறலாம்.

மேலும், உடல் முதுமை அடைவதையும் வைட்டமின் ஏ தடுக்கிறது. இந்த வைட்டமின் திசுக்களை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதால் வயதாவதால் உடல் முதுமையடைவதைத் தடுத்து, இளமைத் தோற்றத் துடன் ஆற்றலும் குறையாமல் காட்சியளிக்கலாம். எலும்பு மண்டலத் திற்குத் தேவையான கால்சியமும் கிடைத்து விடுவதால் உடலும் உறுதியாக தொடர்ந்து இருக்கும்.


சிறுநீர் நன்கு பிரிய

சிறுநீர் தன்கு பிரிய பசலைக் கீரைச் சாற்றில் ஒர் இளநீரைக் கலந்து தினம்

இரு வேளை அருந்தி வரவும். இரண்டிலும் உள்ள நைட்ரேட் உப்பும்,

பொட்டாசியம் உப்பும் சிறுநீர் நன்கு பிரிய உதவும். சிறுநீர்ப் பைகளின்

வீக்கம், சிறுநீரகங்களில் வீக்கம் என அனைத்தும் குணமாகும்.

தொண்டைக் கட்டு, டி.பி. குணமாக பசலைக் கீரை இலைகளுடன் இரண்டு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து அருந்தவும்.


காய்ச்சல் குணமாகும்

கீரையில் உள்ள தாது உப்புகள் ரத்தத்தில் காடித்தன்மையைக் குறைக் கின்றன. இதனால் உடல் நல ஆரோக்கியம் புதுப்பிக்கப்படுகிறது. நோய்களும் விரைந்து குணமாகின்றன.

அடிக்கடி காய்ச்சல் என்பவர்களும் நாள்பட்ட நோயினால் அவதிப்படுகிறவர்களும் விரைந்து குணமாக இதில் தாராளமாக உள்ள காரச் சத்தும்,பி குரூப் வைட்டமின்களும், பீட்டா கரோட்டீனும் நன்கு உதவுகின்றன.

எனவே காய்ச்சலின்போது பசலைக் கீரை சாப்பிட மறவாதீர்கள். இத்துடன் தயிர், பால், கேழ்வரகு ரொட்டி என்று வதையாவது ஒன்றை யும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் ரத்தத்தில் பீட்டா கரோட்டீன் சத்து தாராளமாக உயர்ந்து காய்ச்சல் உடனே குணமாகி விடும்.

மேலும் காரச் சத்து அதிகமுள்ள முதல் கீரை, பசலைக் கீரைதான் (பழங்களுள் காரச் சத்து தாராணமாக உள்ள முதல் பழம் எலுமிச்சை). இதனால் இல் கீரையைச் சாப்பிட்டதும் இதில் உள்ள காரப் பொருள் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி விடுவதால் திசுக்களும் சுத்தமாகி நோய்க் கிருமிகளும் அழிகின்றன. இதனால் காய்ச்சலில் இருந்து மட்டுமல்ல; நாள்பட்ட நோய்களிலிருந்தும் விடுபட ஆரம்பிக்கிறோம்.


மாத விலக்கு

பெண்களுக்கு மாத விலக்கின்போது ஏற்படும் வலி, ஆஸ்துமா, புண்கள், பருக்கள் முதலியவற்றையும் பசலைக் கீரையில் உள்ள வைட்டமின் ஏ குணமாக்குகிறது. இதனால் சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தி உணவாகவும் பசலைக் கீரை திகழ்கிறது.

வாரத்தில் மூன்று நாள்கள் பசலைக் கீரைப் பச்சடியுடன் பரங்கிக் காய் கூட்டும் சேர்த்துக் கொண்டால் நீங்கள் முழு ஆற்றலுடன் 100 ஆண்டு களைத் தாண்டியும் இளமைத் துடிப்புடன் முழு நலத்துடனும் வாழ்வீர் கள். ஏனெனில், பரங்கிக் காயும் பீட்டா கரோட்டீன் சத்து நிறைந்த காய்கறி என்பதால்!

எனவே அனைத்து வயதினரும் பசலைக் கீரைக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு மிகச் சிறந்தது.



