🌎"விக்னம்"என்ற வடமொழிச்சொல்லுக்கு தடை என்றும் இன்னல்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.🌏





👍அன்பு முகநூல் நண்பர்களே 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

https://www.facebook.com/om14422019/

விக்னங்களை தீர்த்து அருள் புரிபவன் விக்னேஸ்வரன் அந்த விக்னேஸ்வரனின் வசியம் செய்யும் ஒரு முத்திரையைப் விக்னமுத்திரையாகும்.

எந்த ஒரு புதிய காரியத்தையும் பிள்ளையார் சுழி போட்டு துவங்குவது இந்திய மரபு ஒரு புது வீட்டுக்கு குடி போகும் போது கூட கணபதி ஹோமம் செய்து விட்டு தான் போகிறோம் இல்லையா

விக்னேஸ்வரனை வழிபட்டு துவங்கும் எந்த முயற்சியாக இருந்தாலும் அது நல்லபடியாக நடக்கும் விக்னங்கள் வருவது என்பது ஐதீகம்.

நீங்கள் எந்த ஒரு புது முயற்சியை துவங்குவதாக இருந்தாலும் உதாரணமாக

🔔புது தொழில் துவங்குதல்
🔔புதிய படிப்பில் சேருதல்
🔔வீடு மனை வாங்குதல்
🔔வீடுகட்ட துவங்குதல்

போன்ற எந்த புது முயற்சியில் ஈடுபடுவதாக இருந்தாலும் குதிரையில் அமர்ந்து விக்னேஸ்வரனை தியானம் செய்து துவங்கினால் அந்த முயற்சி வெற்றி பெறும் விக்னங்கள் எதுவும் வராது!

            🔔🔔🔔செய்முறை.  🔔🔔🔔

☝ஐந்து விரல்களையும் மடித்து முஷ்டி உருவாக்குங்கள்
👆பெரு விரல் மோதிர விரலின் மேல் பதிந்து இருக்கட்டும்
👋அழுத்தம் வேண்டாம் தொட்டுக் கொண்டிருந்தால் போதும்
👎நடு விரலை மட்டும் நிமிர் த்துங்கள்
👇நடுவிரல் பூமியை நோக்கி இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்.

      📣📣📣 குறிப்பு 📣📣📣📣

👏இது நாம் ஏற்கனவே கண்ட தந்த முத்திரை போலவே இருக்கும்.

👍தங்க முத்திரையில் நேராக நிற்கும் நடுவிரல் வானத்தை பார்த்தபடி இருக்க வேண்டும்.

👇Vighna முத்திரையில் நடுவிரல் பூமியை பார்த்தபடி இருக்க வேண்டும்.

   📱📱📱 அமரும் முறை 📲📲📲

💡நின்று கொண்டு செய்யலாம் கால் இரண்டையும் சற்று அகன்று இருக்க முதுகு கழுத்து வளைவின்றி நேராக இருக்கும்படி நின்றபடி இந்த முத்திரையை செய்யுங்கள்.

💿தியானம் செய்வதாக இருந்தால் அமர்ந்து செய்யவும்.

🎥 பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம் ஏ சிறப்பு.

🏮ஆசனங்களில் பரிசுத்தம் இல்லாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்து யோகாசனம் செய்யலாம்.

📕நின்று கொண்டு கால்களை சம்மணமிட்டு அமர்ந்து செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம் பாதங்கள் இரண்டும் தரையில் பதிந்திருக்க வேண்டும

👆எந்த நிலையிலும் செய்தாலும் கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும்

✌மனம் முழுமையாக முத்திரையின் மீது குவிந்திருக்க வேண்டும்.

✋இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் முத்திரையைச் செய்ய வேண்டாம்.
       
            📑📑📑 சுவாசம் 💰💰💰

இயல்பான நடையில் சுவாசம் இருக்கட்டும்

 ஆழமாகவும் சீராகவும் இருப்பது அவசியம்

கும்பகம் வேண்டாம்

      📮📮📮 எவ்வளவு நேரம்? 🔘🔘🔘

வழிபாடு அல்லது தியானம் முடியும் வரையில்.
குறைந்த பட்சம் 8 நிமிடங்கள்
அதிக பட்சமாக 48 நிமிடங்கள்.

                 🎦🎦🎦பலன்கள் ⏪⏪⏪

எந்த புதிய முயற்சியை துவங்குவதாக இருந்தாலும் அதை துவங்கும் முன்னர் இந்த விக்னமுத்திரையை செய்து விட்டு தூங்குவதனால் முயற்சிகள் தடைகள் விக்னங்கள்  எதுவும் வராது நல்லபடியாக நடக்கும்.

ஏற்கனவே நீங்கள் ஆரம்பித்த முயற்சிகள் தடைகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் அந்த தடைகள் அனைத்தும் மறைந்து போகும்.

👇நாம் அடுத்து காண இருக்கும் முத்திரை பரசு முத்திரை ☝

நன்றி மிர்த்திகா

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

x

Comments

Popular posts from this blog