💧உறக்கம் 💧




இப்பொழுது ஒரு பத்து விதைகளை போட்டு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள் .ஒரு மண் ;ஒரே தண்ணீர். ஆனால் ,அந்த பத்து விதைகளும் விதைகளே இருக்கக் கூடிய தன்மை தக்கவாறு இந்த தண்ணீரையும் இந்த மண்ணிலிருந்து அவை எடுக்க வேண்டிய அணுக்களையும் எடுத்துக்கொண்டு, வேப்பம் விதை என்றால் வேப்பம் செடியை தான் முளைக்கும் .  கரும்பு என்றால் கரும்பு தான் வரும் .மாங்காய் என்றால் மாங்காய் தான் வரும்.


குறிப்பு படத்துக்கு கீழ் இன்றும் விளக்கம் உள்ளன.


அதுபோலவே நமது உடலிலும,் உயிர் சக்தியை எடுத்துக் கொண்டு சேமிக்கவும் ,செலவிடவும் செய்கிறது .வரவு ,செலவு இரண்டும் மத்தியிலே இருப்பு ஒன்று எப்போதும் இருக்கும் .அந்த இருப்பு மிகவும் குறைவாக போய்விட்டால் சோர்வு வரும் .நோய் கூட வரும் . நாள் முழுவதும் நாம் ஏதாவது பணி செய்து கொண்டிருப்பதால், மாலை நேரமானால் அந்த இருப்பு ஸ்டாக் குறைந்திருக்கும் , பொதுவாக அந்த இருப்பை அதிகரிக்கச் செய்ய செய்வதற்குத்தான் உறக்கம் வருகிறது .உறங்கும்போது என்ன நிலைமை என்றால் மன இயக்கம் இல்லை ; உடலில் இயக்கம் மத்திரம்  நடக்கிறது . இரண்டிலே ஒரு இயக்கம் தவிர்க்கப்படுவதால் உயர் சக்தி சேமிக்கப்படுகிறது .காலையில் அந்த சேமிப்பு சரியான இடத்தில் என்று வருகிற போது அதனுடைய திணிவு ,அதாவது அழுத்தம் போதிய அளவு வந்துவிட்டதனால் ;நரம்பு மண்டலத்திற்கு இயல்பான தொடர்பு மீண்டும் வந்து விடுகிறது .நாம் கண் விழித்து  எழுகிறோம்


பெரியவன் அங்கே இருக்கின்றான் ;எங்கும் நிறைந்த ஒரு சக்தியாக இருந்து கொண்டு காலத்தாலே இணைப்பை துண்டித்து disconnect காலத்தாலே மீண்டும் இணைப்பு reconnect ஏன் ஏற்படுகின்றன.கூலி மட்டும் நாம் கொடுக்கிறதே இல்லை .இம்மாதிரி ஒரு சக்தி இப்படி இருந்து கொண்டு என் உடல்நிலை இத்தனை வேலையும் செய்து கொண்டு இருக்கிறது என்பதை நினைத்தாலே போதும் . அதற்கப்புறம் அந்த நினைவுக்குள்ளாகவே ஓடி அவன் வந்து" நீயே தான்  நானாக இருக்கிறேன் ; நானே தான் நீயாக இருக்கிறாய் "என்று சொல்வான்.


🌷ஆயிரம் கோடி நமஸ்காரம் அருள் தந்தைக்கே


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏



Comments

Popular posts from this blog