மூளையை நன்கு செயல்பட வைக்கும் பசலைக் கீரை

மூளை மின்னாற்றலுடன் செயல்பட போரான் உப்பு தேவை. பசலைக் கீரையில் இந்த உப்பு தாராளமாக உள்ளது. மேலும், தாவர வகையில் இருந்து கிடைக்கும் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் பசலைக் கீரையில் தாராளமாக இருக்கிறது. இதுவும் மூளையைப் பாதுகாத்து ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. கால்சியத்தையும் மக்னீசியத்தை யும் உறிஞ்சிக்கொள்ள இந்தப் போரான் (Boron) உப்பு தேவை.

மாத விலக்கு நின்ற பெண்களுக்கு எஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்ட்ரன் ஆகிய இரு ஹார்மோன்களும் போதிய அளவில் சுரக்க உதவுகிறது. சிறுநீர் மூலம் இந்த இரு ஹார்மோன்களும் வெளியேறாமல் தடுத்து போரான் உப்பு பாதுகாப்பளிக்கிறது



மூலத் தொந்தரவு

பசலைக் கீரைச் சாறு சிறுநீர்க் கழிவைத் தூண்டக் கூடியது. மூலத் தொந்தரவையும் குணமாக்கும். ரத்தப் போக்கு உள்ள பெண்கள் பசலையை பச்சடி, சூப், சாறு என்று மாற்றி மாற்றி அருந்தினால் ரத்தப் போக்கு முழுமையாகக் குணமாகும்.




இதய நோய்கள்

பசலைக் கீரையில் மக்னீசியம் என்ற தாது உப்பு மிகவும் தாராளமாக இருக்கிறது. மன அழுத்தம் குணமாகவும், இருதய நோய்கள் குணமாக வும், மக்னீசியம் உதவுகிறது. இதயம் வேக வேகமாகத் துடித்து நெஞ்சு படபடப்பாக இருந்தால் மக்னீசியம் உடலில் குறைந்துள்ளது என்று அர்த்தம். தரம்பு மண்டலத்துக்கு ஓய்வு கொடுத்து மீண்டும் புத்துவர் வுடன் செயல்பட வைக்கும் அரிய உப்பு இது.

ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குறைப்பதற்கும் மக்னீசியம் அவசியம், மக்னீசியம் உப்பு அதிகமுள்ள இலைக் காய்கறிகளையும் நன்கு சேர்த்துக் கொண்டால் மாரடைப்பையும் இருதய நோயையும் முற்றிலும் தடுக்கலாம். மேலும் ஆஸ்துமா, மூட்டு வீக்கம் போன்ற நோய்களையும் மக்னீசியம் விரைத்து கட்டுப்படுத்த உதவுகிறது.




மாரடைப்பைத் தடுக்கும் துணை நொதி

 CoQ10 என்ற நொதியும் பசலைக் கீரையில் தாராளமாக உள்ளன. இதுசக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாகும். கொழுப்பில் கரைவது. துணை நொதி குறைந்த அளவு இருந்தால் மாரடைப்பு அபாயம் உள்ளது.

 இதயம் எல்லா நேரங்களிலும் சீராக இயங்க இணை நொதி CoQ10தேவை. இதை பசலைக் கீரை எளிதில் வழங்குகிறது.

பொட்டாசியம் உப்பும் தாராளமாக இருப்பதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாது, இதனால் மாரடைப்பும் பக்கவாதமும் தடுக்கப் படுகிறது.

மேலும் இக் கீரையில் உன்ன கால்சியம் ரத்தக் குழாய்களைத் தளர்த்தி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து விடுகிறது. இதனால் ரத்தக் கொதிப்பும் மாரடைப்பும் முழுமையாகத் தடுக்கப்படுகிறது. இரும்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்தவும் கால்சியம் உதவுகிறது.


ரத்த சோகை

பள்ளி மாணவ மாணவிகளும் ரத்த சோகையால் அவதிப்படுகிறவர் களும் விரைந்து குணமாக இதில் உள்ள இரும்புச் சத்து உதவும். இந்த இரும்புச் சத்து எளிதில் உடலால் உறிஞ்சப்படத் தேவையான அளவு வைட்டமின் சியும் கீரையில் உள்ளதே இதற்குக் காரணம். ரத்த சோகை யைக் குணமாக்கும் மிகச் சிறந்த உணவு பசலைக் கீரை.

எனவே, தினம் சமைத்த பசலைக் கீரையை கிண்ணம் அளவு உணவில் சேர்த்து வாருங்கள். பச்சடியாகவும் சாப்பிடலாம்.





ஆண்மைக் குறைவு அகலும்; உடல் பருமன் குறையும் 

பசலைக் கீரையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு பிரச்னை உறுதியாகக் குணமாகும்.

காரணம், இக் கீரையில் ஆர்ஜினைன் என்ற அமினோ அமிலம் தாராளமாக இருக்கிறது. இது ஆண்மைக் குறைவை குணமாக்குகிறது. இத்துடன் உடல் பருமனையும் குறைக்கிறது. உடலில் கொழுப்பு சேமிப்பாகாமல் ஆர்ஜினைன் கரைத்து விடுகிறது. எனவே, உடல் 'வில்'கென்று மாறுகிறது. மேலும் கொழுப்பைக் கரைக்கும் கால்யெமும் தாராளமாக இருப்பதால் உறுதியாக உடல் பருமன் குறையும். அழகான தோற்றத்தைப் பராமரிக்க பெண்களும் பசலைக் கீரையை நன்கு பயன்படுத்தவும்.


நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும், உற்சாகமாக வாழவும்...

இக் கீரையை முடிந்தவரை பச்சையாகவே சாப்பிடுவது நல்லது. இதனால் எளிதில் ஜீரணமாகும். ஆக்ஸாலிக் அமிலமும் உடலில் அதிகம் சோது.

பசலைக் கீரையை முதலில் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். அதில் தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம், கேரட் ஆகியவற்றின் துண்டு களையும் இட வேண்டும். இந்தக் கலவையில் ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவும் எலுமிச்சம் பழச்சாறு ஒரு தேக்கரண்டியும் சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கிச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை, இதய நோய், பசியின்மை, சீதள பேதி என அனைத்தும் குணமாகும். இந்த சாலட்டால் உடலுக்கு நன்கு இரும்புச் சத்தும் கிடைக்கும்.

கீரையை லேசாக அவிய வைத்துச் சாப்பிட்டாலும் ஆக்ஸாலிக் அமிலமும் உடலில் குறைவாகவே சேரும்.

பாசிப் பருப்பு சேர்த்து பச்சடியாகச் சாப்பிட்டு வந்தால் வாந்தி, நீரடைப்பு, பசியின்மை, ருசியின்மை, மூத்திரக் கடுப்பு, மலச் சிக்கல் முதலிய பிரச்னைகளும் எளிதில் குணமாகின்றன.

பசலைக் கீரையை வாரத்திற்கு நான்கு வேனைகள் மட்டும் சாப்பிடு கிறவர்கள் கூட நல்ல ரத்தத்தைப் பெற்று நோய் எதிர்ப்புச் சக்தியுடன் உற்சாகத்துடன் வாழ்கின்றனர். காரணம், பசலைக் கீரையில் மனத்திற்கு உற்சாகம் ஊட்டும் 'டிரைப்டோபன்' என்ற அமினோ அமிலமும்,செலினியம் உப்பும் உள்ளன. இவை இரண்டும் சிறிதளவே இருந் தாலும் உற்சாகத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன.


நீரிழிவு

இரண்டொரு நாள்கள் பாசிப் பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தாலே போதும் இந்த உண்மைகளை நாம் மனதார உணர முடியும். சாப்பாட்டில் பசலைக் கீரையை சேர்த்துக்கொள்வதால் உடலில் வெப்ப மும், பித்தக் கோளாறும் குணமாகும்.

கீரையின் இளந் தண்டுகளையும் பச்சையாகச் சாப்பிடலாம். தண்டை யும் சாறாகத் தயாரித்து அருந்தலாம். தண்டின் சாறும் உடலுக்குச் சத்துணவாகவும்,இன்றியமையாத மருந்தாகவும் செயல்படும்.

தோல் நோயாளிகள் இக் கீரையைச் சாறாக அருந்தி வந்தால் விரைவில் குணமாவார்கள். கீரையில் உள்ள மாங்கனீஸ் உப்பு, நீரிழிவு நோயைக் குணமாக்குகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகளும் முகத்தில் பருக்கள் உள்ள பெண்களும் தினசரி 50 கிராம் கீரையைச் சாறாக மாற்றி வடிகட்டி அருந்தி வரவும். ரத்த சோகையையும் இந்தச் சாறு எளிதில் குணப்படுத்தும்.

தினமும் காலை 11 மணிக்கு மிளகு சேர்த்த பசலைக் கீரை சூப்பைத் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் சூடாக அருந்தி வந்தால் மேற்கண்ட நன்மைகளுடன் உடல் பருமனும் விரைந்து குணமாகும்.

இடுப்பு வலி, முதுகு வலி போன்றவற்றால் அவதிப்படும் ஆண்களும் பெண்களும் மிளகு சேர்த்த பசலைக் கீரை சூப் அருந்தி வருவது நல்லது. இதனால் மருத்துவச் செலவு இன்றியே வலிகள் பறந்து போய் விடும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிட பொரியலாகத் தண்ணீர் ஊற்றாமல் சமைக்க

வேண்டும். இப்பொரியலை உண்பதால் இருமலும் சளியும் குணமாகும். பசியின்மை நீங்கும்.


காது நன்கு கேட்க உதவும் பசலைக் கீரை

வயதாக வயதாக காது கேட்காமல் போவதைத் தடுப்பது பசலைக் கீரைதான் என்று கண்டுபிடித்துள்ளனர். கலிபோர்னியா (அமெரிக்கா) மாநிலத்தில் 26 ஆயிரம் ஆண்களைப் பரிசோதித்தபோது பசலைக் கீரையை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வந்தவர்களின் ரத்தத்தில் ஃபோலிக் அமிலம் தாராளமாக இருந்தவர்களுக்கு காது கேட்கும் தன்மை - அதாவது சரியாகக் கேட்காதது 20% மட்டுமே இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

புராக்கோலி என்னும் பச்சை நிறக் கோஸை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வந்தவர்களுக்கு காது கேட்கும் திறன் குறைவாக இருந்தது. காரணம், புராக்கோலியில் உள்ளதை விட இரு மடங்கு அதிசுமாக ஃபோலிக் அமிலம் பசலைக் கீரையில் இருப்பதே!

எனவே, சிறிது சாப்பிட்டாலும் ஃபோலிக் அமிலம் ரத்தத்தில் உயர்ந்து
விடும். மன இறுக்கத்தை அகற்றி மகிழ்ச்சியாக வாழ வைப்பதும் ஃபோலிக் அமிலத்தின் குணங்களே, 

பசலைக் கீரையுடன் தயிர், ஆரஞ்சு சாறு, புராக்கோலி ஆகியவற்றைச் சாப்பிடுவதும் நல்லதே. இவற்றிலும் ஃபோலிக் அமிலம் இருக்கிறது,
ஆனால், பசலைக் கீரையில் தாராளமாக இருக்கிறது.


ஆரோக்கியமான குழந்தை பெற...

கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் பசலைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். தினமும் ஒரு வேளை சமைத்த கீரையை ஒரு கிண்ணம் அளவு சாப்பிட்டு வந்தால் கூடப் போதும்.

காரணம், பசலைக் கீரையில் தாராளமாக உள்ள ஃபோலிக் அமிலம் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவும். குழந்தை, பிறவிக் குறைபாடு மற்றும் முதுகுக் கோளாறு இன்றி ஆரோக்கியமாகப் பிறக்கும்.

கால்சியம், இரும்பு தாது உப்புகளுடன் ஃபோலிக் அமிலமும் நன்குசேர்ந்தால்தான் ஆரோக்கியமான குழந்தை உறுதியாகப் பிறக்கும். இந்தமூன்று சத்துகளும் பசலைக் கீரையில் தாராளமாக உள்ளன. குறிப்பாக,

கர்ப்பிணிகள் ரத்த சோகையில்லாமல் நலமாக வாழ இரும்புச் சத்தும்உள்ளது.

கரு கலைந்து விடுவதையும் ஃபோலிக் அமிலம் தடுத்து விடுகிறது. தினமும் பசலைக் கீரை சூப் அல்லது பொரியல், பச்சடி என்று சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் களைப்பு, எடை குறைதல், மூச்சு விடச் சிரமம் போன்றவையும் தவிர்க்கப்படுகின்றன.

குழந்தை பிறந்த பிறகும் பசுவைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வரவும், காரணம், தரமான தாய்ப் பாலை, பற்றாக்குறை இன்றி குழந்தைக்குத் தர முடியும். கீரையில் உள்ள இரும்புச் சத்தால் குழந்தைக்குத் தடையின்றி பால் கிடைக்கும்.

பசலைக் கீரையுடன் சேர்க்கப்படும் பாசிப் பருப்பிலும் சாதத்திலும்சேர்க்கப்படும் நல்லெண்ணெயிலும் ஃபோலிக் அமிலம் தாராளமாகஇருக்கிறது. தாய்ப் பால் உற்பத்தி நாராளமாக இருக்க மதியம் 6 மீல்மேக்கர் உருண்டைகளை பசலைக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிடவும். சோயாவில் தயாராகும் மீல் மேக்கர் உருண்டையில் இரும்புச் சத்து தாராளமாக இருக்கிறது.

ஞாபக மறதியுடன் எப்போதும் சோம்பலாகவே காணப்படும் ஆணும் பெண்ணும் மதிய உணவில் சாதத்தில் இரண்டு தேக்கரண்டி நல்லெண் ணையும் சேர்த்துப் பிசைந்து சாப்பிடவும். இத்துடன் பாசிப் பருப்பு சேர்த்த பசலைக் கீரைப் பொரியலையும் சேர்த்துச் சாப்பிட்டு வரவும். இதனால் உடலும் உள்ளமும் புதுப்பிக்கப்படும். அந்த அளவிற்கு மேற்கண்ட மூன்று உணவுகளின் மூலம் ஃபோலிக் அமிலம் தாராளமாக உடலுக்குக் கிடைத்து விடும்.


பாடகர்கள் இனிமையான குரல் வளத்தைப் பெற...

தினசரி ஒரு வேளை பசலைக் கீரையை சூப்பாகவோ, பொரியலாகவோ சாப்பிட்டு வரவும். தொண்டைக் கூட்டு இன்றி நீண்ட நேரம் பாடலாம்.


நோய் எதிர்ப்புச் சக்தி

துத்தநாக உப்பு தாராளமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக் கும். கால்சியம், மக்னீசியம் ஆகிய தாது உப்புகளுடன் இணைந்து வைட்டமின் கே செயல்படுவதால் பெண்களுக்கு ஆஸ்டியோ போரோ சிஸ் என்ற எலும்பு மெலிவு நோய் வராமல் தடுக்கப்படும்.

13 விதமான ஃபிளவோரையிடுகள் பசலைக் கீரையில் உள்ளன. இந்த 13ம் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளாகும்.எனவே, பக்க வாதம் முற்றிலும் தடுக்கப்படுகிறது. உடல் தோலும் பளபளப்பாக இளமைத் துடிப்புடன் மாறுகின்றன. இரவு நேரத்தில் பார்வைத் திறன் மிகவும் தெளிவாக இருக்கும்.

இவ்வளவு நன்மைகள் தந்து கீரை வகைகளுள் முதலிடத்திலிருக்கும் பசலைக் கீரையின் தாயகம் தென் மேற்கு ஆசியாதான். அங்கிருந்த அரேபியர்கள் இதை உணவுப் பயிராக முதலில் பயிர் செய்தார்கள்.

பெர்சியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பயிரிட்டு மருந்துப் பொருளாகப் பயன்படுத்தினார்கள். பசலைக் கீரையை அரைத்துக் கொப்புளம், வீக்கம் முதலியவற்றில் பற்றாக இட்டால் அவை குணமாகின்றன. இதைப் பெர்சியர்கள்தான் முதலில் அறிமுகம் படுத்தினர்.

மேற்கு ஆசியாவில் இருந்த மூர் இன மக்களாலும் கறுப்பர் இ மக்களாலும் இந்தக் கீரை ஸ்பெயின் நாட்டிற்குக் கொண்டு வர பட்டது. ஸ்பெயினிலிருந்து உலகம் முழுவதும் இக்கீரை பரவுவிட்டது. அதனால்தான் SPAINயிலிருந்து வந்ததால் SPINACH என்று இக் கீரைக்குப் பெயர் வைத்தனர். உண்மையில் இது ஸ்பானிஷ் மொழி வார்த்தையே!

ஊட்டச் சத்துடன் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் குணங்களும் நிரம்பி வழியும் இக் கீரையை அனைவரும் சாப்பிடலாம்.

இருப்பினும், கடுமையான சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் கோளாறு கள் ஆகியன உள்ளவர்கள் இக் கீரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அல்லது உங்களின் மருத்துவர், ஊட்டச் சத்து நிபுணர் ஆகியோரின்

ஆலோசனையைப் பெற்று பசலைக் கீரையை உண்ணலாம்.






🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog